முத்துவை முதுகில் அடித்த நபர்.. குப்பைமேடு கோபுரம் என அண்ணாமலையை அசிங்கப்படுத்தும் ஸ்ருதியின் அப்பா.. சரக்கை ஊத்தி கொடுக்க ரெடியான நபர்..

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து அமைதியாக இருக்கிறார் மீனா பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்து கிண்டலாக ஏதோ பேச நீங்க பேசாம அமைதியாக இருங்க என பேசுகிறார் அந்த சமயத்தில் ஒரு போன் வருகிறது போன் வந்தவுடன் முத்து கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் சுதா அனுப்பிய ஆள் முத்து முதுகில் வேகமாக அடிக்கிறார் என் நண்பன் என்று நினைத்து அடித்தேன் என கூறுகிறார் உன் நண்பனா இருந்தாலும் முன்னாடி முகத்தை பார்க்க மாட்டியா என பேசுகிறார் முத்து.

அதுமட்டுமில்லாமல் இன்னும் அந்த நபர் கோபமாக பேசுகிறார் மீனா வந்து எதுக்கு அடிச்சுட்டு வேணும்னே பேசுறீங்க என பேச தெரியாம அடிச்சுட்டேன் அதுக்கு என்ன இப்போ என தேனாவட்டாக பேசுகிறார் ஆனால் முத்து சண்டை வரக்கூடாது என நான் பாத்துக்கிறேன் நீங்க போங்க நீங்க தெரியாம தானே அடிச்சீங்க போங்க உனக்கு நல்ல நேரம் என்பது போல் பேசுகிறார் முத்து. பிறகு உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ரொம்ப வலிக்கிறதா என மீனா கேட்க இல்லை எரியுது என பேசுகிறார்.

புகழுக்காகவும், பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட்… கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அதிரடி பேட்டி..

தெரியாம தான அடிச்சாங்க விடுங்க என பேச அப்படியே ஒரு பொண்ணு அஞ்சலி என உன் பின்னாடி அடிச்சு பேசினா எப்படி இருக்கும் அப்பதான் இந்த வலி தெரியும் என பேசுகிறார் உடனே மீனா அஞ்சலியை அது யாரு என பேசுகிறார் ஒரு உதாரணத்துக்கு சொன்ன உதாரணத்துக்காக இருந்தாலும் யோசிக்காமல் டக்குனு ஒரு பெயரை சொல்றீங்களே என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மீனாவை விஜயா அழைத்ததாக பார்வதி கூப்பிடுகிறார். அந்த சமயத்தில் குடிகாரர் ஒருவர் வருகிறார் முத்து தனியாக இருக்கிறான் எப்படியாவது குடிக்க வைத்து விட வேண்டும் என பேசுகிறார் ஆனால் அப்போது அண்ணாமலை முத்து பக்கத்தில் வர முத்து இழுத்து வைத்து உட்கார சொல்கிறார். அண்ணாமலையும் முத்து பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் விஜயா எங்கேயாவது இருக்கீங்க ஏதோ மூணாவது மனுஷன் காரியம் மாதிரி உட்கார்ந்து இருக்கீங்களே போய் சம்பந்தி கிட்ட பேசிட்டு இருங்க என பேசுகிறார்.

சரி வா அவன் கிட்ட போய் பேசுவோம் அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க என அண்ணாமலை பேசப் போகிறார் ஆனால் சுருதியின் அப்பா அண்ணாமலையை கண்டு கொள்ளவே இல்லை உடனே சிறிது தூரம் தள்ளி சென்று இவன் என்ன இப்படி சீன் போடுறான் என அண்ணாமலை நண்பர் பேசுகிறார் அந்த சமயத்தில் ஸ்ருதியின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த நபர் அண்ணாமலையை பார்த்து நலம் விசாரிக்கிறார். உங்கள மாதிரி நேர்மையான ஆள பாக்கவே முடியாது என பெருமையாக பேசுகிறார் அண்ணாமலையை பற்றி அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை பையனுக்கு தானே உங்க பொண்ண கொடுத்து இருக்கீங்க என பேசுகிறார்.

பதின்ம வயதிலேயே நடிகையுடன் தனிமையில் இருந்து லீக் ஆன புகைப்படம்.. அனிருத் கிரீன் சிக்னல் காட்டியும் வேண்டாம் என மறுத்த டிடி.

அதற்கு ஸ்ருதியின் அப்பா சில நேரம் குப்பை கோபுரம் ஆகும் அதெல்லாம் நம்ம ஒன்னும் பண்ண முடியாது என பேச அதற்கு அண்ணாமலை நம்மள குப்பம்னு சொல்றான் அவன் கோபுரமா இவனெல்லாம் திருந்தவே மாட்டான் என பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் விஜயா ரோகிணியின் அப்பா வந்துட்டாரா என பேசிக்கொண்டே வருகிறார்கள். அதேபோல் முத்துவிடம் அந்த குடிகாரர் ஒயின்ஷாப்பில் பார்த்ததாக பேசிக் கொண்டிருக்கிறார் தெரியவில்லை என சொல்லி சமாளிக்கிறார்.

மற்றொரு காட்சியில் ரோகிணியின் அப்பா வருவதற்கு லேட் ஆகிறது அதனால் ஸ்ருதியை உட்கார வைத்து சடங்கு செய்யலாம் என பேசுகிறார் விஜயா அதற்கு மனோஜ் ரோகிணி தான் சீனியர் அவளுக்கு தான் முதலில் சடங்கு செய்ய வேண்டும் என பேச அதற்கு இல்ல நேரம் ஆகுது அவங்க அப்பா இன்னும் வரல கல்யாணத்தை தான் பார்க்கல அட்லீஸ்ட் இந்த பங்க்சனையாவது பார்க்கட்டும் அதனால முதலில் ஸ்ருதியை உக்கார வைத்து சடங்கு செய்யலாம் என விஜயா முடிவு செய்து சம்பந்தி சுதாவிடம் சொல்லப் போகிறார்.