கோபிக்கு உதவ மறுத்த ராதிகா..அமிர்தாவிற்காக பாட்டியிடமே சண்டை போட்ட எழில்.. பாக்கியாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த பழனி..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் எழில் பாட்டியிடம் அமிர்தா கிட்ட என்ன பேசினீங்க என கேட்கிறார். அதற்கு பாட்டி என்ன உடனே வந்து வத்தி வச்சிட்டாளா வரும்போது எல்லாம் உலக மகா அப்பாவி மாறி வராளுங்க அதுக்கப்புறம் தான் தான் எல்லாங்குற மாதிரி பேசுறாளுங்க என சொல்கிறார். உடனே எழில் பாட்டியிடம் அவ எதுவும் சொல்லல நான் தான் கேட்கிறேன் என சொல்லி இனிமேல் நாங்க குழந்தை பெத்துக்கிறத பத்தி நீங்க எதுவும் பேசாதீங்க. குழந்தை பெத்துக்கிட்டா தான் அவ இங்க இருக்க முடியும்னு கிடையாது என திட்டவட்டமாக பேசி விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து பாட்டி நீ என்ன எனக்கு ஆர்டர் பண்றியா நான் என்ன பேசணும்னு நீ எனக்கு சொல்லி தரியா என கேட்டுவிட்டு பாக்கியாவிடம் என்ன புள்ள வளர்த்து வச்சிருக்க என கேட்கிறார். அதற்கு பாக்யா நல்லா தான் வளர்த்து வச்சிருக்கேன் மத்தவங்க சொல்றாங்கன்னு பொண்டாட்டி கிட்ட சண்டைக்கு போகாம  பொண்டாட்டிக்காக வந்து நிக்கிறான்ல அப்புறம் என்ன என சொல்ல பாட்டி வாய் அடைத்து போய் அங்கிருந்து போகிறார்.

விஜயாவை அப்பட்டமாக ஏமாற்றும் ரோகிணி… நமக்கு சோறு தான் முக்கியம் என சோத்தை திங்கும் மனோஜ் வாழ்க்கையை வெறுத்து பேசும் ரவி…

உடனே பாக்கியா தாத்தாவிடம் நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சிடுங்க மாமா என சொல்கிறார். அதனைத் தொடர்ந்து  கோபி தனது ரெஸ்டாரன்ட் கிச்சனுக்கு போகிறார். அங்கு  செஃப் இன்னக்கி லீவு என சொல்ல மற்றவர்களிடம் சமைக்க சொல்கிறார். ஆனால் அவர்களோ எங்களுக்கு சமைக்க தெரியாது. அவர் என்ன சொல்றாரோ அத  நாங்க செய்வோம் நீங்க வேணும்னா சொல்லுங்க நாங்க செய்றோம் எங்களுக்கு அளவு தெரியாது, எப்ப போடணும்ன்றதும் தெரியாது என சொல்கிறார்.

உடனே கோபி என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் ராதிகாவுக்கு போன் பண்ணி கேட்கிறார். அதற்கு ராதிகாவோ என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கன்னு தெரியாது எனக்கு 12 மணிக்கு கரெக்டா ஆபீசுக்கு சாப்பாடு வந்துடனும் இல்லனா ஆபீஸ்ல எனக்கு கெட்ட பெயர் ஆயிடும் என சொல்லி போனை வைத்து விடுகிறார்.

வாய் கிழிய பேசிய கோபிக்கு வாயிலேயே நாலு போடு போட்ட பாக்யா… என்ன கோபி சார் இந்த அடி போதுமா

மேலும் அடுத்த சீனில்  ரெஸ்டாரண்டுக்கு பழனி ஒரு ஆளை கூட்டிட்டு வருகிறார். பாக்யா, எழில், செல்வி, பழனி அந்த நபர் என அனைவரும் பேசிக் கொள்கின்றனர். பாக்யாவின் ரெஸ்டாரண்டுக்கு வருபவர்களுக்கு கார் நிறுத்துவதற்காக பார்க்கிங்  ஏரியாவிற்கு வாடகை பேசுகின்றனர். அவரோ முப்பதாயிரம் சொல்கிறார். ஆனால் பழனியோ பேசி பேசி பத்தாயிரத்துக்கு முடித்து வைக்கிறார். ஒரு வழியாக பாக்கியாவின் ரெஸ்டாரன்ட்  பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து கோபிக்கு நிறைய ஆர்டர் வருகிறது. ஆனால் சமைக்க ஆள் இல்லாததால் அனைத்து ஆர்டரையும் கோபி கேன்சல் பண்ணுகிறார். மேலும் என்ன செய்வது என தெரியாமல் கோபி அவருடைய அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த அனைத்தையும் கூறுகிறார். அதைக் கேட்டு  ஈஸ்வரி முழிக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.