வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா சத்யா சூடம் காட்டும் போது கையை தூக்குவதால் கதறி அழுகிறார் இதனை பார்த்து இந்த வீட்டு மாப்பிள்ளையே இப்படி கையை உடைத்து விட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார் எல்லாருக்கும் கோபம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோபம் முரட்டுத்தனமான கோபம் என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வாசுதேவன் இருக்கிறார் இன்னும் பேசுங்க இதைவிட இன்னும் நல்லா பேசுங்க ரவுடி பொறுக்கின்னு சொல்லுங்க என முத்து பேசுகிறார்.

அடுத்த காட்சியில்  நல்லா கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல என முத்து பேச உங்களை யாரு கூப்பிட்டது என சத்தியா பதிலுக்கு பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் கைய ஒடச்சிட்டு நீங்க வந்து நாடகம் ஆடுறீங்களா என பேசுகிறார். இதனால் கோபப்பட்ட முத்து சத்யாவை அடிக்கிறார் என்ன சின்ன பயலா இருந்துகிட்டு ஓவரா தான் பேசுற என மீண்டும்  அடித்து விட்டு கிளம்புகிறார்.

விஜய் செய்தது போல் செய்யணுமா.. அப்போ கண்டிப்பா நீ இத செஞ்சி தான் ஆகணும் பிரசன்னாவுக்கு கண்டிஷன் போட்ட சினேகா..

அடுத்த காட்சியில் மீனா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது என்ன ஆச்சு என அண்ணாமலை விசாரித்துக் கொண்டிருக்க நடந்த அனைத்தையும் கூறுகிறார் அப்பொழுது முத்து வருகிறார் விஜயா குரங்குக்கு பேண்ட் சட்டை போட்டா அது குரங்கா தான் இருக்கும் என பேச முத்துக்கு கோவம் வருகிறது அது மட்டும் இல்லாமல் அண்ணாமலை எதுக்காக அங்க போய் திரும்பவும் அடிதடி பண்ணுன உன்ன அங்க போக சொன்னதுக்கு காரணமே எல்லாத்தையும் சரி பண்ணுவேன் என்று தான் நினைச்சேன் ஆனா இப்படி பண்ணிட்டியே என்ன பேசுகிறார்.

இனிமே என் முகத்திலேயே முழிக்காத என அண்ணாமலை பேச அதற்கு முத்து அமைதியாக நான் எந்த தப்பும் செய்யலப்பா என சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே மீனா விடம் சென்று எதுக்கு இதெல்லாம் அப்பாகிட்ட சொல்ற என கேட்கிறார் மாமா கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன் ஏன மீனா பேசுகிறார். எனக்கும் தான் மனசுல அவ்ளோ கஷ்டம் இருக்கு நான் யார் கிட்ட போய் சொல்றது என பேசி விட்டு கிளம்புகிறார் முத்து.

GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… கொளுத்துங்கடா வெடிய…

அடுத்த காட்சியில் முத்து மொட்டை மாடியில் இருக்க மனோஜ் மற்றும் ரவியும் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். ஆனால் இதற்கு முன்பு ரவியிடம் சுருதி எங்க அம்மா என்னை பார்க்க ஸ்டுடியோக்கு வந்தாங்க இந்த கூப்பன கொடுத்தாங்க நம்ம ரெண்டு பேரும் போட்டிங் ஹவுஸ்க்கு போறோம் என பேச என்னால எல்லாம் லீவு போட முடியாது என கூறுகிறார் ரவி அது மட்டும் இல்லாமல் ஃப்ரீயா கிடைச்சது தானே வா போயிட்டு வரலாம் என பேச அதற்கு ரவி என்னால கூட்டிட்டு போக  முடியாதுன்னு குத்தி  காமிக்கிறியா என வாக்குவாதம் ஆகிறது.

அடுத்த காட்சியில் மூன்று பேரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பவே கல்யாணம் பண்ணாதீங்கடானு சொன்னனே கேட்டீங்களா என முத்து பேசுகிறார் அதற்கு கல்யாணம் பண்ணாலே நிம்மதி போயிடுச்சு என ரவியும் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் மனோஜம் பேசுகிறார் மூன்று பேரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்… இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.