asim vikraman

அசல் கோளாரால் விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்.! வெளிவந்த ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் அனைவரும் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார்கள்.

மேலும் இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகம் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பொம்மை டாஸ்க் மூலம் விக்ரமனுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல கிடைத்து இருக்கிறது. மேலும் அசல், ஷெரினா, அசீம் ஆகியோர்களின் முகத்திரையும் அனைவரும் முன்பும் கிழிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் தங்களால் முடிந்தவரை பல பிளான்களை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் பொம்மைகள் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் அந்த இடத்தில் பொம்மைகளை வைக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் அசீம் பொம்மையை வைத்துள்ள அசல் கோளாறு மற்றும் விக்ரமன் பொம்மையை வைத்துள்ள அசீம் ஆகிய இருவருமே பொம்மைகளை வைக்கவில்லை.

மேலும் இதற்கு முன்பு இதே போல் மகேஸ்வரி தனலட்சுமி நேரடியாக சண்டை போட்டு வந்த  நிலையில் தற்பொழுது இவர்களும் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் சிறிது நேரம் கழித்து பொம்மைகளை யாரும் வைக்காததால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் போட்டியிலிருந்து வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இவ்வாறு இதனைத் தொடர்ந்து என்னவெல்லாம் இந்த டாஸ்க் நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் கடந்த வாரம் சாந்தி வெளியேறிய நிலையில் பிறகு ஜிபி முத்துவும் தானாக முன்வந்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவ்வாறு இந்த வாரம் அசல் கோளாறு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அவர்தான் பெண்களை தொட்டு தடவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பாகி இருக்கிறது.

yasotha 1

அமைதி-ஆக்ரோஷம் என வித்தியாசமாக நடித்திருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் டிரைலர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தற்பொழுது யசோதா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் யசோதா திரைப்படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்.

அந்த வகையில் இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் யசோதா கர்ப்பமாக இருக்கிறார்.

அதன் பிறகு அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்தவுடன் ஏற்படும் பிரச்சனைகளை குறிக்கும் வகையில் சுற்றி ஏற்பட்டுள்ள சூழ்ச்சி குறித்தும் தெரிந்து கொண்ட பெண் அவர் எப்படி கொந்தளித்து எழுகிறார் என்பதும் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.

இந்த படத்தில் மிகவும் அமைதியான அன்பான கர்ப்பிணி பெண்ணாகவும் ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்கும் ஒரு பெண்ணாகவும் நடிகை சமந்தா நடித்துள்ளார். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சமந்தாய் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்பது உணர முடிகிறது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தை ஹரி ஹரிஷ் இயக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மணி சர்மா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் ரிலீஸ் இருக்காங்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

bigg boss rachitha

பாக்காத பாக்காத … ரட்சிதாவை அப்படி ஒரு பார்வை பார்க்கும் ராபர்ட்.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட இந்த ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று வந்த நிலையில் சாந்தி இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே வெளியேறியுள்ளார்.

மேலும் இந்த வாரம் யார் வெளியே ஏறுவார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சிகள் இந்த சீசனில் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் தான் இவர் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியாக பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்பொழுது பொம்மை டாஸ் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகம் தெரிய வருகிறது. அந்த வகையில் முக்கியமாக விக்ரமன் அவர்களுடைய செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ரட்சிதா இந்நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக ஒரு கம்போர்ட் சூனில் இருந்து வருகிறார் மேலும் பெரிதாக கோபப்படாமல் அமைதியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஆயிஷா பிளான் போட்டு ரக்ஷிதாவை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். ஆனால் நல்லவர் போல் ஆயிஷா சீன் போட்டு வரும் நிலையில் ரக்ஷிதா அதனை நம்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இதனை பற்றி ரக்ஷிதா அனைவரிடமும் கூறிவரும் நிலையில் அப்பொழுது ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது ரட்சிதா விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவுக்கு பின்னணியாக சிவகார்த்திகேயன் மற்றும் திவ்யா நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்த வசனங்களையும் அமைத்திருக்கிறார்கள்.

