samantha-2

நான் பிரதமர் மோடியின் ஆதரவாளர் என ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சமந்தா சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசிவுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் யசோதா, சகுந்தலாம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாக தயாராக இருக்கிறது.மேலும் குஷி என்ற படம் தெலுங்கில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குஷி திரைப்படத்தினை ஷிவ நிறுவாணா இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

இந்த படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா சில படங்களின் வாய்ப்பை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் இவர் சமீபத்தில் தன்னுடைய சம்பளத்தை அதிக அளவில் உயர்த்தி உள்ளார். இதன் காரணமாக ஒரே மாதத்தில் தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படத்திலிருந்தும் விலகி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா மோடியின் ஆதரவாளர் என பேசியுள்ள வீடியோ ஒன்றிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது நான் எப்பொழுதுமே மோடி ஜி அவர்களின் ஆதரவாளர் என கூறியுள்ளார் மேலும் அவரின் செயல்பாடுகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அவர்களால் நம்முடைய நாட்டில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது எனவும் பல விஷயங்கள் நாட்டை முன்னோக்கி நகர்த்துகிறது எனவும் நம்புவதாக கூறியுள்ளார் இவ்வாறு வெளிப்படையாக இவர் கூறியதால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

amala

நடிகை அமலா நடிப்பில் உருவாகி வரும் கணம் படத்தின் டிரைலர் இதோ.!

இவ்வாறு சினிமாவில் சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த ஏராளமான நடிகர்,நடிகைகளின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது விரைவில் முழு படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் ரித்து வருமா, நாசர்,சதீஷ்,ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்து தொலைந்த படத்திற்கு ஜோக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மாரி போச்சோ என்ற பாடலும் வெளியாகி இருந்தது இவ்வாறு நடிகர் கார்த்திக் பாடியுள்ள இந்த பாடல்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாக்கி உள்ளது தன்னுடைய இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய இணையதள பக்கத்தில் கணம் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் தற்பொழுது.அந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

vijay-ajith

தல அஜித் மற்றும் தளபதி விஜய் பற்றி சுவாரசியமான தகவலை கூறிய யுவன்.! வைரலாகும் வீடியோ..

தன்னுடைய இசையினால் ஒட்டுமொத்த மக்களையும் ஆட்சி செய்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா.இவருடைய 42 வது பிறந்தநாள் நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதன் காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கடந்த 25 ஆண்டுகளாக ஏராளமான ஹிட் பாடல்கள் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்த யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக ட்விட்டரில் #AsKU1 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் குறித்த கேள்வி எழுப்பினார் அதற்கு இருவரையும் குறித்த சுவாரசியமான தகவலை யுவன் சங்கர் ராஜா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

அதாவது அஜீத் குமாரை பற்றி பேசிய பொழுது, இத்தனை வருடங்களாக அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான நினைவுகளாக இருக்கிறது, ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் அழைத்து பாடல்களும் பின்னணி செய்யும் சிறப்பாக உள்ளதாக பாராட்டுவார், அற்புதமான மனிதர் தனிப்பட்ட முறையில் அவரோடு பணியாற்றுவது மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களை பற்றி கேட்ட பொழுது, தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் அவருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது.. இனிமையான மனிதர் அவர் திரைப்படங்கள் குறித்து நிறைய பேசுவோம் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆன சமயம் என்பதால் அது குறித்தும் பேசினார் குறிப்பாக அவரது மகன் என்னுடைய வெறித்தனமான ரசிகன் என அவர் சொன்னது என்னால் மறக்கவே முடியாது அது எனது மனதை தொட்ட ஒரு தருணம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்த யுவன் சங்கர் ராஜா தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்த சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

keerthi pamdian

கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கொஞ்சி பேசினால் என்ன படத்தின் டீசர் இதோ.!

