ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி விஜயாவிடம் முத்து ஆட்டோ ஓட்டுகிறார் காரை விற்று விட்டார் என்பதை கூறுகிறார் உடனே இந்த வீட்டை அடமானம் வைத்துதானே கார் வாங்கி கொடுத்தீங்க அதை வித்தது உங்களிடம் சொன்னாங்களா என ஏற்றி விடுகிறார் உடனே விஜயா இதைக் கேட்க வேண்டிய ஆள் கேட்டா தான் உண்மைதானா வரும் என அண்ணாமலை இடம் விஜயா சென்று முத்து செய்கிற வேலை உங்களுக்கு தெரியுமா என கேட்கிறார்.

முத்து நம்ம யார்கிட்டயும் சொல்லாம காரை வித்துட்டு ஆட்டோ ஓட்டுறான் அது உங்களுக்கு தெரியுமா என பேசிக் கொண்டிருக்கிறார் என்ன சொல்ற என அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து கேட்கிறார் இந்த நிலையில் மீனா பூ வாங்க பூ கடைக்கு செல்கிறார் அப்பொழுது ஒரு பாட்டி வயதான பாட்டி நிற்கிறார் அவரிடம் என்னாச்சு பாட்டி நான் வேணா ஆட்டோ புடிச்சு வரட்டுமா என கேட்க இல்ல ஒரு தம்பி நல்ல தம்பி என்கிட்ட காசு கூட வாங்கல கொண்டு வந்து விட்டார் திரும்ப அழைத்துகிட்டு போறேன்னு சொன்னாரு அதனாலதான் நிக்கிறேன் பேசுகிறார்.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

அந்த தம்பி வேறு யாரும் கிடையாது முத்து தான் முத்து ஆட்டோவில் அந்த பாட்டியை ஏற்றிக் கொண்டு போறதை மீனா பார்த்து விடுகிறார். உடனே மீனா வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது விஜயா உன் புருஷன் ஆட்டோ ஓட்டுவது உனக்கு தெரிஞ்சி தான் நடந்திருக்கும் அந்த பணத்தை என்ன பண்ணுனீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

உடனே முத்துவும் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது முத்துவை உட்கார வைத்து எதற்காக காரை விற்றாய் என அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் உடனே அண்ணாமலை இடம் முத்து அதை சொல்லணும்னு நினைச்சா முன்னாடியே சொல்லி இருப்பேன் பா நீங்க வருத்தப்படுவீங்க நீங்க கஷ்டப்படுவீங்கன்னு தான் நான் சொல்லல என பேசுகிறார். உடனே ரோகினி அன்னைக்கு மனோஜ் வேலைக்கு போகாத படம் போட்டு காட்டினார் முத்து இப்ப மட்டும்  இவருக்கு ஒரு நியாயமா என்ன பேசுகிறார்.

ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவை தடுக்க கோபி செய்த சதி!! சூழ்ச்சியிலிருந்து வெல்வாரா பாக்யா.. விறுவிறுப்பான திருப்புங்களுடன் பாக்கியலட்சுமி…

உடனே ஸ்ருதியும் ஆமாம் எனக் கூற எனக்குன்னு ஒரு வேலையாவது இருக்கு மனோஜ் மாதிரி வேலை இல்லாம பொண்டாட்டிய நான் ஏமாத்தல என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் நான் இந்த பணத்தை கொடுக்கிறேன் 27 லட்சத்தை தூக்கிட்டு போனானே அந்த பனத்தை திருப்பி கொடுக்க சொல்லு நான் உடனே செட்டில்மெண்ட் பண்றேன் என முத்து கூறுகிறார்.

இதைக் கேட்டவுடன் மனோஜ் எனக்கு வேலை இருக்கு எனக் கிளம்புகிறார். அடுத்த காட்சியில் மீனா முத்துவிடம் கார் எதற்கு விற்றிர்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு அதை சொன்ன தாங்க மாட்ட என மனசுக்குள் சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் என்னை எவ்வளவு கேள்வி கேட்கிறாயே உன் தம்பி தருதலையா சுத்திட்டு இருக்கானே அவனை என்னைக்காவது ஒரு கேள்வி கேட்டு இருக்கியா அப்படி கேள்வி கேட்டிருந்தா அவன் தருதலையா சுத்துவான என பேசுகிறார்.

வந்தா நகையோட தான் வருவேன் என திருச்சிக்கு சென்ற ராஜி! ராஜியை தேடும் குடும்பம்!! பரபரப்பான திருப்பங்களுடன்..

காரை ஏன் வித்திங்கன்னு கேட்டா எதற்கு அவனை பத்தி பேசுறீங்க என மீனா கேட்க அவனால் தானே இவ்வளவு பிரச்சனையும் என பேசுகிறார். உடனே மீனா கார் செட்டுக்கு சென்று செல்வதிடம் அனைத்து உண்மையையும் தெரிந்து கொண்டு சிட்டியை நோக்கி போகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.