கோடீஸ்வரி அனுப்பிய வீடியோ.. தாலி கட்டும் நேரத்தில் ஹீரோ போல் வந்து காப்பாத்திய சூர்யா.! கௌதம் இனி நீ அவ்வளோதான்…

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை கடத்தி வைத்திருக்கின்ற இடத்தை கண்டுபிடிக்க ரவுடிகளை பாலோ பண்ணி கோடீஸ்வரி ஆட்டோவில் செல்கிறார். அப்படி செல்லும் போது அவர்கள் வேறு வழியாக சென்று விடுகின்றனர்.ஆனால் அவர்கள் போனில் லொகேஷன் ஷேர் பண்ணியதை  ஞாபகம் வைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு  சரியாக கோடீஸ்வரி சென்று விடுகிறார்.

சூர்யாவும் ஹாஸ்பிடலில்  கௌதமை பார்க்க சென்றிருக்கின்றனர். அங்கு மகா ஐஸ்வர்யாவை காணும் என அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கிறார். பொது அவளுக்கு  ஒரு வீடியோ கால் வருகிறது. கோடீஸ்வரி ஐஸ்வர்யா இருக்கும் இடத்தில்   ஒளிந்து கொண்டு நடப்பதை வீடியோ காலில் மகாவுக்கு காண்பிக்கிறார். உடனே சூர்யாவும் மகாவும் அந்த இடத்தை கண்டுபிடிக் க சொல்லி போலீஸ் உடன் கிளம்புகின்றனர். அப்போது ரவுடி டான்ஸ் ஆடிக்கொண்டு ரொம்ப ஜாலியாக  ஐஸ்வர்யாவுக்கு தாலி கட்ட முயற்சிக்கிறார்.

ராகினியை கடத்திச் சென்ற ரவுடிகள்… பிறந்தநாள் அதுவுமாக ராகினிக்கு சர்ப்ரைஸ் செய்த தமிழ்…

ஐஸ்வர்யா தாலி கட்ட விடாமல் விடுடா விடுடா என தட்டி விட்டு கத்துகிறார். உடனே கோடீஸ்வரி ஐஸ்வர்யாவை கண்ண மூடச் சொல்லி அங்கிருக்கும் ஏதோ ஒன்றை வாரி அவர்களின் கண்ணில் வீசுகிறார். வீசிவிட்டு ரவுடிகளிடம் சண்டை போடுகிறார் கோடீஸ்வரி.

உடனே அந்த சமயத்தில்  சூர்யா போலீஸ் உடன் அங்கு வந்து ரவுடிகளை அடித்து கைது செய்துவிட்டு ஐஸ்வர்யாவை மீட்கின்றனர். அத்துடன் இந்த பிரமோ முடிவு அடைகிறது.

அஜித்திற்கு என்னாச்சு.? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிற்க்கான காரணம்.?