actor

இரவு பார்ட்டியில் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்கும் பிரபல நடிகர்.! வைரலாகும் வீடியோ..

சினிமாவை பொருத்தவரை சினிமா துறையை சேர்ந்த அனைவரும் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இதில் ஒரு சிலர் இதனை தொடர்ந்து செய்வதால் அவர்களின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகரின் மீது சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது 90 கால கட்டத்தில் முன்னணி நடிகராக பலம் வந்தவர் தான் நடிகர் ராம் கோபால் வருமா இவர் தொடர்ந்து நல்ல கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களை வைத்து ஒரே வருடத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வந்தார்.

அந்த வகையில் நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான படம் தான் ரத்த சரித்திரம் 2. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது இதன் மூலம் முக்கிய இயக்குனராக திகழ்ந்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த இவர் திடீரென ஒரு கட்டத்திற்குப் பிறகு கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்கத் தொடங்கினார்.

இதன் காரணத்தினால் இவரின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் பல வகையும் வெளியாகி வந்தது அந்த வகையில் தன்னுடைய படத்தின் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக இரவு பார்வையில் கலந்து கொண்டு கும்மாளம் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் கலந்துகொண்டு அவர்களுடன் நெருக்கமாக குத்தாட்டம் போட்டு ஆட்டம் போட்டுள்ளார் இவ்வாறு அவர் மிகவும் உல்லாசமாக இருந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் தலைவான் கொடுத்து வச்சவன் என கூறி வருகிறார்கள்.

bigg-boss-67

மறுபடியும் மாறி மாறி குறை சொல்லிக் கொள்ளும் தனலட்சுமி மற்றும் அசீம்.! கடுப்பான விக்ரமன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது எனவே விஜய் டிவியும் வருடம் வருடம் ஏதாவது ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்த முறை கண்டன்டுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேறினார் இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாக வெளியேறிய நிலையில் இந்த வாரம் அசல் கோளாறு வெளியேறினார். அந்த வகையில் தற்பொழுது 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில் விக்ரமன், அசீம், ஆயிஷா, கதிர், ஷெரினா உள்ளிட்ட ஐந்து பெயர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

மற்ற போட்டியாளர்கள் இந்த லிஸ்டில் சிக்காத நிலையில் பலரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மிகவும் மகிழ்ச்சியாக அனைவரும் விளையாடி வந்த நிலையில் தற்போது விதவிதமான டாஸ்க்கள் நடைபெற்று வருகிறது. அதில் விவாத நிகழ்ச்சி, ராசிபலன், குக்கிங் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.

அதில் விவாத நிகழ்ச்சிகள் விக்ரமன், அசீம், ஷெரினா, தனலட்சுமி உள்ளிட்ட நால்வரும் இடம்பெறுகின்றனர் தற்பொழுது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அசீம் தனலட்சுமியை குறை கூற மறுபுறம் அசீமிற்கு புகழாரம் சூட்டுகிறார் ஷெரினா தொடர்ந்து தனலட்சுமி விக்ரமும் அசிமுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

bigg-boss-06

அசீமோட திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என ஆயிஷாவை வச்சி செஞ்ச கமல்.! வைரலாகும் ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியை தொடர்ந்து ஏராளமான டாஸ்கர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவரிடமும் கேள்வி கேட்டு வச்சி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் நேற்று டாஸ்கின் பொழுது ஷெரினாவை கீழே தள்ளி விட்டது தனலட்சுமி தான் என பலரும் கூறி வந்த நிலையில் குறும்படம் போட்டு அந்த குழப்பத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும் அசீம் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் ஷெரினா ஓவர் ஆக்டிங் செய்திருப்பது பலருக்கும் தெரிய வருகிறது.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இன்று ஆயிஷாவை குறி வைத்து இருக்கிறார் கமல் அதாவது நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் ஆயிஷா வேண்டுமென்றே ரட்சிதாவின் பொம்மையை வெளியேற்றிவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்து வந்தார் மேலும் அதனை கண்டினியூ செய்து வந்த நிலையில் தற்பொழுது உண்மையை கமல் அவர்கள் வெளிச்சம் போட்டு காமித்து இருக்கிறார்கள்.

அது ரக்ஷிதாவின் பொம்மை என்பதே எனக்கு தெரியாது என ஆயிஷா கூறுகிறார் அதற்கு ரக்ஷிதா விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என்னை வெளியேற்றி விட்டார்கள் என்பது வருத்தமாக இருப்பதாக கூறிய நிலையில் பிறகு ஆயிஷா அசீம் சொன்னதால்தான் அப்படி செய்ததாக கூறுகிறார்.

அதற்கு கமல் அவர்கள் அசீம் திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்து கொண்டீர்கள் என கூற ஆயிஷாவின் முகம் மாறுகிறது இவ்வாறு நேற்று ஷெரினாவை தொடர்ந்து இன்று ஆயிஷாவை கமல் வறுத்தெடுத்து உள்ளார் இந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

bigg boss 123

ப்ரோமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் கொடுத்துள்ளேன் எனக் கூறிய பிக்பாஸ் பிரபலம்.! ஷாக்கான ரசிகர்கள்..

