ajith

ஹெலிகாப்டர் இயக்கும் பைலட் அஜித்தின் வீடியோ இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், விமானங்கள் தயாரித்தல் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார். இதன் காரணத்தினால் தற்பொழுது வளர்ந்து வரும் அனைத்து இளைஞர்களுக்கும் அஜித் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சூடுதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.இவ்வாறு படப்பிடிப்பு முடித்துவிட்டு சிறிய இடைவெளி கிடைத்தால் கூட பைக்கை எடுத்துக் கொண்டு ரைடு செய்ய தொடங்கி விடுகிறார். அந்த வகையில் சில வாரங்களாக இமயமலையில் தனியாக தன்னுடைய பைக்கில் சென்று வரும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட் வருகிறதோ இல்லையோ அஜித் பைக் பயணம் செய்வது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு லண்டன் உட்பட ஏராளமான நாட்டுக்கு பைக்கில் பயணம் செய்தார் அஜித். மேலும் சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பிய போதிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

மேலும் லடாக் உள்ளிட்ட சில இடங்களில் பைக் பயணம் செஞ்ச அஜித் அந்த பயணத்தில் மஞ்சுவாரியார் உள்ளிட்ட அவரது படக்குழுவினர்களும் இணைந்து பயணம் மேற்கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஜித்தின் பைக் பயணம் குறித்து ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்போது அஜித் ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பைலட் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒரே ஒரு நடிகர் அஜித் மட்டும் தான் எனவே அவர் ஹெலிகாப்டரை இயக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் தற்பொழுது அது வைரலாகி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக அஜித் மேலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாரோ அல்லது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

mahalakshmi

மகாலட்சுமியை பார்த்தால் கள்ள விட்டு அடிங்க என லைவ்வில் கூறிய ரவீந்தர்.! வைரலாகும் வீடியோ..

தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களைப் பற்றி சோசியல் மீடியாவில் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமியை பார்த்தால் கல்ல விட்டு அடிங்க என ரவீந்தர் கூறிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது இவர்கள் இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் பெரும் சர்ச்சையாக சோசியல் மீடியாவில் இருந்து வருகிறது. மேலும் அனைவரும் இவர்களை விமர்சித்து வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமி, ரவீந்தர் இருவரும் பதில் அளித்து வருகிறார்கள். மேலும் இதையெல்லாம் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன் எங்கள் திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் ட்ரோல் ஆனதாால் தான் நாங்கள் பல பேட்டிகள் கொடுத்தோம் என்றும் இனிமேல் எங்களின் பேட்டி தொல்லை இருக்காது என்றும் நாங்கள் சந்தோஷமாக எங்களது வாழ்க்கையை வாழ தொடங்க போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவி மிகவும் வெட்கப்படுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாடி வரமாட்டேன் என்கிறார் என்றும் கூறி அதன் பிறகு வலுக்கட்டாயமாக அவரை கேமராவுக்கு வரவழைக்கிறார். இதனை அடுத்து என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் ஆனால் என் கணவரை பற்றியும் அவரது குண்டான உடல் பற்றியும் தயவுசெய்து விமர்சனம் செய்யாதீர்கள் உங்கள் வீட்டில் ஒரு அண்ணன் ஒரு அக்கா குண்டாக இருந்தால் அவர்களை விமர்சனம் செய்யப்படும் பொழுது எந்த அளவுக்கு நீங்கள் கஷ்டப்படுவீர்களோ அந்த அளவுக்கு எனக்கு மனம் வருத்தம் இருக்கும் என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் அதனை அடுத்து மகாலட்சுமியிடம் ரவீந்தர் கேமரா முன் வரமாட்டேன் என்று நீ கூறினால் யாரும் உன்னை சீரியலில் பார்க்க மாட்டார்கள் என்றும் நானே மகாலட்சுமி வந்தா கல்லை விட்டு அடிங்க என்று சொல்வேன் என்றும் காமெடியாக கூறியுள்ளார். மேலும் என் மனைவி மகாலட்சுமி கண்டிஷன் போட்டு அன்பே வா சீரியலை பார்க்க வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுடைய திருமணம் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கவில்லை இது அந்த அளவிற்கு முக்கியமான திருமணம் இல்லை என்றும் இதைவிட முக்கியமான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது என்றும் அதனை ட்ரெண்டிங்காக்குங்கள் என்றும் அவர் கூறியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

