வந்தா நகையோட தான் வருவேன் என திருச்சிக்கு சென்ற ராஜி! ராஜியை தேடும் குடும்பம்!! பரபரப்பான திருப்பங்களுடன்..

பாண்டியன் ஸ்டோர் இந்த வார பிரமோவில் ராஜி காலேஜுக்கு போவதாக சொல்லிவிட்டு பிரண்டுடன் கண்ணனை தேடி செல்கிறாள். கண்ணன் ராஜியிடம் இருந்து திருடி சென்ற நகை பணத்தை எப்படியாவது மீட்டு எடுத்து வர வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்படுகிறார்.

பணம் நகைக்காக தான் ராஜி அண்ணன் குமரவேல் கதிரை அடித்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் ராஜியின் அப்பா பாண்டியனும் நகை பணத்தை கதிர் கொடுக்கவில்லை என கோபத்தில் இருக்கிறார் எனவே இதை மீட்டு கொடுத்து விட்டால் பாதி பிரச்சனை சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் ராஜி கண்ணனை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார்.

சிட்டியை மிரட்டும் மீனா.. சத்யாவை வைத்து முத்து மீனாவை பிரிக்க பார்க்கும் சிட்டி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

ஆனால் அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு இருக்கிறது. பக்கத்தில் விசாரித்ததற்கு கண்ணன் அவரது நண்பர் வீட்டில் திருச்சியில் இருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்ததும் திருச்சிக்கு தோழியுடன் ராஜி சென்று விடுகிறார்.

அங்கும் கண்ணன் இல்லை மேலும் விசாரிக்கும் போது அவரது நண்பர் கண்ணன் துபாய்க்கு போவதாக சொன்னான் என கூறுகிறார். அதைக் கேட்ட ராஜி இப்ப நான் என்ன செய்வேன் என கதறி அழுகிறார் நான் இன்னைக்கு நகை இல்லாம வீட்டுக்கு போக மாட்டேன் என ரோட்டிலேயே நடந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் காணாமல் போன ஸ்ரீகாந்த் இத்தனை திரைப்படங்களை தவற விட்டுள்ளாரா.! அட ஒவ்வொரு திரைப்படமும் மரண ஹிட் ஆச்செ

அதே சமயத்தில் வீட்டில் கோமதி இன்னும் ராஜி வரவில்லை என கதிரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது  கோமதியின் தம்பி கதிரை பார்த்து  இவன் தான்  எப்ப பாத்தாலும் அவகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கானே இன்னைக்கு காலைல கூட சண்டை போட்டான் அதான் அவ கோவிச்சுக்கிட்டு எங்கேயோ போயிட்டா போல என கூறுகிறார்.

உடனே சரவணன் மற்றும் செந்தில் ஒரு வண்டியில் ரோடு ரோடு ஆக ராஜிய காணும் என தேடுகின்றனர். அதேபோல கதிரும் ரோட்டில் அலைந்து திரிந்து நடந்தபடியே தேடி செல்கிறார். அத்துடன் இந்த பிரமோ முடிவு அடைகிறது.

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்க ஆசையாக இருக்கு… பதம் பார்ப்பது குறித்து வெளிப்படையாக பேசிய பாக்கியலட்சுமி நடிகை…

ராஜி கதிருக்காக எப்படியாவது  இந்த நகை பணத்தை மீட்டு கொடுத்து குறைந்தபட்ச அவமானத்தில் இருந்தாவது காப்பாற்ற நினைக்கிறாள் நடக்குமா நடக்காதா என்பதை இந்த வாரம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.