மீனாவின் ஜோசியம் பலித்தது.! சம்பாதித்த பணத்தை பொண்டாட்டியிடம் கொடுத்த கதிர்!! சந்தோஷத்தில் திக்கு முக்காடும் ராஜி.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடில் கதிர் கார் ஓட்டும் வேலைக்கு போய் வந்ததில்  அந்த மேனேஜர் சம்பளம்  கொடுக்கிறார். அதனை வாங்கிக் கொண்டு வருகிறார் கதிர். அதற்குள் வீட்டில் இருக்கும் அண்ணன்கள் கதிரை இன்னும் காணும் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அங்கு சரவணணின் அக்கா வந்து சரவணனுக்கு பொண்ணு பார்த்தத பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல கல்யாணத்தை கூட என்கிட்ட சொல்ல மாட்டீங்க போல பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி தான் எனக்கு எல்லாம் தெரியுது என்னை எதுக்கும் கூப்பிட மாட்டீங்களா என கோபப்பட அவரை சமாதானப்படுத்தி உட்கார சொல்கிறார் பாண்டியன்.

அதனைத்தொடர்ந்து கதிர் வீட்டுக்கு வருகிறார்.  உடனே பாண்டியன் எங்கேயாவது போனா சொல்லிட்டு போறது இல்லையா என பேசுகிறார். அதனைத் தொடர்ந்து கோமதியும் ஏன்டா எங்க போன சொல்லிட்டு போக மாட்டியா என கேட்க நான்தான் அண்ணன் கிட்ட சொல்லிட்டு போனேனே என சொல்கிறார். சரி காபி குடிக்கிறியா என கேட்க அதற்கு வேண்டாம் என சொல்லிவிட்டு ரூமுக்கு போய் கதிர் தூங்குகிறார்.

அண்ணாமலை கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்த ரவி.. சோறு கிடைச்ச இடம் சொர்க்கமோ… முத்து உன் வயித்துல பிறந்தவன் தானே விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா…

அப்போது அங்கு காலேஜுக்கு கிளம்பி வந்த ராஜி கதிர் தூங்குவதை பார்த்துவிட்டு டிஸ்டர்ப் பண்ண கூடாது என்பதற்காக பொறுமையாக  பேக்கில் புத்தகம் டிபன் பாக்ஸ் அனைத்தையும் வைக்கிறார். ஆனால் பேகை  எடுக்கும் போது டம்ளரை கீழே தெரியாமல் தட்டி விட்டு விடுகிறார்.

உடனே எழுந்த கதிர் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து டேபிள் மேல் வைத்து உன் செலவுக்கு எடுத்துக்கிட்டு போ என சொல்கிறார். அதற்கு ராஜி என்கிட்ட பணம் இருக்கு என சொல்ல நேத்து நடந்த எல்லா விஷயமும் எனக்கு தெரியும் நேத்து மாதிரி இன்னைக்கும் காலேஜுக்கு நடந்து போக போறியா எடுத்துட்டு போ என சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் உனக்கு பணம் ஏதாவது வேணும்ணா என்கிட்ட கேளு, எங்க அம்மா அப்பாக்கிட்ட கேட்காத என சொல்கிறார்.

முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொன்ன விஜயா… அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆட்டம் கண்ட குடும்பம்.

ஆனால் ராஜியோ பணத்தை எடுக்காமல் போய்விடுவார். ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய நாய் ராஜியை துரத்துகிறது.உடனே ராஜு வீட்டுக்குள் வருகிறாள். என்ன ஆச்சு என்னாச்சு யாராவது உன்கிட்ட வம்பு பண்றாங்களா என கோமதி கேட்க இல்ல ஒரு பெரிய நாய் என்ன துரத்திட்டு வந்துது என சொல்கிறாள். உடனே சொல்லிவிட்டு ரூமுக்கு போய்  பணத்தை எடுக்கிறார். அப்போது கதிர் இத அப்பவே எடுத்துட்டு போயிருக்கலாமே காலையில இங்குறதால  நாய் தொறத்துச்சு இதுவே சாயங்காலமா இருந்ததுனா பேய் துரத்தும் என சொல்ல பணத்தை எடுத்துக் கொண்டு ராஜி சந்தோஷமாக சிரித்தபடியே போகிறார்.

மேலும் ராஜியும் மீனாவும் சேர்ந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போகின்றனர். அப்போது மீனா ஆபிசுக்கு போறதெல்லாம் கஷ்டமா இருக்கு வீட்டிலேயே இருக்கிறது தான் ஜாலியா இருக்கு என சொல்லிக்கொண்டு போகிறார். ஆனால் ராஜி எதையும் காதில் வாங்காமல் கதிர் பேசியதே நினைத்து சிரித்தபடி வருகிறார். உடனே மீனா நான் என்ன சொல்லிக்கிட்டு வந்தேன்னு  தெரியுமா என கேட்க ஆம் தெரியும் நீங்க ஆபீஸ்க்கு போக தான் புடிச்சிருக்குன்னு சொன்னீங்க எனச் சொல்ல நான் என்ன சொன்னேனோ அதுக்கு நேர் எதிர்மறையா நீ சொல்ற என மீனாவிடம் சொல்கிறார்.

இதுவரை மீடியா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் சந்தனத்தின் மனைவி இவர்தானா.. வைரலாகும் புகைப்படம்

அதனைத் தொடர்ந்து ராஜி கதிர் சொன்ன அனைத்தையும் மீனா விடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்கு மீனா நான் சொன்னது எல்லாமே நடக்குது பாரு, பேசாம நான் இந்த வேலைய விட்டுட்டு ஒரு ஜோசியராவே போயிடலாம் போல, அதுக்கு தான் இப்ப நல்ல வருமானமும் இருக்கு என சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் மீனா பாறேன் என் புருஷன் நான் டெய்லி பஸ்ல போறேன் காசு இருக்கான்னு கூட கேட்டதில்லை என சொல்கிறார். ராஜியோ கதிர் பேசியதையே நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு மீனா பேசுவதை கேட்காமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.