raveena daha

ஆட்டத்தை பார்த்து துரத்த ஆரம்பித்த இரண்டு நாய்கள்.! துள்ளி குதித்து ஓடும் ரவீனா..

சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வரும் நடிகை தான் ரவீனா தாஹா.இவர் சைக்கோ திரில்லர் படமான ராட்சசன் திரைப்படத்தின் மூலம் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும் இதற்கு முன்பு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தார். 18 வயதே ஆகும் ரவீனா தாஹா  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து நடனமாடும் வீடியோக்கள், குறும்பு செய்யும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் இவர் நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த இரு நாய்கள் திடீரென ரவீனாவை கடிக்க தொடங்கியது.

ஆரம்பத்தில் சின்ன நாய்கள் தானே என அசால்டாக இருந்த ரவீனா மீண்டும் ஆட தொடங்குகிறார் அப்பொழுது மறுபடியும் அந்த இரு நோய்களும் அவரை துரத்தி விரட்டுகிறது உடனே துள்ளி குதித்து ஓட்டத்தை பிடிக்கிறார் ரவினா. இந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் தொடர்ந்து நகைச்சுவையான டப்மாஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு ரவீனா தாஹா முதன் முதலில் நடன நிகழ்ச்சியின் மூலம் தான் தன்னுடைய கெரியரை தொடங்கினார் அதன் பிறகு தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

yuvan-sangar-raja

சாண்டி மாஸ்டருடன் வெறித்தனமாக நடனமாடிய யுவன் சங்கர் ராஜா.! வைரலாகும் வீடியோ..

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெரிதாக நடனமாடி யாரும் பார்த்திருக்க மாட்டோம் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முதன் முறையாக இவர் வெறித்தனமாக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் சிறந்தவராக யுவன் சங்கர் ராஜா திகழ்கிறார். இளையராஜாவின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் பணியாற்ற தொடங்கிய இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல பாடல்களை தந்துள்ளார். மேலும் இவர் முதன் முறையாக 1997ஆம் ஆண்டு சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அரவிந்த் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஏராளமான நட்சத்திரங்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது வரையிலும் இவர் 125 பாடலுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். கிராமத்து கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி தயாரித்து இருந்தது.

இத்திரைப்படத்தில் அதிதி சங்கர்,  பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டு போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடிக்கொண்டே மிகவும் வெறித்தனமாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

nivetha-dhamas

அட, நம்ம நிவேதா தாமசா இப்படி குண்டாக இருப்பது.! வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

தற்பொழுது சினிமாவில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்கள் போன்றவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.இதன் மூலம் இவர்கள் லட்ச கணக்கில் சம்பாதித்து வருவதால் இதனை நாள்தோறும் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நிவேதா தாமஸ் நடனமாடிய வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமடைந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் 2013ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த படத்தில் நடிகர் ஜெயிக்க ஜோடியாக நடித்திருந்தார் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு சரியாக கிடைக்காத நிலையில் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்து அசத்திய இருந்தார். மேலும் கமலின் மகளாக பாபநாசம், ரஜினியின் மகளாக தர்பார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்த அசத்தி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தமிழில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளாரோ அதேபோல் தெலுங்கிலும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் எனது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டோலிவுட்டிலும் சமீப காலங்களாக கவனம் செலுத்தி வருகிறாராம் இந்நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் சாகினி தாகினி என்ற திரைப்படம் தயாராகி வருவதாகவும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடனமாடிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸ் இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த வீடியோவில் இவர் படு குண்டாக காட்சி அளிக்கிறார் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு நிவேதா தாமஸ் மாறி உள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார் இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

