பருத்திவீரன் பஞ்சாயத்து : குடி வைத்த வீட்டிலேயே கொல்லி வைக்கலாமா.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கார்த்தியை வெளுத்து விட்ட சமுத்திரகனி..

paruthiveeran : இணையதளத்தில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பஞ்சாயத்து தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது இது குறித்து அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டார். அந்த வகையில் தற்பொழுது ஞானவேல் ராஜாவிற்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது என சமுத்திரக்கனி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சமுத்திரகனி கூறியதாவது  திரு ஞானவேல் ராஜாவுக்கு.. அமீர் அண்ணன் பத்தி நீங்க பேசின வீடியோவை இப்பதான் பார்த்தேன்.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டே இருக்கீங்க ப்ரோ… தப்பு தப்பா பேசி இருக்கீங்க. கேக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. ஏன் சொல்றேன்னா. அந்தப் படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் இருந்தவன் நான்… எல்லா பிரச்சனையும் எனக்கு தெரியும்..

விசித்ராவை விட எனக்கு மோசமாக நடந்தது.! காதல் பட நடிகையை கசக்கி பிழிந்தது குறித்து அவரே கூறிய அதிர்ச்சி தகவல்.!

ஆறு மாசம் பருத்தி வீரன் படபிடிப்பிலேயே இருந்திருக்கேன் ஆனா உங்களை ஒரு நாள் கூட அந்த பக்கமே பார்த்ததே இல்லை.. நான் தான் தயாரிப்பாளர் நான்தான் தயாரிப்பாளர் என்று பேசிக்கொண்டே இருக்கீங்க… உங்கள தயாரிப்பாளராக ஆக்கினது கார்த்தி யை  ஹீரோவாக்கினது அந்த மனுஷன். எந்த நன்றி விசுவாசம் இல்லாமல் பேசி இருக்கீங்க பிரதர்.. தப்பில்லையா  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்… பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும் போதெல்லாம் சரி நமக்கு எதுக்கு அவங்களே பேசிக்குவாங்க அவங்களே தீர்த்துப்பாங்க அப்படின்னு தான் இருந்தேன் ஆனா இந்த முறை அப்படி இருக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு..

அண்ணா இந்த படத்துக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் கால்வாசி படம் நடக்கும் பொழுது நீங்க கையை விரிச்சிட்டீங்க என்னால தயாரிக்க முடியாது பணம் இல்ல அப்படின்னு சொல்லிட்டீங்க.. சகோதரர் சூர்யா வந்து படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா, அப்படின்னு சொல்லிட்டு போயிட்டார். அதன் பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் உன்னுடைய சொந்தக்காரங்க நண்பர்கள் என ஒவ்வொருத்தர் கிட்டயும் அவர் சொல்ல சொல்ல நான் தான் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இரண்டு லட்சம் இப்படி வாங்கிக்கிட்டு வந்தேன் இதையில்லாமல் தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்.

அல்வாவில் மயக்க மருந்து கொடுத்து அந்த படுக்கையறை காட்சி.? ஆனா சத்தியராஜ்.. உண்மையை உடைத்த கஸ்தூரி..

ஆல்மோஸ்ட் 50 60 பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம் ஆனால் கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டு இவ்வளவு பேச்சு பேசுறீங்க உண்மையிலேயே யார் தயாரிப்பாளர் சொல்லுங்க தயாரிப்பாளர் பதவியை அண்ணா அமீர் உங்களுக்கு விட்டுக் கொடுத்தார்.

பருத்திவீரன் பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசி இருக்கலாம் ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியாக இருக்கிறது தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல.. ஒரு நாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர் எதுக்கு இது அப்படியே விட்டுவிடு வேண்டியது தானே.. நிறுத்துங்கள் படத்தை அப்படின்னு சொன்னார் அதுக்கு அமீர் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா..?

ஆரம்பிச்சுட்டோம் கார்த்தியோட எதிர்காலம் இது அது மட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சுகிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கையில கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதுலேயே இருக்கு நான் இவங்களுக்காக எதுவும் செய்யலைங்க அந்த பெரிய மனுஷனுக்காக தான் செய்கிறேன் அப்படின்னு சொல்லி செஞ்சார் அன்னைக்கே அவர் படத்தை நிறுத்தி இருந்தால் இந்த படம் வந்திருக்குமா ஒரு ஹீரோ வெளியில் வந்துருப்பாரா என்ன பேச்சு பேசுறீங்க ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையாக நடந்துக்கிட்ட ஒரு மனுஷனை தான் எல்லோருமா சேர்ந்து…

வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஒவ்வொருவரின் முகத்திரையையும் கிழித்த விஜய் வர்மா.. பூர்ணிமா நீ ரொம்ப பாவம்

இப்படி 50 60 பேர்ட்ட வாங்குன பணத்துக்கு தான் நீங்க சேர்ந்து உட்கார்ந்து கணக்கு கேட்டீங்க எனக்கே தெரியல எத்தனை பேர் கிட்ட பணம் வாங்கிட்டு வந்தேன்னு யார் யார் எவ்வளவு கொடுத்தாங்கன்னு.. சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்னு பல பேர் கிட்ட கையேந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர்… அதுக்கு ஆயிரம் கோடி இல்ல லட்சம் கோடி கொடுத்தா கூட ஈடாகாது நீங்க எல்லாம் ஏதோ ஒன்றரை கோடிக்கு கணக்கு போட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க ஞானவேல்..

செலவு பண்ணது அதுக்கு மேல அதெல்லாம் பாவம்… கணக்கிலேயே இல்ல அமீர் அண்ணனுடைய பணம் அது இப்ப நான் சொல்லி இருக்கிறது ஒரு சம்பவம் தான் இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டால் நானும் பேச வேண்டி வரும் இந்த மாதிரி பொதுவெளியில் தப்பு தப்பா பேசுவதை இதோட நிறுத்திக்கொள்ளுங்கள் அதுதான் எல்லாருக்கும் நல்லது என அவர் பகிரங்கமாக சமுத்திரகனி ஞானவேல் ராஜா அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.