eramana rojave

கர்ப்பமாக இருப்பதை மறைக்கும் காவியா.? விரைவில் பிரிய வேண்டும் என கூறும் பார்த்திபன்.. ரம்யா சொன்னதை ஜீவாவிடம் போட்டு உடைத்த பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிரியா ஜீவாவின் வீட்டில் ஒரு வழியாக தாங்க சமாதித்திருக்கிறார். ஜீவா காவியாவை காதலித்ததை தன்னிடம் மறைத்து விட்டதால் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.

ஜீவா எப்படியாவது பிரியாவின் மனதை மாற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என பல முயற்சிகளை செய்தும் அதில் தோல்வி அடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் பிரியா பங்குப் பெற்ற நிலையில் அப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் அவரைப் போக வேண்டாம் என தடுத்தனர்.

ஜீவாவும் அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் அதேபோல் எனது தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்க பிரியா வீட்டில் இருக்க சம்மதித்து இதற்கு மேல் ஜீவா சின்ன தப்பு செய்தாலும் நான் விவாகரத்து செய்துவிட்டு கிளம்பி விடுவேன் என கூறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரம்யா பிரியாவை கூப்பிட்டு ஆசை ஆசையாய் காதலித்த ஜீவாவும் காவியாவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பிறகு எப்படி எல்லாம் வாழ வேண்டும் என பேசி இருப்பார்கள் இப்படிப்பட்ட நிலையில் நான்கு பேரும் மாறி மாறி திருமணம் செய்து கொண்டீர்கள் தற்பொழுது நான்கு பேரும் பிரிந்து வாழ்ந்து மகிழ்ச்சியாக இல்லை அனைவர் முன்பும் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறீர்கள் என கூறி பிரியாவை கோபப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்த்திபன் காவியாவிடம் நீ சீக்கிரம் ஐஏஎஸ் பாஸ் பண்ண வேண்டும் அப்புறம் தான் நாம தனித்தனியா பிரிஞ்சு வாழலாம் நீ ஏன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என நான் நினைக்கிறேன் தெரியுமா அதன் பிறகு நீ உங்களால்தான் என்னுடைய கெரியர் போய்விட்டதாக கூறக்கூடாது என்பதற்காக தான் என்ன சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியாவிற்கு வாந்தி வர காவியா நான் கன்சிவா இருக்கிற விஷயத்தை இப்போது சொல்ல மாட்டேன் என்னுடைய பழைய பார்த்தியை பார்க்கும் பொழுது தான் சொல்லுவேன் நீங்க எப்பொழுது மாறுவீங்களோ என மனதிற்குள் நினைக்கிறார். பிறகு ஏன் ஒரு வாரமாக உனக்கு வாந்தி வருது இப்பெல்லாம் டயர்டா இருக்க நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம் எனக் கூற  காவியா முடியாது எனக்கு ஏன் வாந்தி வருது என தெரியும் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன் அது ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு என சொல்கிறார். உனக்கு தான் ஹோட்டல்ல சாப்பிடுறது ஒத்துக்கொள்ள ஏன் சாப்பிடுற எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் ஜீவா கேம் விளையாண்டு கொண்டிருக்க இந்த நேரத்தில் பிரியா வர உங்களுக்கு இதுதான் முக்கியமா உலகத்தில் எவ்வளவு பிரச்சனை இருக்கு என கூற அதற்கு ஜீவா ஏன் வந்ததும் சுடுதண்ணி ஊத்தினது போல் கத்துருங்க என சொல்ல அதற்கு ரம்யா தன்னிடம் கூறிய அனைத்தையும் ஜீவாவிடம் கூறுகிறார்.

eramana rojave 2

மீண்டும் ஜீவாவுடன் வாழ ஒப்புக்கொண்ட பிரியா.! ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கே..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எடுத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2. ஜீவா காவியா காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிறகு அனைத்து உண்மையும் தெரிய வருகிறது.

எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரியா ஜீவா தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் தனது அம்மா வீட்டில் தங்கி வரும் நிலையில் பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக அவரும் பிரியாவின் வீட்டில் தங்கி வருகிறார்.

ஜீவாவின் அப்பா பிரியாவை அழைத்துக் கொண்டுதான் வீட்டிற்கு வரவேண்டும் என கூறிய நிலையில் எனவே தனது அப்பாவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிரியாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ஆனால் பிரியா தொடர்ந்து ஜீவாவின் மீது பழியை சுமத்தி வருகிறார்.

