பட்டு வேட்டி சட்டையில் பக்காவாக சுயம்வரத்திற்கு கிளம்பிய சரவணன்!! மயிலு சிக்குமா..பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் நைட் அனைவரும் சாப்பிட உட்காருகின்றனர். அப்போது அரசி  இன்னைக்கு என்ன ஸ்பெஷல் சிக்கன் குழம்பா, ஏம்மா சிக்கன் ஃப்ரை இல்லையா என கேட்கிறார். உடனே சிக்கன் 65 இருக்கிறதை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது  பாண்டியன் சாப்பிட உட்கார்ந்ததை பார்த்ததும் சரவணன் நான் சாப்பிட்டேன் எனக்கு போதும் என சொல்லிவிட்டு எழுந்திருக்கிறார்.

உடனே பாண்டியன் அவரை உட்கார சொல்லி உனக்கு பழைய முறையில  பொண்ணு பாக்க போறேன் என சொல்கிறார். உடனே அனைவரும் ஷாக் ஆகின்றனர்.  அதாவது சுயம்வரம் மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்கும் அதுல தான் உனக்கு பொண்ணு பாக்க போறேன் என சொல்கிறார். உடனே அதைக் கேட்ட மீனா அப்ப குதிரை  வேணுமா மாமா என கேட்கிறார்.

ஜெனி காலில் விழுந்து கதறிய செழியன்!! இறங்கி வருவாரா.. கண்ணீரில் மிதக்கும் பாக்யா மரியம்..

அதனை தொடர்ந்து சரவணன் மாடிக்கு போய் முதல்ல புரோக்கர் மூலமாக பொண்ணு பார்த்தாங்க, அப்புறம் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்தாங்க, மேட்ரிமோனி ஆப்ல பதிவு பண்ணாங்க, இப்ப சுயம்வரமா  அப்படின்னா என்ன என தனியாக பேசிக்கொண்டு போனில் சுயம்வரம் என சர்ச் பண்ணுகிறார்.  உடனே சுயம்வரம் படம் பிச்சர் வருகிறது. இதை பின்னாடி நின்று செந்திலும் பழனியும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உடனே அவர்கள் இருவரும் கிண்டல் பண்ணுகின்றனர். அதனை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சரவணன் அவரது கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போது அங்கு செந்தில் சென்று அண்ணா என்னோட பிரண்டோட அண்ணன் சுயம்வரம் நிகழ்ச்சி மூலமாக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம் முதல் ரவுண்டுல  வில்ல வளைக்கணுமா, இரண்டாவது ரவுண்டுல இளவட்ட கல்லை தூக்கி போடணுமா, ஜென்ரல் நாலேஜ் கொஸ்டினுக்கு பதில் சொல்லனுமா என சொல்லி கிண்டல் பண்ணுகிறார். அது தெரியாமல் சரவணன் அய்யய்யோ எனக்கு ஜெனரல் நாலேஜ் எல்லாம் வராதுடா என சொல்லுகிறார். அப்படின்னா கண்டிப்பா நான் அந்த நிகழ்ச்சிக்கு கலந்துக்கவே மாட்டேன் என சொல்கிறார்.

முத்துவை முதுகில் அடித்த நபர்.. குப்பைமேடு கோபுரம் என அண்ணாமலையை அசிங்கப்படுத்தும் ஸ்ருதியின் அப்பா.. சரக்கை ஊத்தி கொடுக்க ரெடியான நபர்..

இல்லன்னா நான் சும்மா கிண்டல் பண்ணேன், அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நம்மள மாதிரி  அவங்களும் வருவாங்க யார் யாருக்கு எந்த பொண்ணு எந்த மாப்பிள்ளை புடிச்சிருக்கோ அவங்க பேசிக்குவாங்க அவ்வளவுதான் என சொல்லி சரவணணை சமாதானப்படுத்துகிறார்.

மேலும் அடுத்த நாள் அந்த நிகழ்ச்சிக்கு போவதற்காக  சரவணணை பாண்டியன் கூப்பிடுவார். அதற்கு பாண்டியன் முடியாது என சொல்கிறார். உடனே பாண்டியன் பிளாக் மெயில் பண்ணுவது போல் காலையிலேயே இந்த வெயில் மண்டைய பொளக்குது மதியம் எப்படி இருக்குமோ இன்னும் எத்தனை நாள் தான் நான் செருப்பு போடாம இருக்கணுமோ என சொல்லுகிறார். உடனே சரவணன் வாங்கப்பா போகலாம் என சொல்கிறார்.

அதற்கு பாண்டியன் உனக்கு நான் புது டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் அதை போட்டுக்கிட்டு வா என சொல்லி அனுப்பி விடுகிறார். பட்டு வேஷ்டி சட்டை எல்லாம் கட்டிக்கொண்டு மாப்பிள்ளை போல் கிளம்பி வருகிறார். எல்லாரும் கிளம்பிட்டோம் வாங்க போகலாம் என சொல்ல உடனே பாண்டியன் எங்க நீங்க எல்லாம் வரீங்க நீங்களாம் யாரும் வேண்டாம் நாங்க மட்டும் போறோம் என பாண்டியன், கோமதி, சரவணன், மீனா கிளம்புகின்றனர்.

புகழுக்காகவும், பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட்… கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிரடி பேட்டி..

ஆனால் பழனியோ தாய் மாமா, நான் இல்லாம எப்படி என அடம் பிடிக்க உடனே கதிர் இவரையும் அழைச்சுட்டு போங்க  இவருக்கும் ஒரு வரன் அமைஞ்சாலும் அமையும் எனச் சொல்கிறார். அதோட கதிர், அண்ணன்  இந்த தடவை கண்டிப்பா உனக்கு ஒரு பொண்ண கெடச்சிடும் எனக்கு தோணுது என சொல்கிறார். அதுபோல அரசியும் அண்ணன் இந்த தடவை பெரிய அண்ணி  கிடைச்சிடுவாங்க என சொல்கிறார். மேலும் அனைவரும் சரவணனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு போகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.