உன்ன கல்யாணம் பண்ணதுக்கு செத்தே போயிருக்கலாம்.. கதிரிடம் சொன்ன ராஜி ஒட்டு கேட்ட கோமதி… மோதலில் ஆரம்பிக்கும் காதல்..

பாண்டியன் ஸ்டோர் 2  தற்போது வெளிவந்த ப்ரோமோவில் கதிர் ராஜியிடம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சண்டை போடுகிறார். அதற்கு ராஜி  உன்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்னை கேட்டனா. இல்ல உங்க அம்மாகிட்ட கேட்டனா நடந்த கல்யாணம் எப்படி உனக்கு பிடிக்கலையோ அதே மாதிரி தான் எனக்கும் பிடிக்கல என கோபமாக சொல்கிறாள்.

கோபமாக பேசிவிட்டு பிறகு ரூம் கதவை திறந்து வெளியே போகிறார். அங்கு ரூமுக்கு வெளியே கோமதியும் மீனாவும் இவர்கள் சண்டை போடுவதை நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உடனே கோமதியின் கையை பிடித்து உள்ளே இழுக்கிறார் ராஜி.

அர்ஜுனை தூக்கி எறிந்து விட்டு தமிழை கண்ணீருடன் கட்டிப்பிடிக்கும் ராகினி..! வயிறு எறிந்து நிற்கும் அர்ஜுன் குடும்பம்.

உள்ளே போனதும் யாரு உங்கள எங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொன்னது என கேட்கிறார். அதற்கு கோமதி நீ செத்துப் போறேன்னு சொன்ன அதான் நான் பண்ணி வச்சேன்  என சொல்கிறார். இப்படி தினம் தினம் செத்துகிட்டு இருக்கற த்துக்கு நான் அன்னைக்கே செத்து இருப்பேன் என ராஜி கோபமாக கூறுகிறார். ராஜி பேசுவதை கதிர் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து அடுத்த சீனில் ராஜி ரூமை கிளீன் செய்துவிட்டு கிடக்கின்ற அழுக்கு துணியெல்லாம் பக்கெட்டில் எடுத்து வைக்கிறார். அதைப் பார்த்த கதிர் ஏன் என் சட்டை எல்லாம் எடுத்து வைக்கிற என கேட்கிறார். அதற்கு ராஜியோ எக்சிபிஷன்ல வைக்க போறேன் என கூறுகிறார். இதெல்லாம் துவைத்து எத்தனை மாசம் ஆகுதுன்னு தெரியல அழுக்கா இருக்கு எனசொல்லுகிறார். அதற்கு கதிர் வருஷ கணக்குல ஆகுது என சொல்லிவிட்டு என் துணியை நீ துவைக்க கூடாது என சொல்லி விடுகிறார்.

சொல்லி அடித்த கில்லி.. சவால் விட்டு ஜெயித்த இளையராஜா.. தேசிய விருதை வென்றது இப்படி தானா..

உடனே கோபமான ராஜி பெட்டில் இருந்த தலகாணி போர்வை என அனைத்தையும் கலைத்து போடுகிறார். அதைப் பார்த்து கதிர் ஏன் இப்படி பண்ற என கேட்க அதற்கு ராஜியோ ஆமாம் நீதான நான் எதுவும் செய்யக்கூடாதுன்னு சொன்னல நீயே பண்ணிக்கோ என களைத்து போட்டு விடுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.