https://twitter.com/whyrajawhy/status/1585615497009106945?s=20&t=c8JMqfABIbW3OjztKYV1iQ

asal kolaru

தடவுனது போதாது என்று கடிக்க ஆரம்பித்த அசல் கோளாறு.! இதையெல்லாம் கண்டிப்பாரா கமல்…! வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன் இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூன்றாவது வாரத்தில் தற்பொழுது ஏராளமான சண்டைகள், சச்சரவுகள் என விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் முதல் நபராக சாந்தி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் தீபாவளியை தன்னுடைய குடும்பத்தினர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது சக போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் படுமோசமாக நடந்து கொள்ளும் நிலையில் யார் அடுத்தடுத்து வெளியாகுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி, அசீம் என அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டை போட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மற்றொருபுறம் அசல் கோளாறு பல பெண்களிடம் தகாத வகையில் தொட்டு தடவி மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது எனவே இவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது அசல் கோளாறுடன் நிவாஷினி  மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் மேலும் அவருடன் மட்டும் தான் பேசி வருகிறார். இருவரும் தனியாக பெரும்பாலும் பேசி வரும் நிலையில் தற்பொழுது அசல் கோளாறு நிவாஷினியை கடித்து இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் கமலஹாசன் அவர்கள் இதையெல்லாம் கேட்கவே மாட்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

vijay 67

‘தளபதி 67’ சத்தமே இல்லாமல் மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இவருடைய 67வது திரைப்படத்தை தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த படத்திற்கு தற்பொழுது தளபதி 67 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த ஏராளமான தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தில் வில்லன்களாக மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதமேனன் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும் இவர்களை தொடர்ந்து திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய மூன்று முன்னணி நடிகைகளும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இவ்வாறு சூப்பர் ஹிட் பெற்ற இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து இவர் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்பொழுது வரும் என காத்திருந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என கூறியிருக்கிறார் மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் வெளியாகும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

தற்பொழுது தளபதி 67 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய இவர் மேலும் தான் கைதி படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தளபதி 67 படத்தை முடித்தவுடன் கைது படத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

jhansi

மிரட்டலாக வெளியானது அஞ்சலியின் ‘ஜான்சி’ ட்ரைலர்…!

தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தற்பொழுது ஜான்சி என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார் அந்த சீரியலின் ட்ரெய்லர் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதாவது நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலி, இயக்குனர் திரு உள்ளிட்ட ஏராளமான பட குழுவினர்கள் கலந்து கொண்டார்கள்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் தான் திரு. இவருடைய இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி வெப் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் இவருடன் இணைந்து சாந்தினி, சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

அதில் இந்த தொடரில் ஜான்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நந்தினி தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுகிறார் எனவே அவருடைய கணவர், குழந்தை யார் என சந்தேகமாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென அவருக்கு பழைய நினைவுகள் வருகிறது. அப்பொழுது அவர் யார்? அவரது எதிரிகள் யார். என்பது தெரிய வருகிறது.

அதனை அடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் இந்த சீரியல் உருவாகி இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில்  இந்த படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா தயாரிப்பில் இன்று முதல் ஹாட் ஸ்டார் ஒடிடித் தளத்தில் வெளியாகிவுள்ளது எனவே இந்த தொடர் நல்ல வரவேற்பினை பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

biggboss6

நம்ம வெறும் பிரண்ட் தானா.? எனக் குயின்சியிடன் கேட்ட அசீம்.!

பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடர்ந்து பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகள் என பல ரகளைகள் நடந்து வருகிறது மேலும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பல ரெட் கார்ட் வாங்கிய ஒருவர் தான் அசிம்.

இவர் ஆயிஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை வாடி போடி என மிகவும் மோசமாக பேசினார் எனவே அனைவரும் இவரின் மீது கோபத்தில் இருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தன்னை அழகாக என நினைத்துக் கொண்டு ஓவராக சீன் போடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது பொதுவாக அசீம் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களிடம் மிகவும் திமிராகவும், அடாவடியாகவும் நடந்து கொண்டு வருகிறார் மேலும் பெண் போட்டியாளர்களிடம் வழிந்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக குயின்சிடம் ரொம்ப வழிந்து வழிந்து பேசி வருகிறார். அந்த வகையில் குயின்சிடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்றுதான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதில் அசீம் குயின்சியிடர் நம்ம பிரெண்ட்ஸ் தானே என்றைக் கேட்கிறார் அதற்கு உடனே குயின் செய்யும் ஆமாம் என சொல்கிறார் அதற்கு பாய் ப்ரெண்டா என்னைய ஆசிம் கேட்டவுடன் வெறும் பிரண்ட் தான் நீங்கள் பாய் அவ்வளவு தான் இது தவிர பாய் பிரண்ட் கிடையாது என்று குயின்சி சொல்கிறார் இது எல்லாம் பேசி முடித்த கடைசியில் சும்மாதான் சொன்னேன் என்று அசீம் சொல்கிறார் அதை பார்த்த ரசிகர்கள்  கண்டபடி திட்டி வருகிறார்கள்.

