ரோகிணி தலையில் இடியை இறக்கிய மனோஜ்… விழுந்து விழுந்து சிரிக்கும் முத்து அண்ணாமலை..

siragadikka aasai serial : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் முத்து மீனாவின் அப்பா தெவசத்திற்கு வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது ஆளாளுக்கு ஒன்று பேச முத்துவை அவமானப்படுத்துவது போல் பேசுகிறார்கள் அந்த சமயத்தில் சத்யா  சூடம் காட்ட கையை நீட்ட வலியால் துடிக்கிறார் உடனே மீனாவின் அம்மா இந்த வீட்டு மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே வேற யாராவது இருந்தா என்ன ஆகும்.

எல்லாருக்கும் கோவம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு முரட்டுத்தனமான கோபம் இப்படி ஒரு ரவுடித்தனமா இதனால என் பொண்ணு வாழ்க்கை தானே வீண் ஆகும் என் பொண்ண நெனச்சு கவலையா இருக்கு என பேசிக் கொண்டிருக்க முத்து வெளியே நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார் உடனே இன்னும் எதுவானாலும் சொல்லுங்க ரவுடி, கொலைகாரன், பொறுக்கி என பேசிவிட்டு இதற்கு தான் என்னை அழைத்தீர்களா என பேசுகிறார்.

முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..

அப்பொழுது உங்களை யார் அழைத்தது என சத்திய பேச சத்யாவை அடிக்கிறார் முத்து இது அண்ணாமலைக்கு தெரிய வர அண்ணாமலை முத்துவை பிடித்து திட்டுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மனோஜ் அவர்களிடம் விஜயா என்னடா போன வேலை என்ன ஆச்சு எனக் கேட்க அப்பொழுது விஜயா காதில் ஏதோ மனோஜ் கூறுகிறார் என்னடா சொல்ற என பேசுகிறார் விஜயா.

உடனே ரோகிணி என்னாச்சி மனோஜ் வேலை கிடைக்கலையா என பேச என் படிப்புக்கும் உழைப்புக்கும் ஏற்ற வேலை கிடைச்சிடுச்சு கனடாவில் வேலை எனக் கூற ரோகிணி கட்டிபிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில் விசா கிடைக்க கொஞ்சம் லேட் ஆகுமோ என பேச அதற்கு வேலை கிடைச்சுருச்சுன்னா ஒரு வாரத்தில் கிடைக்கும் என பேசுகிறார்.

வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…

உடனே மீனா என்ன வேலை கிடைச்சிருச்சுன்னு சொன்னீங்க இப்போ இப்படி சொல்றீங்க என கேட்க உடனே மனோஜிடம் கேள்வி எழுப்புகிறார்கள் மனோஜ் 14 லட்சம் கட்டினால் வேலை கிடைத்துவிடும் என பேசுகிறார் உடனே அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள் முத்து மற்றும் அண்ணாமலை விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், இந்த வாரம் முழுக்க கனடா போறன்னு சொல்லுவான் காமெடிக்கு பஞ்சமே இருக்காது  இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது..