miral

பரத் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மிரள்’ படத்தின் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பரத் சமீப காலங்களாக நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் இதன் காரணமாக இவருடன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் மிரள் என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தினை இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார் மேலும் கே.எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர்களுடன் கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி, அஜய், நரேன், பாலாஜி மாஸ்டர் அங்கில் மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகரின் நடிகைகளும் இணைந்து நடித்துள்ளார்கள். இவ்வாறு பல முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தினை ஆக்செஸ் பிலிம்ஸ் பேட்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் எஸ்.என் இசையமைத்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் மிகவும் திரில்லர் படமாக உருவாகியுள்ள நிலையில் மிரள் என பெயர் வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படம் வருகின்ற 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி.

bigg-boss-54

அமுதவாணன் சிறைக்குச் சென்ற கதையை கேட்டு வயிறு குலுங்க சிரித்த கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அமுதவாணன் சொன்ன கதையைக் கேட்டு கமல் அவர்கள் சிரித்துள்ளது குறித்து ப்ரோமோ தற்பொழுது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக வெற்றி கரமாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் அறிமுகமான இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.

அதில் சாந்தி மற்றும் அசல் கோளாறு ஆகியோர்கள் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜிபி முத்து மகனின் உடல்நிலை காரணமாக பாதியிலேயே வெளியேறினார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாமல் இல்லாமல் பெரிதும் சண்டை உடன் நடைபெற்று வந்தது.

எனவே இந்த வாரத்தின் இறுதியில் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார் அது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அமுதவாணன் தான் சிறைக்குச் சென்ற கதையை கூறியுள்ளார் அதன்படி கடந்த வாரம் டாஸ்கின் அடிப்படையில் கதிரவன் சிறைக்கு சென்றிருந்தார். அதற்காக அமுதமான பிக்பாஸ்யிடம் கதிரவனக்கு பதில் நான் சிறைக்குச் செல்கிறேன் என சொல்லி உள்ளார்.

வழக்கமாக பிக்பாஸ்யிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் அவர் இதுவரையிலும் பதில் அளிக்க மாட்டார் என நினைத்து மிகவும் தெனாவட்டாக கேட்டுள்ளார். ஆனால் உடனடியாக உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீங்கள் சிறைக்குச் செல்லலாம் என சொல்லி அமுதவாணனுக்கு பல்பு கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கமல் அவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்த காட்சிகளின் ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் இந்த வாரம் செரினா பிக்பாஸ் வீட்டை விட்டு மக்கள் மத்தியில் குறைந்த அளவு வாக்குகளை பற்றிய வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhanalakshmi

தனலட்சுமி கூறிய ஒரே வார்த்தையால் போட்டியாளரை சிறைக்கு அனுப்பிய பிக்பாஸ்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக விளையாடி வருகிறார்கள் மேலும் தற்பொழுது 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 18 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு அனைவரும் தங்களுடைய சிறந்த விளையாட்டு தன்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில் தனலட்சுமி சொன்ன ஒரே வார்த்தையால் போட்டியாளர்களில் ஒருவரை பிக்பாஸ் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனவே போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று டாஸ்க் மற்றும் வீட்டில் சரியாக பணிபுரியாத இருவரை சிறைக்கு அனுப்புவது வழக்கம் மேலும் சக போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய மனதிற்கு தோன்றுபவர்களை கூற வேண்டும் அந்த வகையில் இந்த வாரமும் இந்த பழக்கம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இந்த வார தொலைக்காட்சி டாஸ்க்கில் மிகவும் மோசமாக விளையாடிய நபர் யார் என தேர்ந்தெடுக்கத்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். எனவே முதலாவதாக அசீம் மகேஸ்வரியை மோசமாக விளையாடியதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து ஏடிகே தனலட்சுமி கூறுவதாகவும் அவர் சுயநலமாக இருப்பதாகவும் தன்னுடைய கருத்தினை முன் வைக்கிறார்.

பிறகு தனலட்சுமி டீமில் சரியாக விளையாடவில்லை என்றால் ராமை தான் கூற வேண்டும் ஏனென்றால் அவர்தான் தன்னுடைய கண் சரியில்லை என கூறிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் எனக் கூற உடனே ராம் கோபப்படுகிறார். அதற்கு கூறுவதை சரியாக கூறு ஹெல்த் இஷ்யூஸை வைத்து கூறுவது எல்லாம் சரியில்லை. அதற்கு தனலட்சுமி திமிருடன் நான் ஒழுங்காக தான் கூறுகிறேன் என கூற கோபத்துடன் ராம் சிறைக்கு செல்கிறார்.

பிறகு உடனே பிக்பாஸ் ராம் சிறைக்கு செல்லலாமே எனக் கூற போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் தனலட்சுமி மிகவும் திமிராக நடந்து கொள்கிறார். இதற்கு முன்பு ராம், ஜனனி இருவரும் சிறையில் இருந்த நிலையில் இரண்டாவது முறையாக ராம் சிறைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

atk

போட்டியாளர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் ஏடிகே.! வைரலாகும் இன்றைய ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் இவரை தொடர்ந்து அசல் கோளாறு வெளியேறி உள்ளார்.

இவ்வாறு தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஏடிக்கே இந்த வீட்டில் யார் யார் எப்படி மாறுவாங்கன்னு தெரியல சத்தியமா சொல்றேன் ஆயிஷா, ஷெரினா, மணி இந்த வெஸ்ட்ட கொடுக்குறதுல என்ன கஷ்டம்.

ஒரு அடி தான் இருக்கும் அந்த குப்பை தொட்டியில கொட்டி வைக்கிறதுல என்ன கஷ்டம் ஒரு பிளேட் கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்தை முன்னோக்கி போவாங்க என்று ராமிடம் கூறுகிறார் அதோடு இந்த‌ ப்ரோமோ நிறைவடைகிறது மேலும் இதனை கமலஹாசன் அவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிறகு இதனைத் தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஏராளமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது.  இதன் காரணத்தினால் அனைத்து போட்டியாளர்களும் டப் கொடுத்து வரும் நிலையில் ஏராளமான சண்டைகளும் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் முக்கியமாக தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி இருவரும் அசீமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அசீமும் பேச தொடங்க இதனை பார்த்த ரசிகர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா என கூறி வருகிறார்கள் இந்த வாரம் கமலஹாசன் அவர் அவர்களின் அறிவுரையின்படி அசின் மிகவும் பொறுமையாக யோசித்து விளையாடி வருகிறார் ஆனால் அசீம்க்கு மரியாதை தராமல் தனலட்சுமி, மகேஸ்வரி இருவரும் பேசி வருகிறார்கள். இதனையும் கண்டிப்பாக கமலஹாசன் அவர்கள் கேட்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

bigg-b0ss-34

தகுதி இல்லாதவர் எனக் கூறிய மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம்.! பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளிக்கும் ரசிகர்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக டாஸ்க் மிகவும் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கமலஹாசன் அவர்களிடம் அசீம் மிகவும் கடுமையாக திட்டி வாங்கி வந்தார் மேலும் இதற்கு மேல் சரியாக இருக்க வேண்டும் என அசீம் மிகவும் பொறுமையாக இருந்து வரும் நிலையில் தற்போது மகேஸ்வரிவுடன் கடும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது தற்பொழுது பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கிறது.

அந்த டிவி, இந்த டிவி என டாஸ்க் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடன நிகழ்ச்சி, டிராமா என பல டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று மகேஸ்வரி மற்றும் அசீமுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது மேலும் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அசீமுக்கு பிரேக்கிங் நியூஸ் பற்றி தெரியவில்லை என மகேஸ்வரி கூறியதை கேட்டு கடுப்பான அசீம் அவரிடம் நீங்கள் நடுவராக இருக்க தகுதி இல்லாதவர் என்றும் அதில் நீங்கள் ஜீரோ என்றும் பதிலடி கொடுத்திருக்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இடம்பெற்று இருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பொறுத்தது போதும் பொங்கி எழுத் தலைவா என ஆதரவளித்து வருகிறார்கள். ஏனென்றால் அசீமை கமலஹாசன் அவர்கள் கடந்த வாரங்களாக திட்டியதால் சக போட்டியாளர்கள் பலரும் அசீமை மிகவும் கேவலமாக பேசி வருவது அவருக்கு மரியாதை கொடுக்காமலும் இருந்து வருகிறார்கள்.

அதில் முக்கியமாக மகேஸ்வரி ,தனலட்சுமி ஆகியோர்களை கூறலாம் இவர்கள் எப்பொழுதும் அசீமை அசிங்கப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே இதற்கு மேல் ஆசீமை இந்த வாரம் போல் தொடர்ந்தால் கண்டிப்பாக அவர் இன்னும் நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

dhanalakshmi

பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பால் தனலட்சுமியை வச்சி செஞ்ச போட்டியாளர்கள்.! திமிரு கொஞ்சம் ஓவரா தான் இவருக்கு..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 6வது சீசனில் 21 போட்டியாளர்கள் அறிமுகமான நிலையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மேலும் வாராவாரம் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்களும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ் மேட் அனைவரும் தனலட்சுமிக்கு அட்வைஸ் கொடுக்கும் படியான காட்சிகளிடம் பெற்றிருக்கிறது.