jeyam-ravi-simbu

நடிகைகளை பற்றி அந்த ஒரு கேள்விக்கு ஜகா வாங்கிய ஜெயம் ரவி.! தனது ஸ்டைலில் வச்சி செய்த சிம்பு.! வீடியோ உள்ளே..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மற்றும் ஜெயம் ரவி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தங்களுடைய இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றாக பார்ட்டிக்கு செல்வது ஒன்றாகும் படம் பார்க்க செல்வது என மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் சிம்பு இருவரும் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது சிம்பு ஜெயம் ரவியை கேள்வி கேட்டு கலாய்த்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஜெயம் ரவியிடம் சிம்பு திரிஷா, பவனா, ஸ்ரேயா, அசின், சுதா ஆகிய இந்த ஐந்து ஹீரோகளில் யாரை உனக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயம் ரவி அப்படியே நிற்க ஐந்து பேரையும் பிடிக்கும் என சொல்லக்கூடாது என சிம்பு கூற அதற்கு சிறிது நேரம் சிரித்துக்கொண்டே ஜெயம் ரவி எனக்கு 5 ஹீரோயின்களையும் பிடிக்கும் ஐந்து பேரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது பிறகு என்னுடைய கண்ணை பாருங்கள் நான் பொய் சொல்லவில்லை என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசியுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகள் முந்தைய காலங்களில் எவ்வளவு ஒன்றாக சந்தோஷமாக இருந்துள்ளார்கள் என அனைவரையும் வியப்பில் வாழ்த்தி ஆழ்த்தி உள்ளது. இப்படிப்பட்ட நண்பர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது எல்லாம் இவர்களைப் பற்றிய தகவல் எதுவுமே வெளி வருவதில்லை. இதோ அந்த வீடியோ.

தற்பொழுது ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

yasotha

நீ கர்ப்பமாய் இருக்கியா.? வைரலாகும் யசோதா டீசர்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது யசோதா திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த டீசரில் நடிகை சமந்தா மருத்துவமனைக்கு வருகிறார். அப்பொழுது சமந்தாவிடம் டாக்டர் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என வாழ்த்துக்கள் கூறுகிறார்.

பிறகு முதல் மூன்று மாதம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், சரியாக நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்றும், நன்றாக தூங்க வேண்டும், நடக்கும்பொழுது ரொம்ப கவனமாக பார்த்து நடக்க வேண்டும், வெயிட்டாக இருக்கும் பொருட்களை தூக்காமல் எளிய வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், வேலை செய்யும் பொழுதே கீழே விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும், உடனடியாக அதிர்ச்சடைய கூடாது என பலவற்றையும் சமந்தாவிற்கு மருத்துவர் அறிவுரையாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் டாக்டர் அறிவுரை கூறிய நிலையில் அனைத்திற்கும் எதிர்மறையாக சமந்தாவின் வாழ்க்கையில் நடைபெறுகிறது இதனால் அவருடைய கருப்பம் என்ன ஆனது அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை விளக்கும் வகையில் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டீசரின் மூலம் தெரிய வருகிறது. இந்த படத்தில் நடிகை சமந்தாவை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இவர்களை தொடர்ந்து ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் மணி சர்மா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

dhanush nitjya menon

தனுஷ்- நித்யாமேனனுக்கு டஃப் கொடுக்கும் ஜப்பான் ஜோடிகள்.! வைரலாகும் வீடியோ..

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது வரையிலும் உலகம் முழுவதும் 94 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தினை தனுஷின் யாரடி நீ மோகினி படத்தினை இயக்கியிருந்த மித்ரன் ஜகவர் இயக்கியிருந்தார் மேலும் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மேலும் தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெற்றது.

