ஆறு ஏழு பேர் ரூமில் விட்டு அடிச்சு துவைச்சாங்க.. வடிவேலுவும் மிரட்டி எழுதி வாங்கினார்.. பக்கீர் கிளப்பிய காதல் பட சுகுமார்..

Kadhal Sukumar : காதல் சுகுமாரை நடிகர் வடிவேலு தாக்கியதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமா திரை உலகில்  நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுகுமார் இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியாகிய காதல் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். காதல் திரைப்படத்தில் குட்டி பையன் ஃபுல் பெப்சி குடிக்கிறீங்களா என இவரிடம் கொடுப்பார் அந்த காமெடி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான காதல் சுகுமார் திருட்டு விசிடி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சும்மா ஆடுவோம் என்ற கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி இருந்தார். ஆனால் இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை அதனால் மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு.. திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..

இந்த நிலையில் காதல் சுகுமார் சமீபத்தில் ஒரு youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் வடிவேலுவின் மோசமான குணத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது 2000 ஆண்டு நான் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது வடிவேலு ரொம்ப உச்சத்தில் இருந்தார் பல மேடை நிகழ்ச்சிகளில் வடிவேலு போல் நானும் பேசியிருந்தேன். இதனால் பல கம்பெனிகளில் இருந்து எனக்கு போன் கால் வந்தது அதுமட்டுமில்லாமல் நடிக்க அழைத்தார்கள்.

அப்பொழுதுதான் கலகலப்பு என்ற திரைப்படத்தில் வடிவேலு போல் நானும் நடித்தேன் அந்த நேரத்தில் மானஸ்தன் படபிடிப்பின் பொழுது வடிவேலுக்கு காலில் அடிபட்டு விட்டதால். வடிவேலுக்கு டூப்பாக என்னை நடிக்க அழைத்தார்கள் ஆனால் நான் முடியாது என மறுத்து விட்டேன் இந்த தகவல் எப்படியோ மருத்துவமனையில் இருக்கும் வடிவேலுக்கு சென்றது.

பெண்ணுடன் சுற்றி வரும் விஷால்.. ரசிகர் பார்த்ததால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம்

உடனே முத்துக்காளை மற்றும் போண்டாமணி இருவரையும் அனுப்பி என்னை அழைத்து வர சொன்னார் வடிவேலு நானும் சென்றேன். வடிவேலுவை பார்ப்பதற்கு ஆசை  ஆசையாக சென்றேன் ஆனால் ஆரம்பத்தில் நன்றாக பேசிக் கொண்டிருந்த வடிவேல் முத்துக்காளை மற்றும் போண்டாமணியை வெளியே அனுப்பிவிட்டு என்னை மாதிரியே நடிப்பியா அப்படி சொல்லி நிறைய கம்பெனில சான்ஸ் கேக்குறியா என கேட்டுக் கொண்டிருந்தார் அதற்குள் 7 பேர் என்னை திடீரென அடித்தார்கள்.

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை சரமாரியாக அடி வாங்கினேன். சட்டை பட்டன் அனைத்தையும் அறுத்து என்னை நிக்க வைத்தார்கள் அழுது கெஞ்சி நான் ஊருக்கே போய்விடுகிறேன் என்று கதறினேன். அதன் பிறகு தான் என்னை வெளியே விட்டார்கள் ஆனால் வெளியே விட்டால் ஏதாவது பத்திரிக்கையாளர்களிடம் உலரி விடுவேன் என எண்ணி என்னிடம் எழுதி வாங்கினார்கள் அதாவது என் தங்கையின் படிப்பு செலவிற்காக உதவி கேட்டு வடிவேலு அண்ணனை பார்க்க வந்தேன் எனவும் அதற்கு வடிவேலு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது போல் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த காவியா.. வைரல் வீடியோ

இன்னும் அந்த கடிதம் வடிவேலுவிடம் தான் இருக்கிறது வெளியே வந்த என்னிடம் முத்து காலை மற்றும் போண்டா மணி இருவரும் என்னை பார்த்து மன்னித்துவிடு என்று கண்கலங்கி மன்னிப்பு கேட்டார்கள் இதனை சமீபத்தில் காதல் சுகுமார் பேட்டியில் வேதனையுடன் கூறியுள்ளார்.