கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

பாண்டியன் ஸ்டோர் இன்றைய ப்ரோமோவில் கதிரை குமரவேலுவின் ஆட்கள் ரோட்டில் மடக்கி பிடித்து பயங்கரமாக அடித்து விடுகின்றனர். அதோட மட்டுமில்லாமல் அடிக்கும் போது என் தங்கச்சியை கூட்டிட்டு போக உனக்கு எங்க இருந்துடா தைரியம் வந்தது, எங்க வீட்ல இருந்து எடுத்துட்டு போன நகை பணம் எங்கடா வச்சிருக்க என கேட்டு அடி பொளக்குகின்றனர்.

அடிபட்ட அவரை அவரது அண்ணன்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுட்டு குமரவேல் ஆள் வச்சி அடிச்சிட்டான் என கோமதி யிடம் கூறுகின்றனர். அதோட அழுதப்படியே கோமதி பாண்டியனிடம் பாருங்க நம்ம பையனை எப்படி அடிச்சிருக்காங்க என சொல்கிறாள். ஆனால் பாண்டியனோ அதனை கண்டு கொள்ளாமல் உனக்கு வேற வேலை இல்லையா என சொல்லிவிட்டு போகிறார்.

ரோகிணி தலையில் இடியை இறக்கிய மனோஜ்… விழுந்து விழுந்து சிரிக்கும் முத்து அண்ணாமலை..

உடனே  கோமதி கதிரிடம் உங்க அப்பா உன் மேல இவ்ளோ கோபமா இருப்பார்ன்னு நான் நினைச்சு கூட பாக்கல என சொல்கிறாள் . கதிர் வருத்தத்தில் ரூமுக்கு செல்கிறார் அப்போது ராஜி ரொம்ப வலிக்கிதா என கேட்கிறாள்.

அதற்கு கதிர் உங்க அண்ணா உன்ன கூட்டிட்டு போனதுக்காக என்ன அடிக்கல அந்த நகை பணம் எங்கன்னு கேட்டு தான் என்ன அடிச்சான் உங்க அண்ணனுக்கு உன் மேல கொஞ்சம் கூட பாசம் இல்ல, அந்த நகையால எல்லா முன்னாடியும் நான்தான் கெட்ட பேர் எடுத்து இருக்கேன் இது எல்லாமே உன்னால தாண்டி என கோபமாக பேசிவிட்டு போகிறார். ராஜி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே நிற்கிறாள் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..