கதிர் அசிங்கப்பட்டதை நினைத்து வருத்தப்படும் ராஜி!! ராஜியிடம் மோசமாக நடந்து கொள்ளும் கதிர்.. பரபரப்பாக பாண்டியன் ஸ்டோர் 2..

pandiyan stores 2 பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில் பாண்டியன் தனது பெரிய மகன் சரவணனிடம் நீ போய் உனக்கு புடிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்க என சொல்லிக் கொண்டிருக்கிறார்.அதற்கு சரவணன் நீங்க எந்த பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களோ அந்த பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என சத்தியம் பண்ணுகிறார்.

அதனைத் தொடர்ந்து ராஜி வீட்டின் ஜன்னல் வழியே அவங்க அப்பா வீட்டின் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவும் அவள் பின்னாடியே நின்னு என்ன தெரிகிறது என பார்க்கிறார். அந்த நேரத்தில் கோமதி வந்து என்ன நீ இங்க இருக்குறன்னு உன்ன பாப்பாங்கன்னு நினைச்சியா அந்த அளவுக்கு அவங்க நல்லவங்க கிடையாது என சொல்கிறார்.

ஏன் நடிகைகளை ஆடையின்றி நிற்க வைத்தேன் தெரியுமா..?

பின்னர் மீனா ராஜியிடம் வா நம்ம போய் கோலம் போடலாம் என கூப்பிடுகிறார். ராஜி கோலம் போடும்போது எதிர் வீட்டில் இருக்கும் தனது சித்தியை பார்க்கிறார் சித்தியிடம் பேசுகிறாள் ஆனால் சித்தி பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து வீட்டையே பார்க்கிறார் அப்போது அவரது அப்பா ஜன்னல் வழியாக துணியை தள்ளிவிட்டு மகளைப் பார்க்கிறார்.பிறகு அடுத்த சீனில் ராஜி வீட்டுக்கு பின்னாடி போகிறாள் அங்கு கதிர் சோகமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது ராஜி அவரின் பின்னாடி நின்று கொண்டு நகை பணத்திற்கு கதிர் மேல் பழி விழுந்து விட்டதே என யோசித்தபடியே நிற்கிறாள். கதிர் திரும்பி பார்க்கும் போது அங்கு அவள் நிற்பதை பார்த்து கோபமடைந்து தண்ணி பக்கெட்டை எட்டி உதைத்து விட்டு உள்ளே கோபமாக செல்கிறார்.

பிறகு அரசி தூங்கி விழுந்தபடியே படித்துக் கொண்டு இருக்கிறாள். உடனே செந்தில் என்ன படிக்க சொன்னா தூங்கி விழுந்து கிட்டு இருக்க என கேட்கிறார். இல்ல நைட் எல்லாம் எப்படி கல்யாணம் நடந்தது என்று யோசித்து தூக்கமே இல்ல அதனால தான் என்கிறாள்.உடனே செந்தில் மற்றும் செந்தில் மாமா என இருவருமே ஆமாம் எங்களுக்கும் கூட தான் தூக்கமே இல்லை இவங்க ரெண்டு பேருக்குள்ள எப்படி இப்படி ஒரு லவ்வுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம் என சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து கதிர் வந்து சோபாவில் உட்காருகிறார்.

15 நிமிடம் உதட்டை வாடகைக்கு விட்டு 3 கோடி வாங்கிய தனுஷ் பட நடிகை..

கோமதி அனைவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வருகிறார். டீ கொடுக்கும் போது கதிர் எனக்கு வேண்டாம் என கோபமாக அம்மாவை முறைத்தபடி சொல்கிறார். உடனே அதற்கு செந்தில் நியாயப்படி பார்த்த அம்மா தானே உன் மேல கோவப்படணும் ஆனா நீ என்னை அம்மா மேல கோவப்படுற என  கேள்வி கேட்கிறார். நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தப்ப அம்மா என்கூட பேசக்கூட இல்ல ஆனா உனக்கு டீ எல்லாம் போட்டு கொடுக்குறாங்க என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து நான் யாரோ ஆனா ராஜி அப்படி இல்ல அவங்க அண்ணன் பொண்ணு அதனாலதான் அத்தை இப்படி இருக்காங்க என சொல்கிறாள்.

உடனே அதனைத் தொடர்ந்து அரசி கதிரிடம் நீயும் ராஜி அண்ணியும் லவ் பண்ணீங்கன்னு நைட்டு மீனா அண்ணி சொன்ன கதை உண்மையா என கேட்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..