கதிருக்காக சமைக்கும் ராஜி.. வெறுப்பாக இருப்பது போல் நடித்துவிட்டு ருசிச்சு சாப்பிட்ட கதிர்.. மறைந்திருந்து பார்த்த ராஜி.. சரவணனுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில் வில்லங்கம் செய்யப்போகும் குமரவேல்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியலில் சரவணனுக்கு பெண் பார்க்க போக அனைவரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இந்த சம்பந்தம் சரி வருமா கடைசியில் அனைத்தும் பார்த்துவிட்டு சம்பந்தம் சரி இல்லை என்று சொன்னால் கஷ்டமாக போய்விடும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக இந்த சம்பந்தம் சரியாகிவிடும் என மீனா கூறுகிறார் அதே போல் பெண் பார்க்க நானும் வருகிறேன் என அரசி கேட்க நீ காலேஜுக்கு போ என கூறி விடுகிறார்.

அதேபோல் கதிர் நா வரலாமா என கேட்க அமைதியாக இருந்துவிட்டு மீனா செந்தில் சரவணன் கோமதி கோமதி தம்பி என அனைவரும் போகலாம் என கூறிவிடுகிறார் பாண்டியன். பெண் பார்க்க போகும் இடத்தில் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் பெண் வீட்டிற்கு போகிறார்கள் அவர்களும் வரவேற்கிறார்கள். அதேபோல் மற்றொரு பக்கம் ராஜி youtube பார்த்து சமைத்துக் கொண்டிருக்கிறார்.

கூண்டுக்குள் அடைபட்ட பச்சைக்கிளி 19 வயது அனிகா..! இதுதான் வடிவேலு வர்ஷானா

ஆரம்பத்தில் ஏதோ சூப் செய்து டேபிளில் வைக்கிறார் கதிர் நான் உன்கிட்ட சாப்பாடு கேட்டேனா என வம்பு செய்கிறார் எல்லாத்தையும் செஞ்சுட்டு நடிக்கிறியா என பேசுகிறார். அதேபோல் ராஜி அத்தை சாப்பாடு கொடுக்க சொன்னாங்க கொடுத்துட்டேன் நீ சாப்பிடு சாப்பிடாட்டி இரு என கூறிவிட்டு பிளேட்டில் சாப்பாட்டை போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார்.

நான்தான் வேணாம்னு சொல்றேன்ல அப்புறம் எதுக்கு வைக்கிற என கேட்க அத்த சொன்னாங்க அதுக்கப்புறம் நீங்க சாப்பாடு கொடுக்கலன்னு சொல்லுவீங்க எதுக்கு தேவையில்லாத சாப்பிடுங்க சாப்பிடாட்டி போங்க எனக்கு என்ன. செய்யறது எல்லாம் செஞ்சுட்டு காதல் இருக்கிற மாதிரி நடிக்கிறியா என பேச காதலனும் இல்ல ஒரு கத்திரிக்காவும் இல்லை என்பது போல் ராஜி பேசுகிறார்.

பழசை குத்திக் காட்டுவது போல் கதிரும் பேசுகிறார் ஆனால் ராஜு உள்ளே சென்றவுடன் ராஜி ஆசை ஆசையாக சமைத்ததை எடுத்து ருசித்து சாப்பிடுகிறார் இதனை ராஜியும் பார்த்து விடுகிறார் இருவருக்கும் காதல் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் பெண் பார்க்க போன இடத்தில் பெண்ணிடம் காபி கொடுத்து கொடுக்க சொல்கிறார்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சரவணனுக்கு வெக்கவேக்கமாக இருக்கிறது.

ராகினியை ஏற்றிவிட்டு குளிர் காய நினைக்கும் அர்ஜுன் குடும்பம்..! அர்ஜுன் இல்லாத நேரம் பார்த்து பெரிய ஆப்பாக வைக்கும் தமிழ்..

இரு வீட்டருக்கும் பெண்ணை பிடித்து விட்டது அதனால் இந்த மாதத்திலேயே முகூர்த்தத்தை பிக்ஸ் பண்ணிவிடலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் குமரவேல் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து அந்த  மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர் வீட்டிற்கு பாண்டியன் குடும்பம் போய் இருக்கிறார்கள் என பேசுகிறார் உடனே எதற்காக இருக்கும் அந்த சரவணனுக்கு பொண்ணு பாக்க தான் இருக்கும் என அனைவரும் கண்டுபிடித்து விடுகிறார்கள் ஆனால் பெரியவர் அவங்க ஏதாவது பண்ணிட்டு போகட்டும் நம்ம வேலையை பார்க்கலாம் என பேசுகிறார்.

இருந்தாலும் குமரவேல் அப்பா அதெல்லாம் முடியாது இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும் என பேசுகிறார் அந்த சமயத்தில் பெண் வீட்டாரருக்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது போனை எடுக்கிறார் அந்தப் பெண்ணின் அப்பா அது மட்டும் இல்லாமல் மெடிக்கல் ஷாப் எனக்கு தெரிந்தவர் வைக்கப் போகிறார் அதனால் உங்களை வந்து பார்க்க வேண்டும் என ஒரு பையன் கூறுகிறார் என ஏதேதோ பேசிவிட்டு பெண் பார்க்க வந்திருப்பதை விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

கோடீஸ்வரி அனுப்பிய வீடியோ.. தாலி கட்டும் நேரத்தில் ஹீரோ போல் வந்து காப்பாத்திய சூர்யா.! கௌதம் இனி நீ அவ்வளோதான்…

இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த குமரவேல் அப்பா முயற்சி செய்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.