மகனுக்காக வயசுல பெரிய பொண்ண பார்த்த பாண்டியன்! குடும்பத்தை கைக்குள்ள போட்டுக்க ஐடியா கொடுக்கும் தங்க மயிலின் அம்மா.. ஓன் வில்லத்தனத்தை இப்பவே ஆரம்பிச்சிட்டியேம்மா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் பெண் பார்த்துவிட்டு நிச்சயம் எப்போது என பேசிக்கொள்கின்றனர். உடனே பெண் வீட்டார்கள் காலண்டரை பார்த்து இன்னும் ஒரு வாரத்துல நல்ல நாள் இருக்கு அப்பவே பண்ணிக்கலாம் என சொல்கின்றனர். மேலும் சரவணன் அக்கா வடிவு நிச்சயதார்த்த விழாவை எங்க வைக்கிறீங்க  மண்டபத்துலயா என கேட்கிறார். அதற்கு பெண் வீட்டார்கள் மண்டபத்துல வச்சா செலவு ஆயிடுமே என மனசுக்குள்ளே நினைச்சுகிட்டு எப்படி சமாளிக்கிறது என முடிவு பண்ணி இல்ல வீட்டிலேயே சிம்பிளா வச்சுக்கலாம் இப்ப ஒரு வாரத்துல நல்ல மண்டபம் கிடைக்காது என சமாளித்து விடுகின்றனர்.

கல்யாணத்தை சிறப்பா மண்டபத்துல வச்சுக்கலாம் என சொல்கின்றனர். உடனே வடிவு சரி எங்க  பக்கத்துல கல்யாண செலவு எல்லாம்  ரெண்டு பேரு வீட்லயும்  சேர்ந்து தான் பண்ணுவாங்க என சொல்கின்றனர். அதற்குப் பெண்ணுடைய அம்மா எங்க பக்கத்துல மாப்பிள்ளை வீட்ல தான் செய்வாங்க என சொல்கின்றனர்.

ஏன்பா ரவி முத்துவை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா.. ஸ்ருதி உங்க அப்பா உன்ன நல்லா ஏமாத்துறாரு.. வசமாக சிக்க போகும் சத்தியா..

அதற்கு சரி பரவால்ல நாங்களே செஞ்சுகிறோம் என பாண்டியன் சொல்கிறார். உடனே பெண்ணுடைய அப்பா உங்க பக்கத்துல என்ன செய்வாங்களோ அது மாதிரியே நம்மளும் சேர்ந்து செஞ்சிடலாம் என சொல்கிறார். செலவா அதிகமாகிடும் என பயந்து  பெண்ணுடைய அம்மா இல்ல எனக்கு ஒரு வேண்டுதல் இருக்கு அதாவது கோவில்ல தான் கல்யாணம் பண்ணனும் என சொல்கிறார். உடனே பாண்டியன் சரி பரவால்ல கல்யாணத்தை கோவில்ல முடிச்சுட்டு பெரிய மண்டபத்துல  கிராண்டா ரிசெப்ஷன் பண்ணிடலாம் என சொல்கிறார்.

உடனே அதற்கும் பயந்து இல்ல வேண்டாம் கோவிலுக்கு பக்கத்திலேயே ஒரு சின்ன மண்டபம் இருக்கு அதுவும் நல்லா தான் இருக்கும் அதுலையே பண்ணிடலாம் என சொல்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் சமாளித்து பேசுவதை பார்த்து வடிவுக்கும் மீனாவுக்கும் சந்தேகம் வருகிறது.

மேலும் வடிவு பொண்ணுக்கு எத்தனை பவுன் போடுவீங்க என கேட்கிறார். உடனே பாண்டியன், கதிர் மற்றும் கோமதி என அனைவரும் அதப் பத்தி கேட்க வேண்டாம், அவங்க பொண்ணுக்கு என்ன போடணும் தோணுதோ அத போடட்டும் என சொல்கின்றனர். ஆனால் வடிவு எங்க அப்பா எனக்கு 75 பவுன் போட்டாங்க நீங்க உங்க பொண்ணுக்கு எத்தனை பவுன் போடுறீங்க என கேட்கிறார். அப்பதான் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் அங்க மரியாதையா இருக்கும் எனச் சொல்கின்றனர்.

கடவுளை கையெடுத்து கும்பிடுவது போல் ராகிணியை கும்பிடும் தமிழ்.! மயங்கி விழுந்த சரஸ்வதி.. குழந்தைக்கு என்ன ஆனது..?

உடனே தங்க மயிலின் அம்மா உங்க வீட்டுக்கு ரெண்டு மருமகளுங்க வந்துருக்காங்க அவங்க எத்தனை பவுன் எடுத்துட்டு வந்துருக்காங்க என கேட்கிறார். உடனே ராஜ்ஜியம் மீனாவும் மாத்தி மாத்தி மூஞ்சை பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் வடிவோ மீனாவோட அம்மா அப்பா ரெண்டு பேரும் கவர்ன்மென்ட் வேலையில இருக்காங்க மீனாவும் வேலையில் இருக்கு அது மாதிரி ராஜியோட அப்பா அம்மாவுக்கு ஊர்ல நிறைய சொத்து இருக்கு இன்னைக்கு இல்லனாலும்  அப்புறமா கிலோ கணக்கில் போடுவாங்க என சொல்கிறார்.

உடனே அதை சமாளிப்பதற்காக  தங்கமயில் அம்மா நாங்க என்பது பவுன் போடுறோம் என சொல்கிறார். பேசி முடித்து விட்டு அவங்க போனதும் தங்கமயில் ஏமா இப்படி பொய்யா பேசுற நம்ப கிட்ட ஒரு அஞ்சு பவுன் கூட இல்லை, நாளைக்கு நான் அங்க தான் வாழ போறேன், இல்லன்னு சொன்னா கூட அவங்க ஒன்னும் சொல்ல போறது இல்ல ஆனா நீ இப்படி பொய்யா சொல்லிட்டே இருக்கியே என சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு அவங்க அம்மா அப்பாவோ நான் கவரிங் நகை தரேன் அதை வைத்து நீ சமாளிச்சுக்கலாம் என சொல்கின்றனர். அதோட மட்டும் இல்ல எனக்கு வயசு 29 ஆனால் நீ அவங்ககிட்ட 26 ன்னு பொய் சொல்லி இருக்க நாளைக்கு எதுக்காகவாது ஆதார் கார்டு ஓட்டர் கார்டு வாங்கினால் உண்மை தெரிஞ்சிடும் என சொல்கிறார்.

உட்காருகிற சேர் கூட கடனா!! பாண்டியன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பெண் வீட்டார்!! கொஞ்சநஞ்ச பொய்யாடா சொல்லியிருக்கீங்க..

நீ அங்க போய் கொஞ்ச நாள்லயே எல்லாத்தையும் நீ சொல்றத கேக்குற மாதிரி வச்சுக்கோ அப்புறம் எந்த பிரச்சனையும் வராது என அவங்க அப்பா அம்மா சொல்லி தராங்க. அதனைத் தொடர்ந்து மீனாவோ எனக்கு ஏதோ சரிப்பட்டு வரல ஏதோ தப்பா இருக்கு நம்ம அக்கம் பக்கத்துல விசாரிக்கணும் என சொல்கிறார். அப்போது பாண்டியன் இன்னுமம்மா ஓன் சந்தேகம் தீரல என சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.