முத்து ஃபோனை மீனா எடுத்ததால் வந்த பிரச்சனை.. மனோஜ் ரோகினிக்கு ஏற்பட்ட விரிசல்.. தலையை பிச்சுக் கொள்ளும் விஜயா..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேரும் மொட்டை மாடியில் தூங்குவதற்கு சென்று விடுகிறார்கள் அங்கு மூன்று பேரும் பேசிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் கீழே மீனா ரோஹினி, சுருதி மூன்று நபர்களும் டீ குடித்துக் கொண்டு லைபை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது ஆண்கள் கல்யாணத்திற்கு முன்பு வேறு மாதிரியும் கல்யாணத்துக்கு பிறகு வேறு மாதிரி இருக்கிறார்கள் எனக் கூற உடனே மீனா உங்களுக்காவது கல்யாணத்துக்கு முன்னாடி வேற மாதிரியும் கல்யாணத்துக்கு பிறகு என்று ஒன்னு இருக்கு ஆனா எனக்கு அப்படி கிடையாது எப்ப என்ன நடக்கும்னு தெரியல என பேசுகிறார். கல்யாணம் என்பது நம்ம கற்ற பூ மாலை மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா மணக்கும் அதுவே பிரிஞ்சிட்டா பூ மாதிரி வாடி போகும் வாழ்க்கை என பேசுகிறார்.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

அப்படி இருக்கும் நிலையில் ஒரே சிரிப்பு சத்தம் கேட்பதால் மூன்று பேரும் மொட்டை மாடிக்கு சென்று எட்டிப் பார்க்கிறார்கள் இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க என தூங்க சென்று விடுகிறார்கள். அடுத்த காட்சியில் அடுத்த நாள் அதிகாலையில் அண்ணாமலை உக்காந்து காபி குடித்து கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா மீனாவிடம் காபி கேட்க மீனா பூக்கடைக்கு போய்விட்டார் நீயே போய் காபி எடுத்துக் கொள்ள என அண்ணாமலை கூறுகிறார்.

இந்த நிலையில் மனோஜ் மேலே இருந்து பாய் படிக்கையுடன் கீழே வருகிறார் உடனே என்னாச்சு மனோஜ் ஏன் மேல போய் படுத்த என கேட்கிறார் உள்ளே சென்ற மனோஜ் ரோகினி இடம் பேச முயற்சி செய்கிறார் அப்பொழுது நான் செஞ்ச தவறுதான் என கூறுகிறார் உன் பேச்சை கேட்டுகிட்டு கெடச்ச வேலையை போய் பார்த்தேன் என் படிப்பை விட்டு விட்டு அதனாலதான் வந்த வினை என பேசுகிறார்.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

அதுமட்டுமில்லாமல் ஹோட்டலில் வெயிட்டர் வேலை பார்த்ததாகவும் கூறிவிடுகிறார் நான் உன்னை வெயிட்டர் வேலை பார்க்க சொல்லல ஏதாவது ஒரு வேலை தேடிக்கு ஒரு நல்ல வேலையா தேடிக்கொள்ளு தான் சொன்ன ஆனா நீ இப்படி போவேன்னு எனக்கு எப்படி தெரியும் என ரோகிணி பேச நான் இனிமே வேலைக்கு போக மாட்டேன் என் படிச்ச வேலை கிடைச்சா மட்டும் தான் போவேன் உனக்காக எல்லாம் போக முடியாது என எதிர்த்து பேசுகிறார்.

இந்த நிலையில் முத்து குளிக்க செல்வதற்கு முன்பு போனை பார்த்து கோபத்துடன் குளிக்க செல்கிறார் அதை பார்த்துக் கொண்டிருந்த மீனா உடனே முத்து போனை கையில் எடுக்கிறார் உடனே குடுகுடுன்னு ஓடி வந்து அடுத்தவங்க போனை கையில் எடுப்பது எவ்வளவு பெரிய தப்பு உன் போனை நான் என்னைக்காவது எடுத்து இருக்கனா என பேசுகிறார்.

அதேபோல் மற்றொரு பக்கம் ரவி மேலே இருந்து வந்து மீனாவிடம் விசாரித்துவிட்டு நான் போய் பார்க்கிறேன் என சுருதியை பார்க்க போகிறார் அப்பொழுது சுருதி டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார் இப்பதான் வந்தியா என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குனேன் நீ கட்டில்ல பாதி எடத்த அடச்சுப்ப ஆனா இன்னைக்கு எனக்கு முழுக்க முழுக்க நல்ல தூக்கம் என பேசுகிறார்.

முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..

அதேபோல் மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறார்கள் உங்கள் அம்மா லிமிட்டாக இருந்து கொள்ள வேண்டும் தேவையில்லாம நம்ம வாழ்க்கையில் சில சண்டை வருவதற்கு காரணமே பொண்ணுங்களோட அம்மா தான் என தென்னந்தலிவாக கூறுகிறார் ரவி.

உடனே ரவி மற்றும் சுருதி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் அதேபோல் விஜயா என்ன நடப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் அதனை அண்ணாமலையிடம் கூற அண்ணாமலை கண்டு கொள்வது போல் தெரியவில்லை. இத்துடன் எபிசோட் முடிகிறது.