புயலுக்கு முன் அமைதி!! சரவணனுக்கு பஜாரி பொன்னை கட்டி வைக்க போகும் பாண்டியன்.. இனி உன் வாழ்க்கை நகரம் தான்டா..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் நைட்டு சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது கோமதி கதிருக்கு மட்டும் பாலில் மஞ்சள்தூள் போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே பழனி என்ன அக்கா கதிருக்கு மட்டும் தனி ஸ்பெஷல் என்ன கேட்கிறார். அதற்கு அவன் இன்னைக்கு தான்டா மொத மொதல்ல வேலைக்கு போயிட்டு வந்திருக்கான் அதனாலதான் என சொல்ல நாங்களும் தான் டெய்லி வேலைக்கு போறோம். ஆனா எங்களுக்கு மட்டும் ஒன்னும் இல்ல என சொல்கிறார். மேலும் கதிர் பால் எனக்கு வேண்டாம் என சொல்லிவிட்டு தூக்கம் வருது நான் தூங்க போறேன் என போய் விடுகிறார். உடனே அந்தப் பாலை என்கிட்ட கொடு என வாங்கி பழனி குடித்து விடுகிறார்.

அதனைத்தொடர்ந்து ரூமுக்கு போய் கதிர் காதில் ஹெட்செட் போட்டுக்கொண்டு பாட்டு கேட்டு கொண்டே தூங்குகிறார். உடனே ரூமுக்கு வந்த ராஜி கதிர் டயர்ட் ஆக தூங்குவதை பார்த்து காதில் இருந்த ஹெட்செட்டை எடுத்து வைத்துவிட்டு தூங்குகிறார்.

வில்லாதி வில்லனாக மாறி அர்ஜுனை உருட்டு கட்டையை எடுத்து அடித்த பரமு.. சுயநினைவு இல்லாமல் சுருண்டு கிடக்கும் அர்ஜுன்.. தமிழ் மீது விழுந்த கொலை பழி..

மேலும் அடுத்த நாள் காலையில்  பாண்டியன் வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சரவணனுக்கு பூ போட்டு பார்த்ததுல இந்த சம்மந்தத்தை பார்க்கலாம் என்று சொல்கிறார். உடனே அதற்கு மீனா அதெல்லாம் சரி மாமா அந்த குடும்பத்தை பத்தி நம்ம அக்கம் பக்கத்துல விசாரிக்கிறது இல்லையா என கேட்க, அதற்கு பாண்டியன் அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா அந்த குடும்பத்தை பார்க்கும்போதே தெரியுது எவ்வளவு அமைதியா இருக்காங்க அந்த பொண்ணு ஏதாவது பேசுதா அவ்வளவு சாந்தமா இருக்கு. அவங்க குடும்பம் அவ்வளவு அமைதியான குடும்பமா இருக்கு என  பெருமையாக பேசுகிறார். ஆனால் அந்த குடும்பத்தில் இருக்கும்  அனைவருமே பயங்கர வாயுடன் அக்கம் பக்கத்தினறிடம் சண்டை போடுகிறார்கள்.

அந்த குடும்பமே பாண்டியன் சொல்வதற்கு நேர் எதிர்மறையாக இருக்கிறது.  மேலும் பாண்டியன் தங்கமயில் உடைய அப்பாவுக்கு போன் பண்ணி பொண்ணு பார்க்க இன்னைக்கு வரலாமா எனக் கேட்கிறார். அதற்கு அவர் என் பொண்டாட்டி கிட்ட கேட்காம நான் எந்த ஒரு விஷயமும் பண்ண மாட்டேன் இருங்க கேட்டு சொல்றேன் என சொல்கிறார்.

கோபிக்கு உதவ மறுத்த ராதிகா..அமிர்தாவிற்காக பாட்டியிடமே சண்டை போட்ட எழில்.. பாக்கியாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த பழனி..

அவருடைய மனைவியோ வர சொல்லுங்க பாக்கலாம் என சொல்கிறார். அப்படி சொல்லிவிட்டு உட்கார்ந்து யோசிக்கின்றனர். இப்ப வர சொல்லிட்டோமே வீடு சுத்தமா இல்ல என சொல்கிறார்.  அதற்கு அவருடைய மனைவியோ அதெல்லாம் சுத்தம் பண்ணிக்கலாம் நீ  போய் பேக்கரியில் லட்டு, மிச்சர் கடையில பஜ்ஜி எல்லாம் வாங்கிட்டு வந்துரு என சொல்கிறார். உடனே தங்கமயில் எதுக்கு யார் வரா ஏன் பஜ்ஜி ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்க சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க என சொல்கின்றனர்.அத்துடன்  இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் மீனா ரூமில் செந்தில் இடம் தனியாக மாமா ரொம்ப அவசர படுற மாதிரி இருக்கு எதுவும் விசாரிக்காம பண்ற மாதிரி இருக்கு என சொல்ல அதற்கு செந்தில் அரேஞ்ச் மேரேஜ்லாம் அப்படித்தான் இருக்கும் என சொல்கிறார்.