மேலும் இதற்கு முன்பு குயின்சிடன் நாம ஜோடி சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் நம்ம நடனத்தை 20 பேர் பார்க்க நினைக்கவில்லை ஆறு கோடி பேர் பார்க்கிறார்கள் என்று தான் நினைத்து ஆட போகிறேன் என்று கூறினார். அதன் பிறகு குயின்சி நான் வேறு ஒருவருடன் நடனம் ஆடுகிறேன் என முடிவெடுக்கிறார் இதனால் அசீம் ஜெரினா உடன் சேர்ந்து நடமாடுகிறார் இவ்வாறு இதனை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அசீமை கிண்டல் செய்து வருகிறார்கள்.

ashyariya rajesh

பல கனவுகளுடன் இருக்கும் பெண்ணை அடுப்பங்கரையில் தள்ளிய கணவர் மற்றும் மாமனார்.. ஸ்வர்யா ராஐஜேஷ் நடித்துள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன், படத்தின் டிரைலர் இதோ.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகையை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெரும் கனவுடன் ஒரு வீட்டிற்கு மருமகளாக செல்லும் ஒரு பெண் தனது ஆசை, கனவுகள் ஆகியவற்றை முடக்கி விட்டு வெறும் அடுப்பங்கரையில் மட்டுமே வேலை செய்யும் நிலைமை ஏற்படுகிறது.

கணவர், மாமனார் இருவரும் அதிகார தோரணையில் கட்டளை போடுகிறார்கள் எனவே அவர் எப்படி சமாளித்து தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதே தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் கதை. இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தடுத்திருக்கிறார் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் மலையாளத்தில் நடிகை நிஷா சஜயன் நடித்த கேரக்டரில் தான் தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தினை ஆர் கண்ணன் இயக்கியிருக்கிறார் மேலும் சில மணி நேரங்கள் இருக்கும் முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிய வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவிந்தர் நடித்திருக்கிறார் இவர் பாடகி சின்மயின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களை தொடர்ந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

samantha

நாய் விளம்பரத்திற்காக படும் கிளாமருடையில் நடித்திருந்த சமந்தா.! கடுப்பான ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவர் சமீப காலங்களாக பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு இவர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கியதில் இருந்து கிளாமரில் சர்ச்சைக்குரிய ஆடைகள் அணிவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது இதனை தொடர்ந்து சகுந்தலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இவ்வாறு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை தொடங்கி தற்போது ஹிந்திலும் கால் தடம் பதித்துள்ளார்.

அதாவது அக்ஷய குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா போன்ற மூன்று முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நாய் உணவு விளம்பரத்தில் நடித்திருந்தார் சமந்தா அந்த விளம்பரத்தில் கூட மிகவும் கிளாமரான உடைமையில் நடித்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் விளம்பரத்தில் கூட இப்படி ஒரு உடை தேவைதானா என கூறி வருகிறார்கள். இவ்வாறு சமீப காலங்களாக இவர் கவர்ச்சியில் மிகவும் ஆர்வம் காட்டி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் முக்கியமாக இவர் புஷ்பா படைத்த இடம் பெற்று இருந்த பாடல் ஒன்று இருக்கு நடனமாடிருந்தார் இது ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் ஈர்த்தது எனவே அந்த பாடல் மிகப்பெரிய வெற்றினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமந்தா நாக சைத்யாவுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

BIGG-BOSS-12

தீபாவளியை கோலவாலமாக கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ..

பொதுவாக விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசனும் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

முந்திய சீசன் கடை விட இந்த சீசனில் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது 21 போட்டியாளர்களுடன் களம் இறங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது gp முத்து மற்றும் சாந்தி இருவரும் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 19 நபர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் விரைவில் இந்நிகழ்ச்சியில் சில முக்கிய நடிகர்கள் பங்கு பெற இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

சண்டை சச்சரவு என இருந்து வரும் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது தீபாவளியை மிகவும் கோலாகலமாக போட்டியாளர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது அதாவது முதல் ப்ரோமோவில் இன்று போட்டியாளர்கள் நாமினேஷன் பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருந்தது.

இரண்டாவது பிரம்மாவின் தீபாவளி முன்னிட்டு அவர்கள் வைக்கப்பட்டுள்ள சிறப்பான டாஸ்க் தான் இடம் பெற்று இருக்கிறது இந்நிகழ்ச்சியை மைனா மற்றும் அமுதவாணன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள். அதில் மைனா சில கேள்விகளை போட்டியாளர்களிடம் முதலில் கேட்கிறார் அதன்பிறகு பாசிட்டிவான கேள்விகள் இருந்தாலும் சில நெகட்டிவ் கேள்விகளும் இருக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் போட்டியாளர் யார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் இதை வைத்து பெரிய பிரச்சனை உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது மற்ற நாட்களில் தான் சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் தற்பொழுது தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுதும் இவ்வாறு சண்டை போட்டு கொள்க போகிறார்கள்.