ஜெனி காலில் விழுந்து கதறிய செழியன்!! இறங்கி வருவாரா.. கண்ணீரில் மிதக்கும் பாக்யா மரியம்..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ஜெனியையும் செழியனையும் தனியாக ஒரு ரூமில் போட்டு பூட்டி விடுகின்றனர். அவர்கள் இருவரும் பேசி எதுவாக இருந்தாலும் முடிவெடுத்துக்கட்டும் என வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இப்படி செய்கின்றனர்.

செழியனை  பார்த்ததும் ஜெனி கோபமாகி மம்மி மம்மி என டோரை தட்டுகிறார். ஆனால் பாக்யாவோ திறக்க கூடாது என சொல்கிறார். அப்போது செழியன் உங்க அம்மா இங்க வந்து இருக்காங்களா என கேட்கிறார் . அதற்கு ஜெனி ஆமாம் இது எங்க அம்மாவோட ஃப்ரெண்ட் வீடு, அப்போ எங்க அம்மாவும் உங்க அம்மாவும் சேர்ந்து தான் நாம பேசிக்கனும்னு இங்க கொண்டு வந்து விட்டு இருக்காங்க போல என மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டு ஜெனி இடம் பேச ஆரம்பிக்கிறார்.

ஜெனி செழியனை பார்த்து என்கிட்ட பேசாத நம்ம எய்த் ஸ்டாண்டர்டிலிருந்து லவ் பண்ணி பல பிரச்சனைகளை தாண்டி எங்க அப்பா இவன கல்யாணம் பண்ணா நீ நடுத்தெருவில தான் நிக்கணும்னு சொன்னாரு அதெல்லாம் மீறி நான் உன்ன கல்யாணம் பண்ணினேன் ஆனா நீ என்ன பண்ணுன என கேட்கிறார். அதற்கு செழியனோ நான் தப்பு பண்ணிட்டேன், ஏன் தப்ப நான் உணர்ந்துட்டேன் என சொல்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல்  ஜெனியை பார்த்து நீ எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ணல எப்ப பாரு எங்க குடும்பத்தோட தான் இருந்த அதனால தான் இப்படி ஆச்சு என சொல்கிறார். அதற்கு ஜெனியோ நான் என்ன அக்கம் பக்கத்து குடும்பத்தோட பேசிட்டு இருந்தான உங்க குடும்பத்தோட தானே பேசிட்டு இருந்தேன் உன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்தப்ப உங்க அம்மா மட்டும் தான் என்கிட்ட பேசினாங்க மத்தவங்க யாரும் என்கிட்ட பேசல அவங்க கிட்ட ஒரு ரிலேஷன்ஷிப் பாண்ட் பண்ணவே எனக்கு ரொம்ப டைம் எடுத்துகிச்சு.

இப்ப சொல்றல்ல நான் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணலைன்னு இத அப்பவே சொல்லி இருக்கணும் என சொல்கிறாள். அதற்கு நான் சொன்னேன் நீ தான் பெருசா எடுத்துக்கல  என சொல்கிறார். அதோடு மட்டுமில்லாமல் அதனால தான் நீ அவளை காதலிச்சியா என ஜெனி கேட்கிறார். சீச்சீ நான் அவளை காதலிக்கவே இல்ல  அவதான் என்ன மிரட்டி மிரட்டி சிம்பதி கிரியேட் பண்ணி எல்லாம் பண்ணுனா என சொல்கிறார்.

மேலும் செழியன் ஜெனி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது. நீ என்கூட இருக்கும்போது உன்னோட அருமை தெரியல நீ என்ன விட்டு போனதுக்கு அப்புறம் தான் உன் அருமை தெரியுது ஜெனி என அழுகிறார் செழியன். உடனே ஜெனி செழியனை பலர் பளார் என அறைந்து உனக்கு எப்படி என்னையும் என் குழந்தையையும் விட்டுட்டு போக மனசு வந்தது என சொல்கிறார். உடனே வெளியில் இருக்கும் பாக்கியாவும்  மரியமும் என்ன சத்தமே கேக்கல வாங்க போய் திறந்து பார்க்கலாம் என சொல்லிவிட்டு  திறக்கின்றனர். அப்போது இவர்கள் இருவரும் சமாதானமாகி  கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றனர். இதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.