வாசுதேவன் நீங்க செய்யறது ரொம்ப பெரிய தப்பு.. முத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா.? ரோகினி உங்க ரூட் கிளியர்…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் ரோகிணியின் தோழி வித்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இனிமேல் முத்துவால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே கிடையாது என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் ரோகிணி இங்க கூட கொஞ்சமா தான் முறைச்சாங்க வீட்டுக்கு போய் வெளியில போனு சொன்னாலும் சொல்லுவாங்க அதுக்குள்ள ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை நடக்கணும் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் விஜயாவிடம் பார்வதி போய் ரோகிணி அழைத்து கொண்டுவா திருஷ்டி சுத்தி போடணும் என பேசுகிறார் உடனே விஜயா கோபத்துடன் நான் போகணுமா ஆனாலும் போக முடியாது என பேச மீனாவை அழைத்து ரோகிணியை அழைத்துக்கொண்டு வரச் சொல்கிறார் மீனா சென்று ரோகினி இடம் அத்தை கூப்பிட்டார்கள் எனக் கூற அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி அதுமட்டுமில்லாமல் மீனா திருஷ்டி சுற்றுவதற்கு கூப்பிட்டாங்க என கூறிவிட்டு வருகிறார்.

தங்கையின் மரணத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் சுந்தர் சி.. திகிலில் மிரட்டும் அரண்மனை 4 ட்ரெய்லர்..

அடுத்த காட்சியில் ரோகினி மற்றும் ஸ்ருதியை நிற்க வைத்து திருஷ்டி சுற்றுகிறார்கள் அப்பொழுது முத்து இப்ப என்னத்த சாதிச்சிட்டாங்க இவங்களுக்கு திருஷ்டி சுத்துறாங்க என பேச ஊரு கண்ணு உலகத்துக்கண்ணு பட்டு இருக்கும் அதனால தான் திருஷ்டி சுத்துறாங்க என பேசுகிறார். உடனே ரவி மற்றும் மனோஜ் எங்களுக்கெல்லாம் துத்தி சுத்த மாட்டீங்களா என கேட்கிறார் நாங்க வீட்ல போய் சுத்தி கொள்கிறோம் என கூறி விடுகிறார்கள்.

உடனே சுதா அனுப்பிய இரண்டு அடியார்கள் முத்துவை எவ்வளவு டார்ச்சர் செய்தோம் ஆனால் குழந்தை மாதிரி சிரிச்சிட்டு இருக்கான் அவனை இதுக்கு மேல கோவபடுத்தவே முடியாது அதனால என்கிட்ட ஒரு பிளான் இருக்கிறது என சாப்பிட வைத்து அண்ணாமலையை பாதி சாப்பாட்டில் வேறொரு ஆள் வருகிறார்கள் நீங்கள் எழுந்திரிங்கள் என கூறலாம் என பிளான் போடுகிறார்கள் இது அருமையான ப்ளான் என சுதாவும் கூறுகிறார்.

ஆத்தாடி இவளுங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்தால் நம்ம நிலைமை என்ன ஆகிறது… வீடியோவை பார்த்து புலம்ப போகும் விஜயா…

உடனே சுதா அனுப்பிய இரண்டு அடியார்களும் அண்ணாமலை முத்து அண்ணாமலையின் தோழர் என அனைவரையும் சாப்பிட அழைத்து செல்கிறார் அங்கு உட்கார்ந்ததும் சுதாவிடம் சென்று அவர்களை உட்கார வைத்து விட்டேன் சாப்பாடு போடுவது போல் போட்டு எழுந்திருக்க வைக்கப் போகிறேன் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது அனைவரும் மீண்டும் போய் பார்க்கிறார்கள் அப்பொழுது குழந்தைகளை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை மற்றும் முத்து.

இதனை பார்த்து அதிர்ச்சடைந்து நிற்கிறார்கள் உடனே சுதாவின் கணவன் வாசுதேவனும் நீங்களும் உங்க பிளானும் என திட்டுகிறார். அடுத்த காட்சியில் மீனாவிடம் சுருதியை அழைத்துக் கொண்டு வா கோயிலுக்கு போகலாம் என பேச ஸ்ருதியை கூப்பிட போகிறார் மீனா அப்பொழுது மாலையில் செயினை பார்த்துவிட்டு அந்த செயினை கையில் எடுக்கிறார் உடனே வாசுதேவன் மீனாவை செயினை திருட தான் இந்த பங்க்ஷனுக்கு வந்தியா என சுதாவிடம் கூப்பிட்டு திருட்டுப் பழியை போடுகிறார்கள்.

ஈஸ்வரி கூறிய சப்பக்கட்டு கதை .. பாக்கியா சொன்ன ஒத்த வார்த்தை சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராதிகா..

அப்பொழுது மீனா அழுது கொண்டு முத்துவை வந்து கட்டிப்பிடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் அண்ணாமலை இடம் உங்க மருமக திருடிட்டால் என சொல்ல அதற்கு அண்ணாமலை மீனா அப்படிப்பட்ட பெண்னே கிடையாது அப்படி செய்கிற ஆளே கிடையாது என பேசுகிறார். உடனே முத்து என்ன நடந்தது என மீனா விடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார் இடையில் வாசுதேவன் பேச முத்து கோவப்பட்டு அமைதியா இருக்கீங்களா என பேசுகிறார்.

இப்படி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது திருடறதுக்கு தான் இங்க எல்லாம் வந்தீங்களா நீங்க எல்லாம் இப்படிதான் பண்ணுவீங்க என வார்த்தையை விடுகிறார் உடனே விஜயாவிடம் பார்வதி என்ன விஜயா மீனா மேலேயே இப்படி ஒரு திருட்டு பழியை  போடுறாங்க என பேசுகிறார் முத்துவை கோபப்படுத்திக் கொண்டே இருக்கிறார் வாசுதேவன் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில் சுருதியை வீட்டுக்கு அழைக்க சுருதி வர முடியாது என திட்டவட்டமாக கூறுகிறார் இதனை நாளை எபிசோடில் பார்க்கலாம்.