வாரிசு நடிகையாக அறிமுகமாகி பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். ஃபேண்டஸி அட்வென்சர் படமாக 2019ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவர் தன்னுடைய அப்பா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களில் தான் பெரும்பாலும் நடித்து வருகிறார். அந்த வகைகள் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்று தேசிய விருதும் பெற்ற ஹெலன் திரைப்படத்தின் ரீமேக்கில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்த அன்பிற்கினியால் திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கீர்த்தி பாண்டியன் இயக்குனர் ஷாலினி இயக்கத்தில் கண்ணகி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். இதனைத் தொடர்ந்து மேலும் ரொமான்டிக்கான காதல் படமாக தயாராகி வரும் கொஞ்சம் பேசினாள் என்ன என்ற திரைப்படத்திலும் நடித்த வருகிறார்.இந்த திரைப்படத்தினை கிரி மர்ஃபி இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மேலும் கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் கிர்ஷ் ஆகியோர்கள் ஜோடியாக நடித்து வரும் இந்த திரைப்படத்தில் கௌதம் சுந்தர்ராஜன்,ஆஷிக் பத்ரா, ஆகாஷ், பிரேம்குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சூப்பர் டாக்கீஸ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் லெனின் ஏ மற்றும் ஏ ஆர் செல்வம் ஒளிப்பதிவில் தனசேகர் தொகுப்பு செய்துள்ளார். மேலும் தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார் தற்பொழுது கொஞ்சி பேசினாள் என்ன திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

prince movie

சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்து ஆடும் பிரின்ஸ் பட நடிகை.! வெளியான பிம்பிலிக்கு பிளாப்பி லிரிகல் வீடியோ..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் தற்போது இவர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வெளிநாட்டு மாடல் அழகியான மரியா என்பவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பிரின்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் என்பதால் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இவர்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனு விஷ்வா என்பவர் இப்படத்தினை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பெண் இந்தியாவை முழுவதுமாக சுற்றி பார்க்க வேண்டும் என விரும்புகிறார் எனவே அந்தப் பெண் விரும்பும் இடங்களில் எல்லாம் சுத்திக்காடும் நபராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் சுற்றி பார்க்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்படுகிறது.

இதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் இதுதான் பிரின்ஸ் படத்தின் கதைகளம். பிரண்ட்ஸ் படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டு தான் உருவாக்கப்பட்ட வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் பிரின்ஸ் படத்தில் இருந்து பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடலை தமன் இசை அமைத்துள்ளார். இவ்வாறு திரைப்படத்தின் கதையிலிருந்து பாடல் வரை அனைத்தும் தெலுங்கு ரசிகர்களுக்காகவே முழுக்க முழுக்க உருவாகி இருக்கிறது.

இதனால் தற்பொழுது இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இருந்தாலும் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் சிறப்பாக நடனமாடியுள்ளார் என தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

yuvan-shangar-raja

தன்னுடைய மகன் பிறந்த செய்தியை அழகாக கூறிய இளையராஜா.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்றால் அதற்கு முக்கிய பங்கு இசையமைப்பாளர்களுக்கும் உண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தி அவர்களை மகிழ்விப்பது இசை தான். அந்த வகையில் இசை என்பது வாழ்வில் ஒரு பங்காக இருந்து வருகிறது அந்த வகையில் ஒரு சில இசமைப்பாளர்கள் ரசிகர்களின் மத்தியில் தங்களுக்கு என ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இணையாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் ராக்ஸ்டாராக இருந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையாால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென கட்டி போட்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய 43வது பிறந்தநாள் முன்னிட்டு ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு யுவனின் தந்தையும் இசைஞானியுமான இளையராஜா ஒரு வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மகன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்துள்ளார் என்பதை பற்றிய தகவலை கூறியுள்ளார் அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஆழியாறு அணை அருகில் ஏதேனும் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தான் நான் அப்பொழுது இசையமைத்து இருப்பேன். அப்படி தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் இயக்குனர் மகேந்திரனுடன் ஜானி படத்திற்கு இசையமைக்க சென்றிருந்தேன் அப்பொழுது தயாரிப்பாளர் கே.ஆர்.ஜிக்கு கோவையில் வீடு இருக்கிறது. அங்கு சென்று திரும்பி வந்தார் அப்பொழுது நான் எனக்கு யுவன் பிறந்த செய்தியை அவர் கூறினார் அப்பொழுது கூட நான் படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன் என யுவன் பிறந்த சமயம் நடந்த கதையை கூறி யுவன் ஹாப்பி பர்த்டே என கூறியுள்ளார்.