விஜய் டிவியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவரும் பிரபலம் ஒருவர் பிரமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் செலவழித்து உள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகிறார்கள்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 19 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேறினார். பிறகு ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறிவிட்டார்

இவரைத் தொடர்ந்து தற்போது இந்த வாரம் அசல் கோளாறு வெளியாகி உள்ள நிலையில் அசீம் ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பப்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களை பாப்புலர் ஆக்குவதற்காக பணம் கொடுத்து தங்களைப் பற்றி ப்ரோமோஷன் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்து எவரும் எந்த ஒரு கருத்தும் முன் வைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வரும் ராம் தான் ப்ரோமோஷன்காக ரூபாய் 2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் கூறி வருகிறார்.

இந்த தகவல் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் மேலும் குயின்சியுடன் பேசி வரும்பொழுது இதை தெரிவித்து இருக்கிறார் மேலும் ஏற்கனவே நிறைய பேருக்கு ப்ரோமோஷன் செய்தவர்களிடம் தான் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இவர் கூறுவதைப் பார்க்கும் பொழுது முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் இவ்வாறு செய்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

https://twitter.com/gurunathaa4/status/1586349655490953216?s=20&t=l3v4Qw2MaIdCkNQWORUA0Q

bigg-boss-06

உங்களை விமர்சிக்கவில்லை.. கண்டிக்கிறேன் என அசீமை வெளுத்து வாங்கிய கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகளும் நிகழ்ந்தது இப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியின் பொழுது யார் மீது தவறு என தெரியாமல் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக் கொண்டு சண்டை போட்டு வருகிறார்கள். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள் வரை அனைவரும் கமலஹாசன் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் அசீம் ஆயிஷாவை வாடி போடி என பேசி பெரிய பிரச்சனையானது. எனவே இதனை கமலஹாசன் அவர்கள் கண்டித்தார் இதனை தொடர்ந்து அசீம் இந்த வாரம் தனலட்சுமியிடம் சண்டை போட்டு இருக்கிறார். ஷிவின் உள்ளிட்ட பலரது பாடி லாங்குவேஜ்யும் செய்து காட்டி கலாய்த்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் கமல் அசீமை கடுமையாக எச்சரிக்கிறார். அதில் அவர் கூறுகையில் நான் உங்களிடம் எதையும் கேட்க விரும்பவில்லை நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும் நான் விமர்சிக்கல கண்டிக்கிறேன் என கூற அதிர்ச்சியடைகிறார். இந்த வாரம் ஆக மொத்தத்துல அசீமை வைத்து இந்த  அந்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அசல் கோளாறு வெளியேறுகிறார் இவரைத் தொடர்ந்து அசீமுக்கும் ரெக்கார்ட் கொடுத்து வெளியில அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்த ஏராளமான சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து யார் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

biggboss

யாராக இருந்தாலும் காப்பாத்த முடியாது.. ரெட் கார்ட் ரெடி.! அதிரடி காமித்த கமல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே ஏற போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அதிக அளவில் சண்டை போட்டு வந்த நிலையில் அனைவருக்கும் உண்மையை தெரிவிக்க வேண்டும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கமலின் வருகைக்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் கமலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்புடனும் நடத்தி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீசன் அறிமுகமாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது வாரம் ஒளிபரப்பாகி வந்தது. எனவே கடந்த இரண்டு வாரங்களை விட இந்த வாரம் பெரிதளவில் சண்டை வெடித்தது.

அதிலும் குறிப்பாக அசீம் தனலட்சுமி, அமுதவாணன், ஷிவின் என நிறைய பேருடன் சண்டை போட்டார் எனவே ஷிவினை தரைகுறைவாக கிண்டல் அடித்தது, அமுதவாணனிடம் திமிராக பேசியது போன்றவை போட்டியாளர்களையும் கடுப்பேற்றியது. எனவே தற்பொழுது அசீமுக்கு ரெக் கார்டு கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமாவில் கமல் பேசுகையில் ‘என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.. எனக்கும் தெரியும்.. ஆனால் உள்ள இருக்கிறவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே.. பழி போடுகிறது ஈசி.. பழைய தாங்குவது கஷ்டம் அதை அவங்களுக்கு புரிய வைக்கணும் சில பேரை காப்பாற்றியாகணும், சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது என கமல் பேசும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

raveenthar

தனக்கு சொர்க்கம் கிடைச்சாச்சு.. என திருமணமான இரண்டே மாதங்களில் குட் நியூஸ் சொன்ன ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

சின்னத்திரையில் பிரபல ஜோடிகளான ரவீந்தர் – மகாலட்சுமி இருவருக்கும் திருமணம் ஆகிய இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்பொழுது இந்த ஜோடி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி உள்ளார்கள் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரன் அவர்களை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து ரகசியமாக இவர்களுடைய காதல் வைக்கப்பட்டு இருந்தது பிறகு தங்களுடைய குடும்பத்தினர்கள் சமதத்துடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரவீந்தர் வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் கைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் இவர்களை விமர்சித்து வந்தார்கள்.