அந்த வகையில் ஒரு முறை ஜீவா தனது மாமனாருடன் இணைந்து குடித்துக் கொண்டிருக்க திடீரென பிரியா மற்றும் அவருடைய அம்மா வீட்டிற்கு வருவதாக சொல்கின்றனர் எனவே இவர்கள் வருவதற்குள் சரக்கை ஜீவா தனது ரூமில் ஒலிய வைக்கிறார் அதனை தெரியாத தனமாக எடுத்து குடித்து விடுகிறார் பிரியா.

இவ்வாறு நடந்த நிலையில் ஜீவா வேண்டும் என்றே  தன்னை சரக்கு அடிக்க வைத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுகிறார் இவ்வாறு இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் ஜீவா தொடர்ந்து காவியாவின் மேல் பாசம் இருப்பது போலவே நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர்களுக்கு தாலி கோர்க்கும் பங்க்ஷன் நடைபெறுகிறது பார்த்திபன் காவியா தாலி கோர்க்கும் பங்க்ஷன் முடிந்தவுடன் பிரியா பையை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார். உடனே ஜீவாவின் அப்பா இவ்வாறு நீ வீட்டை விட்டு கிளம்புவது எங்களுக்கு பிடிக்கவில்லை என கூற ஜீவா அதற்கு அனைத்து குற்றவாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் எனவே தனக்கும் அது போன்று ஒரு வாய்ப்பை தர வேண்டும் என கேட்க அதற்கு பிரியா தருவதாக கூறுகிறார். மேலும் ஜீவா இதற்கு மேல் சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதோடு மட்டுமல்லாமல் விவாகரத்தும் செய்து விடுவதாக கூற இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

eramana-rojave-2

ஏய், காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள்ள நீ வராத என எச்சரித்த ஜீவா.! அசிங்கப்படும் தங்கச்சிக்கு ஆதரவாக பேசாத பிரியா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருவதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் தங்களுக்கு பார்த்திருந்த அக்கா, தங்கை மணப்பெண்களை மாத்தி மாத்தி திருமணம் செய்து கொண்ட நிலையில் குடும்பமே குழப்பத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் ஜீவா, காவியா இருவரும் காதலித்தது பார்த்திபன் பிரியாவிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் பார்த்திபனை காவியா ஏத்துக்கொண்டார் ஆனால் காவியாவை பிரிய வேண்டும் என பார்த்திபன் முடிவெடுத்த நிலையில் பிறகு விவாகரத்து வரை சென்றார்கள். ஆனால் அனைத்தையும் தாண்டி இவர்களுக்கு மீண்டும் திருமணம் நடக்கப்பட்டது.

இந்த நேரத்தில் பார்த்திபனின் அத்தை எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தனது பெண்ணுடன் பார்த்திபனுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக ஜீவா காவியா காதலித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போட்டு காண்பித்தார்கள். எனவே இதனால் பார்த்திபன், பிரியா இருவருக்கும் இவர்கள் காதலித்து பெரிய வந்த நிலையில் பிரியா சுக்கு நூறாக உடைந்துவிட்டார்.

ஆனால் பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் அனைவர் மத்தியிலும் நடித்துவிட்டு ஆனால் மனசார இதுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை அனைவருக்கும் முன்பும் காவியாவை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வருகிறார். பிரியா, ஜீவாவை வேண்டாம் என கூறிவிட்டு தனது வீட்டிலிருந்து வரும் நிலையில் எப்படியாவது பிரியாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக ஜீவா பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அதற்காக பிரியாவின் வீட்டிற்கு முன்பு டெண்டு ஒன்றை போட்டு தங்கி இருக்கிறார் இப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மழை அதிகமாக பெய்ததால் ஜீவாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. எனவே ஜீவா ஆவி பிடித்துக் கொண்டிருக்க இதனை பார்த்த ப்ரியா நீங்கள் என்னதான் செய்தாலும் என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் மாறினாலும் நான் மாற மாட்டேன் என சொல்கிறார்.

இந்த நேரத்தில் காவியா வந்து பிரியாவிடம் ஜீவா தான் அனைத்திருக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டார்ல ஏன் ஏத்துக்க மாட்டேங்குற என கேட்க அதற்கு ஜீவா ஏய் காவியா இது புருஷன் பொண்டாட்டி சண்டை எங்களுக்குள் நீ வராத என எச்சரிக்க இதற்கு பிரியா எதுவும் பேசாமல் அமைதியாகிறார்.