போலீஸ் அதிகாரி மகனான தனுஷ் தனது படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார் பிறகு டெலிவரி பாய்யாக வேலை செய்கிறார் இதன் காரணமாக தந்தைக்கு மகனின் மீது அதிக கோபம் இதன் காரணமாக இருவரும் மோதிக் கொள்வதும் பின்னர் தந்தையின் பாசத்தை புரிந்துக் கொண்ட மகன் சமாதானமாவதுமான சென்டிமென்ட் கதையும் மறுபுறம் மூன்று நாயகிகளில் எவரை நாயகன் திருமணம் செய்து கொள்வார் என்ற சுவாரசியமான கதைக்களத்துடனும் இந்த படம் அமைந்திருந்தது மேலும் இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டினை பெற்றது.

தனுஷின் சிறிய வயது தோழியாக நடித்து வரும் நித்யா மேனன் கடைசியில் தனுஷை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் அவர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

அந்த வகையில் தற்பொழுது ஜப்பானை சேர்ந்த இருவர் மேகம் கருகாதா பாடலுக்கு அழகாக நடனமாடி ரிலீஸ் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜப்பானில் உள்ள தனுஷ் நித்தியாமேனன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

vandhu-thaninthu-kaadu

சாதாரண மனிதர்,கேங்ஸ்டர் என பட்டையை கிளப்பும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் இதோ.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது சரியான கதையாம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்காமல் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி வருபவர் தான் நடிகர் சிம்பு.சில வருடங்களுக்குப் பிறகு இவருடைய என்ட்றி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் தற்போது வெந்த தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவன் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வருகிறது மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஆடியோ வெளியீட்டு விழாவில் கௌதம் மேனன் கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது அதில் சில சமயம் உண்மையை சொல்றது கதை சொல்வதை விட கஷ்டம் என கௌதம் வாசுதேவன் குரலில் ஆரம்பிக்கிறது.மேலும் அந்த ட்ரெய்லர் ஆரம்பித்த ரெண்டு மூன்று வினாடிகளிலேயே சிம்புவை சாதாரண மனிதனாகவும்,கேஸ்டராகவும் காட்டுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் பின்னணி இசையில் காதல், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளையும் ஒருசேர காமிக்கப்படுகிறது.இந்த படத்தில் நடிகர் சிம்பு சாதாரண அழுக்கு சட்டை போட்டுக்கொண்டு பாவமான முகத்தோடு இருக்கும் லுக்கில் காணப்படுகிறார் அதே நேரத்தில் மிகவும் கோபமாகவும் இருக்கிறார். மேலும் ஏ ஆர் ரகுமான் பின்னணியில் உருவான ‘அடங்காத ராட்டினத்தில்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த அப்பு குட்டி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயிண்ட்ஸ் தயாரித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 8 லட்சம் யூக்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

ajith

இமயமலையில் தனியாக கெத்தாக பைக் ஓட்டும் நடிகர் அஜித்.! வைரலாகும் வீடியோ..

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல்லாயிரம் கிலோமீட்டர் தனியாக பயணம் செய்து ஏராளமான இடங்களில் சுற்றுலா செல்வது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை புதிதாக தயாரித்து அதனை இயக்குவது என அறிவியல் சம்பந்தமான பலவற்றிலும் மிகவும் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.

இவருக்கு திரைப்படங்களை நடிப்பதை தாண்டி நேரம் கிடைக்கும்போது எல்லாம் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தனியாக தன்னுடைய பைக்கில் பயணம் மேற்கொண்டு இருந்தார் அந்த வகையில் அஜீத் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருந்தார்.

அவ்வப்பொழுது இந்திய ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் அவ்வப்பொழுது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கை நிழலில் நிறுத்திவிட்டு அவர் மணலில் அமர்ந்திருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் தன்னுடைய சில நண்பர்களுடன் இமய மலைப் பகுதியில் பைக்கில் பயணம் செய்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்பொழுது அவர் பைக் ஓட்டும் பொழுது எடுத்துக்கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

இவ்வாறு நடிகர் அஜித் பிசியாக இருந்து வரும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.