முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியே போக சொன்ன விஜயா… அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவால் ஆட்டம் கண்ட குடும்பம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே சுருதி மற்றும் ரோகினிக்கு தாலி பிரித்து கோக்கும் பங்க்ஷன் நல்லபடியாக முடிவடைந்தது ஆனால் அந்த சமயத்தில் ஸ்ருதி கழட்டி போட்ட மாலையில் ஸ்ருதியின் செயின் மாட்டிக்கொண்டது அதனை எடுத்து கொடுப்பதற்குள் மீனா மீது திருட்டு பழியை சுமத்துகிறார் ஸ்ருதியின் அப்பா அதனால் மீனா அழுது கொண்டே முத்து விடம் கூற முத்து கோவப்பட்டு மீனா அப்படி செய்யற பொண்ணே கிடையாத என எவ்வளவு சொல்லியும் ஸ்ருதியின் அப்பா கேட்காமல் வேண்டுமென்றே ஒரு நாடகமாடுகிறார் அதனால் முத்து கோபப்பட்டு அவரை அடிக்கிறார்.

முத்து அவரை அடித்ததால் ஸ்ருதியை ரவி வீட்டுக்கு கூப்பிட சுருதி வர முடியாது எனக்கூற உடனே ரவியும் அங்கேயே இருக்கிறார் இதனால் விஜயா கடுப்பாகிறார் அண்ணாமலையும் எவ்வளவு சொல்லியும் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் விஜயா கோபத்துடன் சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து மற்றும் மீனா இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள்.

இதுவரை மீடியா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் சந்தனத்தின் மனைவி இவர்தானா.. வைரலாகும் புகைப்படம்

அவர்கள் வந்ததும் நில்லுடா என விஜயா கூறி இவங்க ரெண்டு பேரையும் வீட்டிலேயே இருக்கக் கூடாது என வீட்ட விட்டு வெளியில் போங்க என கூறுகிறார் ஆனால் அண்ணாமலை அவங்க ரெண்டு பேரும் எங்க போவாங்க எதுக்கு தேவையில்லாத வார்த்தையை பேசுகிற என பேசிக்கொண்டு இருக்கிறார் உடனே முத்து இப்ப என்ன நான் வீட்டை விட்டு வெளியே போகணும் அவ்வளவு தானே மீனா நீ போய்ட்டு துணி எல்லாத்தையும் எடுத்து வை வாங்கப்பா போகலாம் என அண்ணாமலையை அழைக்கிறார் அண்ணாமலை கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுந்து கிளம்ப போகிறார்.

இதனால் விஜயா ஆட்டம் கண்டு நீங்க ஏன் போறீங்க எனக் கேட்க என் புள்ள என்ன கூப்பிடுறான்  அதனால போறேன் என அண்ணாமலை மூஞ்சில் அடித்தது போல் பேசுகிறார். இதனால் ரோகிணி மனோஜ்  என அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது..

ஆர்யாவுக்கு பெண் பார்த்த அபர்ணதியா இது.! சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமரான போஸ்..