arun vijay

அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் 1995ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பிறகு தொடர்ந்து நல்ல காரியம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

மேலும் இவர் ஹீரோவை தொடர்ந்து வில்லனாகவும் நடித்து கலக்கி வருகிறார் அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் என்னை அறிந்தால் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா உள்ளிட்ட தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்ததால் இவருடைய திரை வாழ்க்கைக்கு பெரிதும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் தற்பொழுது  ஹரிதாஸ் படத்தினை இயக்கிய ஜி.என்.ஆர் குமாரவேல்ன் தற்பொழுது சினம் என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பாலக் லால்வாணி நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் பின்னணி இசையை சமீர் இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது ஒரு பெண்ணின் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரியாக அருண் விஜய் கொலையை யார் செய்தார்.?  எப்படி செய்தார்கள்.? என்பதனை கண்டுபிடிக்கும் வகையில் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

vijay

‘தளபதி 67’ படத்தில் இதுவும் நடிக்குதா.? வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67வது திரைப்படம் உருவாக இருக்கிறது. மேலும் அந்த திரைப்படத்தினை பற்றி நாள்தோறும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் கம்பீரமான நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை தில்ராஜ் தயாரிக்க தமன் இசையமைப்பில் உருவாகி வருகிறது இத்திரைப்படம் கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே  நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று பெரியார் இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மலையாளத் திரைப்படமான palthu janwar என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நாய் ஒன்று நடித்திருந்தது அந்த திரைப்படத்தில் நாயின் கம்பீரம் படம் பார்த்தவர்களை பெரிதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்பொழுது அதே நாய் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல ஊடகம் ஒன்று சமீபத்தில் நாயின் உரிமையாளரிடம் பேட்டி எடுத்துள்ளார்கள். அதில் நாயின் உரிமையாளர் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய்யின் படத்தில் இந்த நாய் நடிக்க இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்புக்கு அழைத்து வர பட குழுவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நாயை தளபதி 67 திரைப்படத்தில் வேற லெவலில் பயன்படுத்த லோகேஷ் திட்டம் போட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட ஆறு முக்கிய வில்லன்களை வைத்து உருவாக இருப்பதாகவும் மேலும் திரிஷ, சமந்தா,கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகளும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார்கள்.

மேலும் அனிருத் இசை அமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தினை லலித் குமார் அவர்கள் தயாரிப்பில் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

https://twitter.com/Namakkal_OTFC/status/1564311690623127552?s=20&t=OvaXdwA9WQsz-BCObUtJpg

dhanush

பிரபல கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தனுஷ் பட நடிகை.! வைரலாகும் வீடியோ..

தனுஷின் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்றிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் இவர்களுக்கு இதன் மூலம் தனி ஒரு வருமானம் கிடைத்து வருவதால் இதனை பயன்படுத்திக் கொண்டு திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சாரா அலிகான். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அந்தரங்கீ ரே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருடைய எதார்த்தம் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் இவர் பாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரபலம் அடைந்துள்ளார் இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

sara alikhan
sara alikhan

இந்நிலையில் சாரா அலி கான் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் இருவரும் இணைந்து டேட்டிங் சென்றுள்ளார்கள் அந்த வகையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலை ஏன் சுப்மன் கில் மற்றும் சாரா ஆலீக்கான் இருவருக்கும் விரைவில் திருமணமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் #SaraAlikhan என்ற ஹேஸ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இதனைப் பற்றிய எந்தவொரு தகவலையும் சுப்மன் கில் மற்றும் சாரா அலி கான் இருவரும் வெளியிடவில்லை.