thamannah

தமன்னா நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி பட டீசர் இதோ.! இந்த வருடம் மட்டும் தமன்னா நடிப்பில் இத்தனை திரைப்படங்கள் வெளியாக இருக்கிறதா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா அடுத்தடுத்து வரிசையாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களும் விரைவில் வரிசையாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் தமிழில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

அந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகராகவும்,தமன்னா கதாநாயகியாகவும் நடித்த வருகிறார்கள். இதனை தொடர்ந்து போளூர் சங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமன்னா பப்ளி பவுண்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு முன்பாக தமன்னா நடித்துள்ள குருதுண்டா சீதா களம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸ்சாக உள்ளது. இதனைத் தொடர்ந்து போலே சுடியான் மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ்சாக இருக்கிறது.மேலும் இந்த வரிசையில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள திரைப்படம் பிளான் ஏ பிளான் பி இந்தத் திரைப்படத்தினை ஷஷாங்கா கோஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிக்ஸ் தளத்தில் ரிலீஸ்சாக உள்ளது இப்படிப்பட்ட நிலை 7 தற்பொழுது பிளான் ஏ பிளான் பி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

kushi

10 வயதிலேயே பிசினெஸ் ஆரம்பித்த விஜய் பட நடிகையின் மகன்.! வாழ்த்தும் ரசிகர்கள்

தற்பொழுதெல்லாம் குழந்தை நட்சத்திரங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் இவர்களுடைய திறமைகளை பார்த்து பலரும் வியந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நடிகை ஒருவரின் மகன் தன்னுடைய பத்து வயதில் பிசினஸ் தொடங்கியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரீச்சினை பெற்று வருகிறது.

மேலும் பிசினஸில் தயாராகிய அந்த முதல் தயாரிப்பை நடிகையே வாங்கி தன்னுடைய மகனை ஊக்குவித்துள்ளார். அதாவது பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான குஷி ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலம்க்ஷடைந்தவர் தான் நடிகை ஷில்பா ஷெட்டி.தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஐபிஎல் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் என்பது மட்டுமின்றி பல பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் இவருடைய மகன் 10 வயதாகும் விஷான் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்‌.மேலும் இதனை பற்றி ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். அதாவது VRKICKS என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலம் பிரத்தியோகமான ஷூக்கள் தயாரித்து விஷான் விற்பனை செய்து வருகிறார்.

எனவே தன்னுடைய மகன் சின்ன வயதிலேயே தொழிலதிபராக மாறிவுள்ள தன்னுடைய மகனை ஊக்குவிக்கும் வகையில் மகன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் ஹூவை ஷில்பா ஷெட்டியே வாங்கி உள்ளார்.இது குறித்த புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

shilpa shetty
shilpa shetty

அதாவது ஷில்பா ஷெட்டி கூறியதாவது ‘சிறு குழந்தைகளுக்கு அவர்களின் பெரிய கனவுகளும் எப்பொழுதும் மூக்குவிக்கப்பட வேண்டும் அந்தத் தொழிலின் முயற்சி யோசனை மற்றும் கருத்து, வடிவமைப்புகள் அனைத்தும் அவர்தான் தொழில் முனைவோர்களுக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இளமைப் பருவத்தில் கிடைக்கும் வருமானத்தில் சிலவற்றைத் தொண்டு நிறுவனத்திற்காக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.அவருக்கு வயது பெறும் 10 இந்த தலைமுறை அம்மாவை ஆச்சரியப்படுத்தி உள்ளார் மிகவும் பெருமை,ஆல் தி பெஸ்ட் என் மகனே’என பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

pukazh

கல்யாணத்திற்கு முன்பே வாக்குறுதி கொடுத்து வசமாக மாட்டிகொண்ட புகழ்.! அங்கு நான் தான் ராஜா, நீ தான் ராணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் புகழ்.

தற்பொழுது விஜய் டிவி புகழ் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி அன்று தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை கரம் பிடிக்க இருக்கிறார் மேலும் சமீபத்தில் இவர் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புகழ் மற்றும் பென்சியா இருவருக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதால் தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு முன்பாகவே ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்து அதனை சமீபத்தில் இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார்கள்.

மேலும் தனது வருங்கால மனைவியுடன் சற்று முன் புகழ் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவில் உனக்கு அடையாறில் ஒரு பங்களா வாங்கி தருகிறேன் என்றும் அந்த பங்களாவை பொருத்தவரை நான் தான் ராஜா நீதான் மகாராணி என்றும் கூறும் காமெடி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் அள்ளி வருகிறது. விஜய் டிவியின் ஒரு சிறு புள்ளியாக தொடங்கிய இவர் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தற்பொழுது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயனாக புகழை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு புகழ் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றும் கூறலாம்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

bakasoora

குற்றத்தை தடுக்க வேண்டும் என்றால் கதவை மூடிகிட்டு இருக்கிற பெண் என்ன பண்றார் என்பதை கவனிக்க வேண்டும்.! பகாசூரன் டீசர் இதோ..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் தற்பொழுது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகா சூரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் செல்வராகவன் தொடர்ந்து ஏராளமான கொலைகளை அடுத்தடுத்து செய்து வருவதும் இன்னொரு பக்கம் அந்த கொலைகளை செய்தவர் யார் என தீவிரமாக விசாரணை செய்து வரும் காவல் அதிகாரியாகவும் நட்பின் நடராஜ் நடித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இவ்வாறு நடித்துள்ள காட்சிகள் தான் அந்த டீசரில் காண்பிக்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன் எதற்காக கொலை செய்கிறார் என்றும் செல்வராகவனை எப்படி நட்டி நடராஜ் கண்டுபிடிக்கிறார் என்பதும் இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ்சாக இருக்கும் என கூறப்படுகிறது மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தன்னுடைய பிள்ளைகள் அல்லது பையன் கதவை மூடிக்கொண்டு ரூமில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனித்தால் தான் நாட்டில் குற்றம் குறையும் என்று நட்டி பேசும் வசனங்கள் இந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடிகிறது.