அதாவது இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து இரண்டு நபர்கள் கலந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த சீசனில் தனலட்சுமி அவர்கள் பங்கு பெற்றார். மேலும் இவருடைய போட்டித் திறமையை பார்த்து கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் பாராட்டி இருந்தார்கள். மேலும  தொடர்ந்து போட்டியாளர்களும் இவருக்கு துணையாக இருந்து வந்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் சற்று கோபமாக பேசி வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் ரசிகர்கள் இதன் காரணத்தினால் இவர் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என விரும்பி வருகிறார்கள். அதாவது இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் தனலட்சுமி எந்த குணங்களை மாற்றிக் கொண்டால் மேம்பட முடியும் என்பது பற்றி சக போட்டியாளர்கள் அட்வைஸ் கொடுக்கும்படியான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அதில் ஹவுஸ் மேட் ஒவ்வொருவர் அவருக்கு பல்வேறு அறிவுறுகளை வழங்க அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய ரியாக்ஷனை மாற்றுகிறார் தனலட்சுமி இதுதான் இன்றைய எபிசோடில் நடைபெற இருக்கிறது. மேலும் தனலக்ஷ்மி தனக்கு அனைவரையும் மரியாதை கொடுக்க வேண்டும் என பேசி வருகிறார் அந்த வகையில் ராபர்ட் மாஸ்டரிடம் சண்டை போட்டு வந்தார் பிறகு ராபர்ட் மாஸ்டர் இனிமேல் உன்கிட்ட எதுவும் பேச மாட்டேன் என கூறிவிட்டார்.

இவ்வாறு தனக்கு மட்டும் மரியாதை வேண்டும் என கூறி வந்த தனலட்சுமி நேற்று நிவாஷ்னிடம் அசிமை பற்றி அவன் இவன் பேசியிருக்கிறார்.இந்த ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் இதனை விமர்சித்து வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக இதனை கமல் அவர்கள் கேட்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள.

bigg-boss-06

அசீமை அவன், இவன் எனக் கண்டபடி திட்டும் தனலட்சுமி.! இதனை கண்டிப்பாக கமல் கேட்க வேண்டும்.. ஆதங்கத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலைகள் கடந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் பெற்றுகரமாக நடந்து முடிந்தது இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகமும் வெளிவந்தது மேலும் கமல் உட்பட போட்டியாளர்கள் வர அனைவரும் அசீமை விமர்சித்து இருந்தார்கள்.

எனவே அசீம் இந்த வாரம் தன்னுடைய வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் தற்போது புதிய டாஸ்க்‌ ஒன்று நடைபெற்ற வருகிறது. இதுவும் மிகவும் சுவாரசியமாக இருந்து வரும் நிலையில் ஆரம்பமான முதல் கட்டமே சண்டை ஆரம்பித்து இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று தனக்கு மரியாதை தர வேண்டும் என்றும் தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என தனலட்சுமி ராபர்ட் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தற்பொழுது அசீமை அவன், இவன் என மரியாதை குறைவாக பேசி இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அசீமை குறித்து தனலட்சுமி பேசும் பொழுது ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டன்ட்டை எடுத்துக்கொண்டு அந்த வார இறுதியில் கமலஹாசனிடம் திட்டு வாங்குவது அசிங்கமாக இல்லையா என்று அசீமை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பிறகு இந்த போட்டியை பற்றிய பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவன், இவன் என்று அசீமை தனலட்சுமி பேசியதை நிவாஷினி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியின் போது தன்னை நாய் என்று மரியாதை குறைவாக பேசியதாக ராபர்ட் மாஸ்டர்யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் தனலட்சுமி தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார்.

ஆனால் அவரே இன்று அசீமை அவன் இவன் என்று பேசி இருப்பது மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எவ்வளவு அவர் மரியாதை தருகிறார் என்பது இதிலேயே தெரிய வருகிறது. மேலும் தொடர்ந்து மிகவும் திமிராக பேசி வரும் தனலட்சுமியை கமலஹாசன் அவர்கள் இந்த வாரம் கண்டிப்பாக கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

yuki

திரில்லர் படமாக உருவாகியுள்ள நடிகர் கதிரின் ‘யூகி’ படத்தின் டீசர் இதோ.!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் கதிர். மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘யூகி’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது.

அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த டீசரில் ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசார் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள் ஆனால் அதனை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அந்தப் பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே யூகி படத்தின் கதை என கூறப்படுகிறது. கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன் நட்டுராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனீஸ் காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்க புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிறகு ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.