விஜயா தலையில் இடியை இறக்கிய ரோகினி.. சோன முத்தா மொத்தமும் போச்சா.. அண்ணாமலையை நான் அறைந்தாள் ஸ்ருதி பேசிய பேச்சு..

சிறகடிக்க ஆசை சீரியலில்  இன்றைய எபிசோடில்  ரோகிணி  கர்மமாக இருப்பதாக நினைத்து விஜயா சந்தோஷப்படுகிறார் உடனே நீங்கள் இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று செக்கப் பண்ணி விட்டு வாங்கள் என கூறுகிறார் அப்பொழுது மனோஜ் ரோகிணியை  அழைத்து செல்கிறார் போற வழியில் வித்யாவை பார்க்கிறார் வித்யாவிடம் ரோகிணி பேசிக்கொண்டிருக்கிறார் அப்பொழுது கங்கிராட்ஸ் என கூறுகிறார்.

உடனே ரோகிணி நான் சொன்ன டாக்டர்ட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டியா நம்ம போய் பாத்துட்டு வரலாம் என பேசுகிறார் அதற்கு வித்யா அதெல்லாம் சொல்லி வச்சுட்டேன் நம்ம போகலாம் செக்கப் பண்ணிக்கொள்ளலாம் என பேசுகிறார் உடனே மனோஜ் ரோகிணி உன்கிட்ட பேசணும் என தனியாக அழைத்து நமக்கு இப்ப அந்த குழந்தை தேவையா? நாம ஒரு வருடம் கழித்து தானே குழந்தை பெத்துக்கலாம்னு பிளான் பண்ணி இருந்தோம் ஆனா இப்போது இது தேவையா என பேசுகிறார்.

அதற்கு ரோகிணி கோவப்பட்டு குழந்தை உருவாகிடுச்சுன்னு எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க ஆனா நீ மட்டும் தான் பயத்துல இருக்க உனக்கு வேலை இல்லை என்கிறதுக்காக குழந்தை பெத்துக்காம இருக்க முடியுமா? குழந்தை பெத்துக்கறதுக்காண்டி நீ சீக்கிரம் வேலைக்கு போகணும் இப்பதான் உனக்கு அந்த விஷயம் புரியுதா. குழந்தை உருவாகிடுச்சுன்னு சந்தோஷ படமா  இப்படி ஒரு பயத்துல இருக்கியே சீக்கிரம் நீ வேலையை தேடிக்கணும் நீ ஒழுங்கா இன்டர்வியூ போ அட்டென்ட் பண்ணு நானும் வித்தியாவும் போய் டாக்டரை பார்த்துட்டு வருவேன் என கூறுகிறார்.

ஸ்ருதியிடம் அனைத்து உண்மையையும் சொல்லும் மீனா.. முத்து அவ்வளவு சொல்லியும் பிடிவாதம் பிடிக்கும் ரவி

அடுத்த காட்சியில் வித்யாவிடம் ரோகிணி பேசிக்கொண்டிருக்கும் பொழுது டாக்டரிடம் போக வேண்டியது கிடையாது ஏனென்றால் இது நான் போட்ட ஆக்டிங் அந்த விஜயா எங்க அப்பாவை பத்தி கேட்டாங்க மொத்த குடும்பமும் கேட்டுச்சு அதனால என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு நாடகத்தை போட்டேன் என கூறுகிறார்.

இன்னொரு காட்சியில் விஜயா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்த அண்ணாமலை இடம் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சாமி கும்பிடும் பொழுது காசை முடித்து வைக்கிறார் அப்பொழுது பார்வதி வருகிறார் பார்வதி இடம் விஜயா பேசிக் கொண்டிருக்கிறார் இது என்ன பை நிறையா எடுத்துக்கிட்டு வந்து இருக்க என பேச மாங்காய் என கூறுகிறார் பார்வதி.

ஏன் கட கிட வைக்க போறியா இவ்வளவு மாங்காய் என அண்ணாமலை கேட்கிறார் நான் என்ன ரோட்டில் கடையை போட்டு விக்கவா போறேன் என மீனவை குத்தி காட்டுகிறார் மீனாவைப் பற்றி பேசவில்லை என்றால் உனக்கு தூக்கம் வராதா என அண்ணாமலை கேட்கிறார். நான் அழைத்து வந்த மருமகள் ஆச்சே அதுக்காக தான் இவ்வளவு மாங்கா பிச்சிட்டு வந்தேன் என பார்வதி கூறுகிறார் உடனே மீனா விடம் மாங்காவை எடுத்துக் கொண்டு உள்ளே  வைக்க கூறுகிறார்கள் மீனா மாங்கா மீது காலை வைத்து வழிக்கு ஓடுகிறார் அப்பொழுது முத்து பிடிக்கிறார்.

புயலுக்கு முன் அமைதி!! சரவணனுக்கு பஜாரி பொன்னை கட்டி வைக்க போகும் பாண்டியன்.. இனி உன் வாழ்க்கை நகரம் தான்டா..

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரோகிணி வருகிறார் ரோகிணி வந்து உட்கார வைத்து விஜயா ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார் உடனே ரோகிணி நான் கர்ப்பமாக இல்லை என்பதை கூறுகிறார் விஜயா அதிர்ச்சி அடைந்து உறைந்து போய் நிற்கிறார் ஆனால் மனோஜ் சந்தோஷத்தில் மிதக்கிறார் உடனே முத்து அவன பாருங்க இங்க எல்லாம் அதிர்ச்சியில் இருக்கும் அவன் மட்டும் எவ்வளவு ஜாலியா சந்தோசமா இருக்கான்னு என முத்து மனோஜ் காட்டுகிறார்.

அப்பொழுது மனோஜ் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார் ரோகிணி உள்ளே அழைத்து செல்கிறார். அடுத்த காட்சியில் முத்து மாங்காய் இருக்கட்டும் இன்னும் மூணு மருமகள் இருக்கிறார்களா ஏதாவது ஒரு நல்ல விஷயம் வரும் இல்லன்னா ஊறுகாய் போட்டுவிடலாம் என பேசுகிறார் மற்றொரு பக்கம் ஸ்ருதிக்கு போன் பண்ணுகிறார் விஜயா ஆனால் நான் வர முடியாது முத்து இருக்கிற வீட்டுக்கு நான் வரமாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார் அப்பொழுது இப்ப வீட்ல அண்ணாமலை இருக்காரு அவர நான் கை நீட்டி அடிச்சா நீங்க சும்மா விட்டுடுவீங்களா என ஸ்ருதி கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.