அந்த வகையில் மகாலட்சுமி இவரை காசுக்காக தான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பல பேட்டிகளில் தன்னுடைய சம்பளத்தை பற்றி இந்த ஜோடிகள் கூறியிருந்தார்கள். குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஒருபுறம் இவர்களை விமர்சனம் செய்து வந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மகாலட்சுமி மற்றும் ரவிதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதம் ஆகும் நிலையில் இருவரும் ஜோடியாக குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்கள் அதாவது இந்த ஜோடி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்களாம். அந்த காரின் விலை இந்திய மதிப்புக்கு ரூபாய் 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோவை மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர ரசிகர்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரவீந்தர் ‘வாழ்க்கை முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா அது பெரிய அதிர்ஷ்டம்.. அப்படி நமக்கு கிடைத்த பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடைச்சாச்சு என குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

biggboss 6

தொடர்ந்து பல சண்டைகளுக்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களாக நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சர்ச்சைகளுடன் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலரின் உண்மையான முகமும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சில குஷியான காட்சிகள் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் ஷெரினா போலவே பாட்டு பாடி ஆட்டம் போடும் குயின்சியின் வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குயின்சி ஷெரினா போலவே நடனமாடி அவரை கிண்டல் செய்கிறார் இதனை பார்த்து சிரிக்கும் ஷெரினா போதும் நிறுத்து என்று கூறிய போதும் குயின்ஷா அதனை கேட்காமல் தொடர்ந்து ஷெரினாவை கிண்டல் செய்து வருகிறார்.

பிறகு குயின்ஸ் உடன் இணைந்து மகேஸ்வரியும் சேர்ந்து ஷெரினாவைக் கிண்டல் செய்து வருகிறார்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஷெரினா குயின்சியை அடிப்பதற்காக ஓட துரத்துகிறார் ஆனால் அவரிடம் இருந்து பிடிப்படாமல் தப்பித்து விடுகிறார் குயின்சி பிறகு குயின்சியைப் பிடித்து தருமாறு மணிகண்டனிடம் உதவி கேட்கிறார்.

மமணிகண்டன் அப்பொழுதுதான் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார் இந்நிலையில் நீங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட ஆப்பிள் மாதிரி இருக்கீங்க என குயின்சி அவரை கேலி செய்கிறார் எனவே இதனை தொடர்ந்து குயின்சியைப் பிடிக்க வரும் பொழுது என் அருகே வந்தால் துண்டை அவிழ்த்து விடுவேன் என பயமுறுத்த மணிகண்டன் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார் இவ்வாறு இந்த காமெடியான காட்சியை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி முதல் போட்டியாளரான சாந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மேலும் இந்த வாரம் அசல் கோளாறு வெளியே செல்ல‌ அதிக வாய்ப்பு இருக்கிறது.

asim

ஒன்றிணைந்து அசீம்க்கு ஆப்பு வைத்த ஹவுஸ் மேட்ஸ்கள்.! கொஞ்சம் பேச்சா பேசுனா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்த பல விறுவிறுப்பான டாஸ்வுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தொடர்ந்து இவர்களுக்கிடையே ஏராளமான சண்டைகள் நிலவி வரும் நிலையில் தற்போது கடந்த வார டாஸ்க்கில் ஓவராக சீன் போட்டு அனைத்து போட்டியாளர்களால் மோசமாக விளையாடிய போட்டியாளர் என தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் ஜெயிலுக்குள் சென்றிடு இருக்கிறார்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் மிகவும் விருப்பாக நடைபெற்று வந்தது இந்த டாஸ்க் பிக்பாஸ் வீடு அலங்கோலமானது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக விளையாடி வந்தார்கள். மேலும் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள்.

இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகவும் தெரியவந்தது மேலும் சிலருடைய உண்மையான கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக அசல் கோளாறு அசீம் பொம்மையையும், அசீம் விக்ரமின் பொம்மையையும் வைத்திருந்தார்கள். பொம்மை வைக்கும் இடத்தில் ஒரு இடம் காலியாக இருந்த நிலையில் ஏதாவது ஒரு பொம்மையை அந்த இடத்தில் வைக்க சொன்னார்கள்.

ஆனால் இருவரும் பொம்மையை வைக்காமல் இந்த போட்டியில் இருந்து அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் வெளியேறினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றுடன் இந்த டாஸ்க் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த டாஸ்கின் இறுதியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார்? மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர்கள் யார்? என்பதை சக ஹவுஸ் மேட்சுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி ஹவுஸ் மேட்ஸ்கள் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அதாவது நீயும் உம்மை.. நானும் பொம்மை டாஸ்க் மிகவும் மோசமாக விளையாடிய ஷிவின் மற்றும் அசீம் இருவரையும் தேர்ந்தெடுத்து ஜெயிலுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.