அண்ணாமலை கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்த ரவி.. சோறு கிடைச்ச இடம் சொர்க்கமோ… முத்து உன் வயித்துல பிறந்தவன் தானே விஜயா நீயெல்லாம் ஒரு அம்மாவா…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் தங்க நகையை திருடி விட்டார் என மீனா மீது வாசுதேவன் பழியை போடுகிறார் ஆனால் முத்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வாசுதேவன் நீங்க திருடறதுக்காக தான் வந்திருக்கீங்க உங்க புத்தியே இதுதான் உங்க லெவல்ல இத தான் யோசிப்பீங்க என வாய்க்கு வந்தபடி பேசுகிறார் இது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை கோபப்பட்டு வாசுதேவன் கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசுங்க என பேசுகிறார்.

ஆனாலும் வாசுதேவன் வாயை அடக்காமல் ஓவராக பேசிக் கொண்டிருக்கிறார். நீ தான் பூ கட்டுறியே பேசாம கோவிலில் உட்கார்ந்து பிச்சை எடுக்க வேண்டியது தானே என மீனாவை பார்த்து பேச உடனே முத்துவுக்கு கோவம் வந்து நாலு அரை வைக்கிறார் உடனே அனைவரும் தடுத்து நிறுத்தி முத்துவை இழுத்து வருகிறார்கள் மேலும் சுருதியின் அம்மா அதுக்காக தான் இந்த குடிகாரனை வேண்டான்னு சொன்ன இப்ப எல்லா சொந்தக்காரங்க முன்னாடியும்  அவமானப்படுத்திட்டீங்க என பேசுகிறார்.

முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொன்ன விஜயா… அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆட்டம் கண்ட குடும்பம்.

உடனே விஜயாவும் கொஞ்சம் அமைதியா இருங்க நான் உங்ககிட்ட அவன் பண்ணதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் என சொல்லிவிட்டு இதுக்காக தான் இந்த குடிகாரனை ஃபங்சனுக்கு வேண்டான்னு சொன்னன் என்  புள்ள என் புள்ளன்னு சொல்லிட்டு நீங்கதானே அழைத்து கொண்டு வந்தீங்க என அண்ணாமலை பார்த்து பேசுகிறார் உடனே அண்ணாமலை கோபப்பட்டு அவன் பேசுறது மட்டும் சரியா வாசுதேவன் பேசினதால் தானே இவனுக்கு கோவம் வந்துச்சு கொஞ்சம் அமைதியா இருந்தா இந்த சண்டையே வந்து இருக்காது சின்ன விஷயத்தை பெருசாக்குனது வாசுதேவன் தான் என பேசுகிறார்.

உடனே முத்து இதுக்கு மேல அவங்களும் பேசுறாங்கன்னு மீனாவை பத்தி தப்பா பேசினீங்க யாராவது அவ்வளவுதான் என விஜயாவை மிரட்டி விட்டு செல்கிறார். அடுத்த காட்சியில் ரோகிணி மற்றும் மனோஜ் முத்து செய்தது தவறுதான் ஆயிரம் தான் இருந்தாலும் பெரியவரை கை நீட்ட கூடாது என விஜயாவிடம் ஏற்றி விடுகிறார்கள் அந்த சமயத்தில் அண்ணாமலை வர அண்ணாமலை இடம் இப்ப பிரச்சனை பண்ணது உங்க புள்ள தான் என பேசுகிறார்.

இதுவரை மீடியா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் சந்தனத்தின் மனைவி இவர்தானா.. வைரலாகும் புகைப்படம்

உடனே அண்ணாமலை ரவி வந்துட்டானா என கேட்க அவன் எப்படி வருவான் இனிமேல் அங்கேயே தான் இருப்பான் என கூறுகிறார்கள் அது பிரச்சனை இன்னும் பெருசா இருக்கும் உடனே அவனை வர சொல்லு என பேசுகிறார் சரி நானே போன் பண்ணி பேசுகிறேன் என அண்ணாமலை ரவியை  கூப்பிடுகிறார் ஆனால் எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ பிரச்சனை வருகிறது யாரோ செஞ்ச தப்புக்கு நான் ஏன் பளிகடை ஆகணும் என  ரவி அண்ணாமலையிடம் பேசுகிறார் என்ன தான் இருந்தாலும் உன் அண்ணன் என அண்ணாமலை கூற அதற்கு நான் என்ன பண்ண முடியும் நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம் எனக் கூற எனக்கு இப்ப வரணும்னு தோணவே இல்லை என்பது போல் ரவி கூறுகிறார்.

அடுத்த காட்சியில் முத்து வந்தவுடன் முத்துவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஜயா அதற்கு முத்து மீனாவிடம் எல்லா துணியும் எடுத்துட்டு  கிளம்பலாம் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.