வாராயோ வாராயோ என்ற பாடலுக்கு ரொமான்டிக்காக டான்ஸ் ஆடி தனது மொத்த காதலையும் அனைவர் முன்பும் வெளிப்படுத்தும் மகா!! ஷாக் ஆகும் சூர்யா.. ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோவில்  சூர்யா வீட்டில் பூஜை செய்கின்றனர். மகா பூஜை செய்ய போகிறார் அப்போது நெற்றியில் போட்டு இல்லை என ராஜலட்சுமி மகாவை பொட்டு வைத்துவிட்டு வர சொல்கிறார். மகாவும் பொட்டு வைக்க போகிறார். அதற்கு பாட்டி சூர்யாவிடம் பூஜையில் இருக்கும் குங்குமத்தை எடுத்து மகாவின் நெற்றியில் வைக்க சொல்கிறார்.

சூர்யாவும் மகாவுக்கு பொட்டு வைத்து விடுகிறார் . உடனே அதையே ராஜலட்சுமி பார்க்கிறார். அடுத்த சீனில் கார்டனில் பெண்கள் ஒரு டீம் ஆகவும் ஆண்கள் ஒரு டீம் ஆகவும்  கயிறு இழுத்து விளையாடுகின்றனர். அப்போது ஆண்கள் வேகமாக இருப்பதால் மகா வந்து சூர்யாவின் மேல் விழுந்து விடுகிறார். இருவரும் கட்டிப் பிடித்தபடி கீழே விழுந்து கிடக்கின்றனர். இதைப் பார்த்த ராஜலட்சுமி கடுப்பாகிறாள்.

கோபி மண்டையிலேயே அடித்த ராதிகா.. தட்டிக் கேட்கப் போன ஈஸ்வரிக்கு சரியான செருப்படி பதில் கொடுத்த மருமகள்.. கோவத்தின் உச்சத்தில் மாமியார்..

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில் ஸ்டேஜ் போட்டு டான்ஸ் ஆடுகின்றனர். அப்படி டான்ஸ் ஆடும் போது சூர்யாவும் மகாவும்  சேர்ந்து வாராயோ வாராயோ  மோனாலிசா என்ற பாடலுக்கு ரொமான்டிக்காக டான்ஸ் ஆடுகின்றனர். ரொமான்டிக்காக டான்ஸ் ஆடும் போது மகா சூர்யாவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து விடுகிறாள். முத்தம் கொடுத்ததால் சூர்யா மகாவையே உத்து பார்க்கிறார்.

அங்கு சூர்யா மகா இருவரும் சந்தோஷமாக இருக்கின்றதை  எரிச்சலுடன் நடக்கின்ற அனைத்தையும் கௌதம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த பிரம்மோ முடிவடைகிறது.

உன்ன கல்யாணம் பண்ணதுக்கு செத்தே போயிருக்கலாம்.. கதிரிடம் சொன்ன ராஜி ஒட்டு கேட்ட கோமதி… மோதலில் ஆரம்பிக்கும் காதல்..