1000 பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்றாங்க.. ஆனா இவங்க 2000 பொய் சொல்லுவாங்க போல..

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் தற்போது வந்துள்ள பிரமோவில்  பாண்டியன் பெண் வீட்டருக்கு போன் பண்ணி குடும்பத்தோட பொண்ணு பாக்க இன்னைக்கு வரலாமா என கேட்கிறார். அப்போது மீனா பாண்டியனிடம்  பெண்னோட குடும்பத்தை பத்தி நம்ம யார்கிட்டயும் விசாரிக்கவே இல்லை. அவங்க எப்படிப்பட்டவங்க அந்த குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்னு விசாரிக்கணும்ல்ல மாமா என கேட்கிறார்.

அதற்கு பாண்டியன் அந்த குடும்பம் சாந்தமான குடும்பம் அந்த  பொண்ணு படிச்சங்கிற எந்த திமிரும் இல்லாம அவ்வளவு பணிவா இருக்கும் என பாண்டியன் புகழ்ந்து பேசுகிறார். ஆனால் அந்த குடும்பமோ தெருவில் இருக்கும் எல்லார்கிட்டயும் சண்டை போடறதையே வேலையா வெச்சுட்டு இருக்காங்க.

புயலுக்கு முன் அமைதி!! சரவணனுக்கு பஜாரி பொன்னை கட்டி வைக்க போகும் பாண்டியன்.. இனி உன் வாழ்க்கை நகரம் தான்டா..

மேலும் பாண்டியன் போன் பண்ணி பொண்ணு பாக்க வரலாமா என பொண்ணோட அப்பா கிட்ட கேட்கிறார். அவருக்கு அவரோ என் மனைவி கிட்ட கேக்காம எதையும் செய்ய மாட்டேன் என சொல்லி பொண்டாட்டியிடம் கேட்கிறார். உடனே அவுங்க வர சொல்லுங்க என சொல்ல பாண்டியன் குடும்பம் பெண் பார்க்க தயாராகின்றனர்.

அதே நேரத்தில் பொண்ணோட அம்மா, அப்பா கிட்ட  கடைக்கு போய்  லட்டு, மிச்சர், பஜ்ஜி எல்லாம் வாங்கிட்டு வாங்க என சொல்ல. எதுக்காக இதெல்லாம் வாங்குறீங்க என  தங்கமயில் கேட்கிறார். அதற்கு  உன்ன பொண்ணு பாக்க சரவணன் குடும்பத்தில் இருந்து வராங்க என சொன்னதும் தங்க மயிலோ நீ வேறயா மாப்பிள்ளை வீட்ல எம்.எ படிச்சிருக்கேன்னு பொய் சொல்லிட்ட என்னாகுமோ என சொல்கிறார்.

வில்லாதி வில்லனாக மாறி அர்ஜுனை உருட்டு கட்டையை எடுத்து அடித்த பரமு.. சுயநினைவு இல்லாமல் சுருண்டு கிடக்கும் அர்ஜுன்.. தமிழ் மீது விழுந்த கொலை பழி..

அதற்கு பொண்ணோட அம்மா அதெல்லாம் பரவாயில்லை  அவங்க கிட்ட கடை, சொத்து, பணம் எல்லாம் இருக்கு  அதனால அங்க கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது என சொல்கின்றனர். மேலும் பாண்டியன் அந்த குடும்பத்தை பற்றி பெரிதாக நினைக்கிறார். ஆனால் அந்த குடும்பமோ சரியான பிராடு குடும்பமாக இருக்கிறது. அத்துடன் இந்த பிரம்மோ முடிவடைகிறது.