இந்த திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள் மேலும் இத்திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

sunitha

வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் குக் வித் கோமாளி சுனிதா.! ஹீரோ யார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் சில ஆண்டுகளாக ஒலிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியில் கடந்த மூன்று வருடங்களாக கோமாளியாக பணியாற்றி வருபவர் தான் சுனிதா இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

மேலும் இவருடைய தமிழ் பேச்சு மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.இவருக்கு பெரிதாக தமிழ் பேச வராது என்பதால் சில வார்த்தைகள் மிகவும் தவறாக உச்சரிப்பார் எனவே மற்ற போட்டியாளர்கள் இவரை பங்கமாக கலைப்பார்கள் இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறினார்.மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சந்தோஷ பிரதாப்பும் ஒருவர் இவர் இவரை சைட் அடிப்பது போல சுனிதா பின்னாடியே சுற்றி வருவார்.

எனவே இவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் ரசித்து வந்தார்கள் தற்பொழுது நிலையில் சந்தோஷ் பிரதாப் நடிக்க இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சுனிதா அது குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் இது வெறும் டிரைலர் தான் என்றும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

sunitha
sunitha

மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல பிரபலங்கள் தற்பொழுது வெளி திரையில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்துள்ள நிலையில் கடைசியாக சுனிதாவும் வெள்ளித்திரை நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் எனவே ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

bigg-boss

இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொள்ளாததால் விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.! வீடியோ இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இதனை தொடர்ந்து விஜய் டிவி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருந்து வருகிறது.

மேலும் ரசிகர்களின் கோரிக்கையின் படி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் ஒளிபரப்பு அதற்கான வேலைகளை விஜய் டிவி தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட பணியாக தொடர்ந்து பல மாதங்களாக விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

மேலும் தொடர்ந்து பல போட்டியாளர்களின் பெயரும் வெளியாகி வந்த நிலையில் அது எந்த அளவிற்கு உண்மையில் என்பது தெரியாமல் இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டு முக்கிய கவர்ச்சி நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் மேலும் தொடர்ந்து சர்ச்சைக்கு பிரபலமாக இருந்து வரும் பிரபலங்களை தான் பிக் பாஸ் சீசன் ஆறில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் விஜய்டிவிக்கு  விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகுதி வாய்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்நிகழ்ச்சியின் வீடியோவை பிக்பாஸ் சீசன் ஐந்தின் டைட்டில் வின்னர் ராஜு நடித்துள்ளார் அதனை எடுத்து ஏராளமானவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kopra

விக்ரம் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா படத்தின் டிரைலர் இதோ.!

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் விக்ரம் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கடின உழைப்பை செலுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். மேலும் மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டும் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் பல நடிகர் மற்றும் ரசிகர்களின் ரோல் மாடலாக இவர் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் வருகின்ற 31ஆம் தேதி அன்று மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ்சாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தினை வெளியிட இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது இந்த திரைப்படத்தின் டிரைலரில் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். மேலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் அவருடைய ரசிகர்கள் மட்டும் நன்றி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

கமலஹாசனின் தசாவதாரம் படத்தை விட அதிக கேட்டபில் நடிகர் விக்ரம் இப்படத்திற்காக போட்டுள்ளார் என்பதை அவர் பல மேடைகளில் கூறியிருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்,வெளிநாட்டில் பிரம்மாண்ட காட்சிகள், சேசிங் காட்சிகள் போன்றவை இடம்பெற்ற உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இசை பின்னணி மற்றும் ஹரிஷ் கண்ணனின் கேமரா படத்தின் லைட்டாக உள்ளது. இவ்வாறு கோபுரா படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.

pantiyan-stores-dhanam

2 லட்ச ரூபாய்க்கு ஸ்மார்ட் பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைஃபைலாம் இருக்காம்..

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சகோதரர்களின் ஒற்றுமை என பல அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் குறிப்பாக இந்த சீரியல் கிராமப்புற மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு பட்டாளம் இருந்து வருகிறது.அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டாவது தம்பியான ஜீவாவின் மனைவியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மேலும் பொதுவாக சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமா தன்னுடைய யதார்த்த நடிப்பினால் இந்த சீரியலின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இந்த சீரியலின் மூலம் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் இவர் தொடர்ந்து யூடிபில் வீடியோ பகிர்ந்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் கொரோனா காலத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கிய ஹேமா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் செய்வது, மேக்கப், டூர், லைவ் என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார்.இதன் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

அனைத்து விதமான வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ரூபாய் 2 லட்சம் கொடுத்து ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். எனவே அதனை பிரிட்ஜ் டூர் என வீடியோவாக வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தனது வீட்டில் 15 வருடமாக இருக்கும் பழைய பிரிட்ஜியை காட்டி விட்டு அதற்கு பதில் தற்பொழுது புதிதாக வாங்கியுள்ள பிரிட்ஜியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

ஹேமா வாங்கி இருப்பது அதில் ப்ளூடூத், வைஃபை வசதிகளும் இருக்கின்றன இதனால் தான் அந்த ஃப்ரிட்ஜின் விலை எவ்வளவு என தெளிவாக கூறியுள்ளார். மேலும் இந்த ஃப்ரிட்ஜை வாங்குவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் கொடுத்து இருக்கிறார் செய்து முடித்துள்ளார் இதன் காரணமாக மீனாவிடம் தொடர்ந்து பலரும் கேள்வி கேட்டு வருகிறார்.