மீனாவால் வீட்டில் வெடிச்ச பிரச்சனை!! சந்தோஷத்தில் ராஜ்ஜியின் அம்மா..

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் பழனி தன் அண்ணன் வீட்டுக்கு போகிறார். அங்கு அவரது அம்மா என்னடா எங்கேயோ வெளியே போனீங்க என்ன ஆச்சு எனக் கேட்கிறார். சரவணனுக்கு பொண்ணு பாக்க போனோம் போன இடத்துல தம்பிங்களுக்கு ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அவருக்கு மட்டும் ஏன் ஆகல ஏதாவது பிரச்சனை இருக்கா எனக் சொல்லி பொண்ணு தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க எனக் கூறுகிறார்.

இதனால் பாட்டி வருத்தப்படுகிறார். அதோடு மட்டுமில்லாமல் ராஜியின் அம்மா ராஜி எப்படி இருக்கா என பழனியிடம் கேட்க அதற்கு பழனி என்ன ராஜிய பத்தி எல்லாம் கேக்குறீங்க எனக் பழனி கேட்கிறார் அதற்கு பழனியின் அம்மா என்னதான் இருந்தாலும் அவ பெத்த பொண்ணுடா பாசம் இல்லாமல் இருக்குமா என கூறுகிறார். உடனே அதற்கு பழனி அக்கா ஒரு வேலையும் விடுவதில்லை வேற எங்கேயாவது கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தால் கூட என்ன கஷ்டப்படுகிறான்னு தெரியாது இங்க அக்கா அவளை தான் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறா. அதுமட்டுமில்லாம மாமாவும் கதிர் மேல தான் கோபமா இருக்காரு ராஜிய நல்லா பாத்துக்கிறாரு என கூறுகிறார். இதைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

சத்யாவுக்கு சரக்கை ஊற்றி கொடுத்து 500 மாலையை வண்டியுடன் கடத்த சொன்ன சிட்டி.. இந்தப் பிளானில் இருந்து முத்து தப்பிப்பாரா

அதைதொடர்ந்து பாண்டியன் வீட்டில் அனைவரும் ஹாலில் சாப்பிட உட்கார்ந்து இருக்கின்ற னர். அப்போது ராஜியும்  சாப்பிடவருகிறார், வந்து ஒரு சேரில் உட்காருகிறாள். அப்போது அரசி இது அப்பா உட்கார்ற சேர் நீங்க போய் அண்ணன் பக்கத்துல உக்காருங்க என சொல்கிறார். உடனே ராஜ்ஜியம் சிறிது நேரம் நின்று யோசித்து வீட்டு பிறகு கதிரின் பக்கத்தில் போய் உட்காருகிறார். அதனைத் தொடர்ந்து மீனாவும் சாப்பிடுவதற்கு செந்தில் பக்கத்தில் உட்கார போகிறார். செந்தில் அண்ணனுக்கு மீனா பொண்ணு பாக்க அழைத்துவிட்டு போய் அசிங்கப்படுத்திவிட்டதால் கோபத்தில் இருப்பதால் மீனாவை முறைக்கிறார், உடனே மீனா  உட்காராமல் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது கதிர், செந்தில் என அனைவரும் சரவணனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். உனக்கு என்ன அண்ணா, நீ ராஜா மாதிரி இருக்க உனக்கு ஒரு நல்ல பொண்ணா நாங்க பார்ப்போம் கவலைப்படாத என பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே பாண்டியன் சாப்பிட உட்காருகிறார்.  சாப்பிடும் போதே ரொம்ப அண்ணன் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காதீங்கடா நீங்கயேல்லாம் சுயநலவாதிங்க நீங்க கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அண்ணன் ஒருத்தன் இருக்கானே அவன் வாழ்க்கை என்ன ஆகிறது என யோசிச்சிங்களா என பேசுகிறார். இதனால் அனைவரும் வருத்தப்படுகின்றனர். கதிரோ கோமதியை பார்த்து முறைக்கிறார்.

விஜயா மூக்கிலிருந்து ரத்தம் வருது பாரு.. கிச்சடியை திருடி தின்னு முத்துவிடம் மாட்டி கொண்ட மனோஜ், ரோகினி..

உடனே பழனி நீங்க கவலைப்படுறதெல்லாம் சரி தான்,  அவனோட பெரியவன் ஒருத்தன் இருக்கன் எனக்கு கல்யாணம் பண்றது பத்தி யாராவது யோசிச்சீங்களா எனக் கேட்க  அதற்கு கோமதி உனக்கு தான் ஒரு பொண்ண பார்த்தோம்ல நீ தான புடிக்கலைன்னு சொல்லிட்ட என்ன கூறுகிறார்.

ஆமாம் எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ண காமிச்சிங்க முதல் பொண்ணையே  ஓகே சொல்லணுமான்னு நான் வேணான்னு சொல்லிட்டேன் இன்னமும் அதையே சொல்லிட்டு இருக்கீங்க, அப்ப எனக்கு கடைசி வரைக்கும் பொண்னே பார்க்க மாட்டீங்களா என பேசிக்கொண்டு இருக்கிறார்.அப்போது செந்திலும் கதிரும் மாமா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு குழந்தை பிறந்துடுச்சு என்ன சொல்கின்றனர்.

வாராயோ வாராயோ என்ற பாடலுக்கு ரொமான்டிக்காக டான்ஸ் ஆடி தனது மொத்த காதலையும் அனைவர் முன்பும் வெளிப்படுத்தும் மகா!! ஷாக் ஆகும் சூர்யா.. ஆஹா கல்யாணம்.

அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் ரூமுக்கு செல்கின்றனர். மீனா செந்திலிடம் பேச முயற்சி செய்கிறாள். அதற்கு செந்தில் என்கிட்ட பேசாத வாய மூடிட்டு தூங்கு இன்னைக்கு நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் என மீனாவை திட்டுகிறார். நீ சொன்னேனு நாங்க பொண்ணு பாக்க வந்தோம்ல  எங்கள தான் சொல்லணும் என இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.