ஸ்ருதியிடம் அனைத்து உண்மையையும் சொல்லும் மீனா.. முத்து அவ்வளவு சொல்லியும் பிடிவாதம் பிடிக்கும் ரவி

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய  எபிசோடில் ரோகிணி உங்கப்பா இன்னும்மா பிளைட்ல வந்துகிட்டு இருக்காரா என விஜயா நக்கலாக பேச அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள் உடனே என்ன சொல்வது என்று புரியாமல் வாமிட் எடுப்பது போல் நடிக்கிறார் அதனால் விஜயா நான் பாட்டி ஆயிட்டேன் நீங்க தாத்தா ஆகிட்டீங்க என ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கிறார் ஆனால் ரோகிணிக்கு தான் தெரியும் அது நடிப்பு என்று.

மற்றொரு பக்கம் ரவியும் ஸ்ருதியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா ஸ்ருதியிடம் சென்று வீட்டுக்கு வா என அழைக்கிறார் ஆனால் சுருதி என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும் எங்க அப்பாவ முத்து அடிச்சிட்டாரு எப்படி என்னால வர முடியும் என பேசுகிறார்.

1000 பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்றாங்க.. ஆனா இவங்க 2000 பொய் சொல்லுவாங்க போல..

அதற்கு மீனா உங்க அப்பா என்னை எவ்வளவு திட்டினார் தெரியுமா திருடினு ஒரு திருட்டுப்பழி போட்டாரு அதுமட்டுமில்லாம கொஞ்சம் கூட பொறுமையா இல்லாம என் குடும்பத்தையும் அசிங்க அசிங்கமா பேசினாரு என் குடும்பமே திருட்டு குடும்பம்னு சொன்னாரு இப்படி எல்லாம் சொன்ன பிறகு எப்படி அவரால பொறுமையா இருக்க முடியும் அவர் செஞ்சது தப்புதான் அவருக்காக நான் உன்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன் உங்க அப்பா கிட்டையும் மன்னிப்பு கேட்கிறேன் ஆனா வீட்டுக்கு வாங்க என பேசுகிறார்.

மீனாவின் கண்ணீர் துளி விலைமதிக்கத்தக்கது அதனால் ஸ்ருதி மனம் இறங்குவாரா. மற்றொரு பக்கம் முத்துர ரவியிடம் சென்று வீட்டுக்கு அழைக்கிறார் அதற்கு ரவி பிடிவாதம் பிடிக்க மீனாவ திருடினு சொன்னா எனக்கு எப்படி டா கோபம் வராமல் இருக்கும்  என பேச அதுக்கு நீ கை நீட்டுவியா? ஒன்னு என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல சுருதி கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல நீ வழக்கம் போல கை நீட்டிட்டியே என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ஸ்ருதி இல்லாம என்னால வர முடியாது டா என ரவி முத்துவிடம் கூறுகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

புயலுக்கு முன் அமைதி!! சரவணனுக்கு பஜாரி பொன்னை கட்டி வைக்க போகும் பாண்டியன்.. இனி உன் வாழ்க்கை நகரம் தான்டா..