உட்காருகிற சேர் கூட கடனா!! பாண்டியன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பெண் வீட்டார்!! கொஞ்சநஞ்ச பொய்யாடா சொல்லியிருக்கீங்க..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் பாண்டியன் வீட்டில் பெண் பார்ப்பதற்காக அனைவரும் கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு பாண்டியனின் மொத்த குடும்பமும் கிளம்புகிறது. உடனே பாண்டியன் எல்லாரும் போயிட்டா கடைக்கு யாரு போறது. பழனி நீ கடைக்கு போய் குமரேசன் மாமனுக்கு ஒத்தாசையா இரு என  பாண்டியன் சொல்கிறார்.

இதற்கிடையில் பெண் வீட்டில்  வீட்டிற்கு வருபவர்கள் உட்கார சேர் வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டில் போய் சேர் வாங்கிட்டு தங்க மயிலின் தங்கச்சி சுடரிடம் அவங்க அம்மா சொல்கிறார். அது மட்டுமில்லாமல் பெண் பார்க்க வருபவர்களுக்கு  சாப்பிட கொடுப்பதற்காக கடைக்கு போய் லட்டு மிச்சர் பஜ்ஜி எல்லாம் வாங்கிட்டு வா என சொல்கிறார். 

மாமா டவுசர் கிழிஞ்சுச்சு!! கோபியை வச்சு செஞ்ச எழில்.. அசிங்கம் தாங்காமல் தெறித்து ஓடிய கோபி..

மேலும் ராஜி சித்தப்பா நான் அங்க போயிட்டு என்ன நடக்குதுன்னு உங்களுக்கு அப்டேட் பண்றேன் நீங்க கடைக்கு போங்க என்ன சொல்லிவிட்டு செல்கின்றனர். பெண் வீட்டுக்கு போனதும் அவர்களை வரவேற்கின்றனர். சரவணன் அக்கா இந்த வீட்டை பார்த்தா பெருசா ஒன்னும் இல்லையே என சொல்கிறார் அதற்கு மீனா வீடு எப்படி இருந்தா என்ன நம்ம பொண்ணு தானே கல்யாணம் பண்ண போறோம் என சொல்லி உள்ளே போகிறார்.

உள்ளே போய் உட்கார்ந்ததும் பொண்ணோட  தங்கச்சியை பார்த்து  இதுவா பொண்ணு அன்னைக்கு வேற மாதிரி இருந்தது என அரசி கேட்கிறார். உடனே பெண்ணோட அப்பா  இவை என்னோட சின்ன மகள் சுடர் என அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்கிடையில் கதிர் ஆமாம் இந்த பொண்ணு பாக்க போனா பஜ்ஜி சுஜ்ஜி எல்லாம் சாப்பிடலாம்னு படத்துல சொல்லுவாங்க பஜ்ஜி தெரியும் சுஜ்ஜின்னா என்ன என கேட்கிறார் அதற்கு மீனா தெரியாது என சொல்ல உடனே ராஜியை பார்த்து உனக்கு தெரியுமா என மீனா  கேட்கிறாள் எனக்கும் தெரியாது என ராஜி சொல்கிறாள். இதற்கிடையில் சுடர் அவங்க அக்கா தங்க மயிலிடம்  இவங்க எல்லாம்  பொண்ணு பாக்க வந்திருக்காங்களா இல்ல போருக்கு வந்திருக்காங்களா? இவ்வளவு பேர் வந்திருக்காங்க எனக்கேட்கிறார். அதற்கு தங்கமயில் அவங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம் என சொல்கிறார். உடனே நீ சொன்ன மாதிரி எல்லாம் இல்ல அக்கா மாப்பிள்ளை அழகா தான் இருக்காரு என சொல்கிறார்.

விஜயா தலையில் இடியை இறக்கிய ரோகினி.. சோன முத்தா மொத்தமும் போச்சா.. அண்ணாமலையை நான் அறைந்தாள் ஸ்ருதி பேசிய பேச்சு..

அதனைத் தொடர்ந்து பாண்டியன், அவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும் கோமதி என்னுடைய இரண்டு மகன்களும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என சொல்கிறார். இவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால மூத்தவன் இருக்கும்போது மத்தவங்க ரெண்டு பேருக்கும் ஏன் கல்யாணம் ஆச்சுன்னு யாரும் இவனுக்கு பொண்ணு தர மாட்டேங்குறாங்க என்ற உண்மையை சொல்ல உடனே  ராஜியும் மீனாவும் சொல்லாதீங்க என சொல்கின்றனர். அதற்கு பாண்டியன் பொதுவா ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க. ஆனால் என்ன பொறுத்த வரையும் ஒரு பொய் கூட சொல்ல கூடாது எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது அதனால உண்மையை சொல்லித்தான் நம்ம கல்யாணம் பண்ணனும் என சொல்கின்றார். இதைக் கேட்டு  பெண் வீட்டார்கள் அதிர்ச்சியாகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.