வீட்டுக்கு தெரியாமல் பொண்டாட்டிக்காக தூங்காமல் கூட நைட் டூட்டி பார்க்கும் கதிர்!! சரவணன் கல்யாணத்தை நிறுத்தியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட மீனா!!பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கதிர் வேலை கேட்டு ஒரு கம்பெனிக்கு போகிறார். அங்கு அந்த மேனேஜர் ஏன் படிக்கும்போதே பார்ட் டைம் ஜாப் கேக்கறீங்க என்ன அவசியம் என கேட்கிறார். அதற்கு கல்யாணம் ஆயிடுச்சு அதனால கொஞ்சம் பண தேவைப்படுது என சொல்ல சரி பார்ம் ஃபில் பண்ணி குடுங்க நாளையிலிருந்து வேலைக்கு வாங்க என சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து அந்த மேனேஜர் திருச்சி வரை போக வேண்டியது இருக்கிறது அதற்கு ஒரு டிரைவர் தேவைப்படுகிறார் என சொல்கிறார். உடனே கதிர் எனக்கு டிரைவிங் தெரியும், நான் உங்களை கூட்டிட்டு போறேன் என சொல்லிவிட்டு,செந்திலுக்கு போன் பண்ணி நான் திருச்சி வரை டிரைவிங் போயிட்டு வரேன் வீட்ல எதையாவது சொல்லி சமாளிச்சுட்டு என சொல்கிறார் அதற்கு செந்தில் ஏன்டா என கேட்க எனக்கு பணம் தேவைப்படுது அதனால் தான் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார்.

கோர்ட்டில் வைத்து கோதையை கிழித்து தொங்கவிட்ட ராகினி.. உன்ன பெத்ததுக்கு கருங்கல்ல பெத்து இருக்கலாம் ராகினி..

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில் மீனா ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அப்போது கூட வேலை பார்க்கும் அந்த அக்கா என்கிட்ட ஏன் மீனா பேச மாட்டேங்குற இந்த கல்யாணம் நின்னத்துக்கு என் வீட்டுக்காரர் காரணம் இல்ல உங்க அத்தையோட அண்ணன் தான் காரணம் அவர்தான் சரவணன் பத்தி  சொல்லக்கூடாதஅதெல்லாம் சொல்லி நிறுத்திட்டாரு என சொல்கிறார். அதையே நினைச்சுகிட்டு மீனா  ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருக்கிறார். அப்போது செந்தில் மீனாவை கூப்பிடுகிறார்.

அதை கவனிக்காத மீனா யாரோ என நினைத்து செருப்பால அடிப்பேன்டா என சொல்கிறார். உடனே செந்தில் ஏய் மீனா நான் தாண்டி என சொல்ல ஐயோ கவனிக்காம சொல்லிட்டேன் என சொல்கிறார்.என்ன அப்படி கவனிக்காம எதையோ யோசிச்சுகிட்டு போற என கேட்க அதற்கு மீனா நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு அத்தை கிட்ட சொல்ல வேணாம் இது யாருக்கும் தெரிய வேணாம் இதனால கதிர் சண்டைக்கு போயிடுவான் அப்ப ராஜுக்கும் அவனுக்கும் பிரச்சனை ஆயிடும் இந்த விஷயத்தை இப்படியே விட்டு விடுவோம் பின்னாடி பார்த்துப்போம் என சொல்கின்றனர்.

வாசுதேவன் நீங்க செய்யறது ரொம்ப பெரிய தப்பு.. முத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.? ரோகினி உங்க ரூட் கிளியர்…

அதனைத்தொடர்ந்து வீட்டில் நைட் சாப்பிடும் போது கதிர் எங்க காணும் என பாண்டியன் கேட்கிறார்.  அதற்கு செந்தில் திருச்சிக்கு பிரண்டோட ரிசப்ஷனுக்கு போயிருக்கான்பா என்கிட்ட சொல்லி சொல்ல சொன்னான் நான் தான் மறந்துட்டேன் என சொல்கிறார். என்னது அவன் ஃப்ரெண்டுக்கு ரிசப்ஷனா அவனாது வீட்ல சொல்லிட்டு கல்யாணம் பண்ணானா இல்ல அவனும் திருட்டு கல்யாணம் பண்ணிட்டானா என கேட்கிறார். அதற்கு பழனி வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணதனால தான் ரிசப்ஷன் வைக்குறாங்க எனச் சொல்கிறார். எங்கேயாவது போன  சொல்லிட்டு போறது இல்லையா பாரு அவனுக்கு செஞ்ச சாப்பாடு எல்லாம் வேஸ்ட் ஆவுது இல்ல என சொல்ல உடனே, அரசி அத பத்தி நீங்க கவலைப்படாதீங்கப்பா சிக்கன் 65 தான நானே சாப்பிடுகிறேன் என சொல்கிறார்.

அதனை தொடர்ந்து கிச்சனில் ராஜியும்  கோமதியும் சுத்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோமதி ராஜிடம் உன் கிட்ட சொல்லிட்டு போகலையா என கேட்கிறார். அதற்கு மீனா எல்லாம் தெரிஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நீங்க பண்ணாதீங்க, அவங்க என்ன உருகி உருகி லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இல்ல, இவ்வளவு நாள் ஆகுதுல இன்னும் அப்படியேவா இருக்கீங்க, பேசிக் கூட இல்லையா என ராஜி இடம் கோமதி கேட்க ராஜி இல்ல எனச் சொல்கிறார். அதற்கு கோமதி வருத்தப்படுகிறார். உடனே மீனா கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும் நீங்க போய் மாமாவுக்கு மருந்து கொடுங்க என சொல்லி அனுப்பி விடுகிறார்.

ஆத்தாடி இவளுங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்தால் நம்ம நிலைமை என்ன ஆகிறது… வீடியோவை பார்த்து புலம்ப போகும் விஜயா…

அடுத்த சீனில் மாடியில் சரவணன்  இந்த கதிருக்கு திருச்சில யாருடா பிரண்டு எனக்கு தெரியாம என பேசிக் கொண்டிருக்க அப்போது செந்தில் கல்யாணம்ல்லாம் எதுவும் இல்லனா, நான் பொய் சொன்னேன்  அவன் டிரைவரா வேலைக்கு போய் இருக்கான் என சொல்கிறார். அவனுக்கு ஏன்டா இந்த வேலை என சரவணன் கேட்க அவனுக்கு பணம் தேவைப்படுதுன்ன சொல்லி இருந்தா நான் குடுத்து இருப்பேன்டா என சரவணன் சொல்கிறார். அதற்கு பழனி ஏது உன்கிட்ட பணம் என கேட்க அதற்கு யார்கிட்டயாவது வாங்கி கொடுத்து இருப்பேன் என சொல்கிறார். மேலும் சரவணன் கதிருக்கு போன் பண்ணி பார்த்து பத்திரமா வண்டி ஓட்டு என சொல்லுகிறார்.

மேலும் செந்தில் ஏன் தான் அப்பா இப்படி பண்றாருன்னு தெரியல அண்ணன், மீனாவுக்கு ஒரு முழம் பூ வாங்கி கொடுக்கணும்னா ஒரு வாரம் யோசிக்க வேண்டியதா இருக்கு என சொல்கிறார். அதைக் கேட்டு சரவணன் யோசித்து கொண்டு இருக்கிறார்.அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.