ஈஸ்வரி கூறிய சப்பக்கட்டு கதை .. பாக்கியா சொன்ன ஒத்த வார்த்தை சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராதிகா..

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி மற்றும் செழியன்னை சேர்த்து வைக்க பாக்கியா மற்றும் மரியம்  ஒரு பிளான் போடுகிறார்கள் அதாவது செழியன் மற்றும் ஜெனியை ஒரு ரூமுக்குள் போட்டு பூட்டி விடுகிறார்கள் ஜெனி செழியனை அடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் சின்ன வயதில் இருந்தே உன்ன தான் நான் காதலிச்சிட்டு இருக்கேன் ஆனா என்ன விட அவ உனக்கு முக்கியமா போனாளா என வெளுத்து வாங்குகிறார்.

ஒரு வழியாக இருவரும் சண்டை போட்டு சமாதானம் ஆகி ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். உடனே ஜெனியை அழைத்துக்கொண்டு மரியன் வீட்டிற்கு செல்கிறார் அதுமட்டுமில்லாமல் அங்கிருந்து பாக்யா வீட்டிற்கு இருவரும் வருகிறார்கள் உடனே ராமமூர்த்தி ஈஸ்வரி கோபி ராதிகா என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் ஈஸ்வரி கண்ணீர் விட்டு அழுது செழியன் பண்ணுன தப்புக்கு எல்லாரையும் தவிக்க விட்டுட்ட எங்களை பத்தி யோசிச்சியா என பேசுகிறார்.

முதன்முதலாக சம்பாதித்த காசை ராஜீயிடம் கொடுத்த கதிர்.. நான் காலி இப்ப நான் காலி என ரொமான்ஸில் புகுந்து விளையாடும் ஜோடி..

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் ராமமூர்த்தி பாக்யாவிடம் எப்படி பாக்கியா ஜெனிய செழியனோட சேர்த்து வைத்த என கேள்வி கேட்கிறார் அதற்கு நானும் ஜெனி ஓட அம்மா மரியமும் பிளான் பண்ணி தான் செய்தோம் என பேசுகிறார் அந்த சமயத்தில் ஈஸ்வரி வந்து நீங்க பிளான் போட்டதால நடக்கல நான் பிளான் போட்டதுதான் செழியனுக்கு  நான் வேணும்னு ஒரு பொண்ணு பார்க்க போனதால் தான் எல்லாமே நடந்துச்சு என சப்ப கட்டு கட்டுகிறார்.

உடனே ராமமூர்த்தியும் பாக்கியாவும் அப்படியா என பிரமிப்புடன் பேசுகிறார்கள் அடுத்த காட்சியில் ராதிகா நீங்க அவ்வளவு செஞ்சு அத்தை ஒரேடியா ஆஃப் பண்ணிட்டாங்களே உங்களுக்கு கோபமே வரலையா என பாக்கியாவிடம் ராதிகா கேட்க கோவம் எல்லாம் வரும் தான் ஆனா நம்ம அத்தை தானே அதனால விட்டுடுவேன் என பேசுகிறார் என்னது நம்ம அத்தையா என ராதிகா சந்தோஷப்படுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.

முதன்முதலாக சம்பாதித்த காசை ராஜீயிடம் கொடுத்த கதிர்.. நான் காலி இப்ப நான் காலி என ரொமான்ஸில் புகுந்து விளையாடும் ஜோடி..