அடக்கொடுமைய எதிர்நீச்சல் சீரியல் போல் பாதி கிணற்றில் தத்தளிக்கும் ஈரமான ரோஜாவே 2.!

eeramana rojave 2 : விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அதற்கு காரணம் ப்ரியா ஜீவா கதாபாத்திரமும் பார்த்திபன் காவியா கதாபாத்திரமும் தான்.

இந்த சீரியலில் இரண்டு ஜோடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் இவர்களை வைத்துதான் கதை  நகர்ந்து வருகிறது ஈரமான ரோஜாவே சீரியலை முதலில் வழிநடத்தி வந்த தலைசிறந்த இயக்குனர் தாய் செல்வம் கடந்த ஆண்டு காலமானார்.

அவரை தொடர்ந்து ராஜா சுந்தரம் என்பவரை வைத்து சீரியலை இயக்கி வந்தார்கள் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஈரமான ரோஜாவே இரண்டாவது சீசனில் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இயக்குனர் ராஜாசுந்தரம் சீரியலில் இருந்து அதிரடியாக விளக்கியுள்ளார் அதனை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கு பிறகு புதிய இயக்குனரை வைத்து சீரியலை இயக்க இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஈரமான ரோஜாவே 2 சீரியலை எந்த புதிய இயக்குனர் இயக்க போகிறார் என இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து இறந்ததிலிருந்து சீரியல் குழு தத்தளித்துக் கொண்டிருக்கிறது அந்த நிலைமை தற்பொழுது ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர்களுக்கும் வந்துள்ளது.