ஏன்பா ரவி முத்துவை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா.. ஸ்ருதி உங்க அப்பா உன்ன நல்லா ஏமாத்துறாரு.. வசமாக சிக்க போகும் சத்தியா..

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ஸ்ருதியை பார்க்க ஸ்டுடியோ வந்துள்ளார், அப்பொழுது ஸ்ருதி கடுப்பாகிறார் பிறகு மீனா விடம் ஸ்ருதி பேசுகிறார் உங்களை நினைச்சு அத்தை மாமா என அனைவரும் கஷ்டப்படுகிறார்கள் என மீனா சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் உங்க வீட்டுக்காரர் தான அடிச்சாரு அப்புறம் எப்படி நான் வர முடியும் என ஸ்ருதி கேட்க அதற்கு ரவி என் வீட்டுக்கு வர மாட்டேங்குறாரு நீ வரலைன்னு தானே வர மாட்டேங்குறாரு ரவி உனக்கு சப்போர்ட்டா இருக்காருல்ல அதே மாதிரி தான் என்ன உங்க அப்பா திருடினு சொன்னதும் அவருக்கு கோவம் வந்தது.

அதுமட்டுமில்லாமல் நான் திருடி கொடுக்குறத வச்சு தான் என் புருஷன் குடிப்பார் என்று சொன்னார் உங்க அப்பா அதனாலதான் கோபப்பட்டார் அதுவரைக்கும் அவர் பொறுமையாக இருந்தாரு நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக அங்க ஃபங்ஷன்ல பேச கூட இல்லை யார்கிட்டயும். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அதுக்கப்புறம் உன் இஷ்டம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

கடவுளை கையெடுத்து கும்பிடுவது போல் ராகிணியை கும்பிடும் தமிழ்.! மயங்கி விழுந்த சரஸ்வதி.. குழந்தைக்கு என்ன ஆனது..?

மற்றொரு பக்கம் முத்து ரவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உன்னை நினைச்சு அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலைப்படுறாங்க நீ வீட்டுக்கு வா உன் பொண்டாட்டி மாமனார் மாமியார் தான் உனக்கு முக்கியமா அப்பா முக்கியம் இல்லையா ஒழுங்கா வாடா நம்ம எல்லாரும் ஒரே வீட்ல சந்தோசமா தான் இருந்தோம் என பேசுகிறார். உடனே ரவி ஸ்ருதி இல்லாம நான் வரமாட்டேன் என பேசி விட்டு செல்கிறார்.

மற்றொரு காட்சியில் ஸ்ருதி டப்பிங் பேசிவிட்டு பசிக்கிறது சார் நான் சாப்பிட்டு வருகிறேன் என புட் ஆர்டர் செய்கிறார், மீனா தன்னுடைய வீட்டிற்கு சென்று நடந்ததை கூறுகிறார்கள் அதற்கு மீனாவின் தங்கை நான் அந்த இடத்துல இருந்தேன் என்றால் அடிச்சிருப்பேன் மாமா கரெக்டா தான் நடந்துக்கிட்டார் என சொல்ல சத்தியா ஆமா அடிக்கிறது எல்லாம் கரெக்டா அக்கா மேல தப்பு இல்லன்னு நிருபிச்சி இருக்கணும் அத விட்டுட்டு அடிக்கலாமா என பேசுகிறார்.

ஸ்ருதியிடம் வம்பு பண்ணிய ரவுடியை அடித்து காப்பாற்றிய முத்து.. உண்மையைத் தெரிந்து கொண்டு அப்பா அம்மாவை எதிர்த்து சண்டை போடும் சுருதி..

ஆனாலும் சத்தியா இந்த எல்லா நிலைமையும் மாறும் ஏழையாகவே பொறக்குறது  நம்ப தப்பு இல்ல ஆனா ஏழையவே வாழ்றது நம்ப தப்பு தான் ஏதாவது பண்ணி பணத்தை சம்பாதிக்கணும் என்பது போல் பேச திருட்டு வேலையெல்லாம் பண்ண கூடாது சத்யா நேர் வழியில தான் சம்பாதிக்கணும் என்னைக்குமே நேர்மை தான் நிலைத்து நிற்கும் என பேசுகிறார்.

மற்றொரு பக்கம் சுருதி ஆர்டர் செய்ததை ரவியின் தோழர் ரவியிடம் கொடுக்க  அப்படி யாரு விஐபி என கேட்க உன் ஒய்ஃப் என சொல்ல வேற ஏதாவது சொன்னாளா என பேசுகிறார் இல்லை என சொல்லிவிட்டு இதை முதலில் ரெடி பண்ணி டெலிவரி பண்ணு என பேசுகிறார்.. மேலும் அடுத்த நாள் ப்ரோமோவில் விஜயா சாப்பிடாமல் அடம் பிடிக்க முத்து ஒரு பிளான் பண்ணி பக்கெட் பிரியாணி வாங்கி கொட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.