பாக்யாவை பழி வாங்குவேன் என பல்பு வாங்கிய கோபி!! ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் வெடிக்கப் போகும் பிரச்சனை. பாக்கியலட்சுமி.

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் வரவில்லை என்ற சந்தோஷத்தில் கோபி ரெஸ்டாரண்டுக்கு சென்று ஈஸ்வரி இடம்  ஏத்தி விடுகிறார். உடனே அதற்கு தாத்தா எரிகிற நெருப்புல எண்ணெய ஊத்தி குளிர் காயாதடா என கோபியை திட்டுகிறார். அப்போது கோபிக்கு ராதிகா போன் பண்ணி எங்க இருக்கீங்க என கேட்கிறார். நான் வெளியில் வந்து இருக்கேன் என பொய் சொல்கிறார். அதற்கு தாத்தா பாரேன் ஹோம் மினிஸ்டர் போன் பண்றதும் எப்படி பயப்புடுறான் என கூறுகிறார். பாக்கியா, எழில், அமிர்தா என வெளியில் நின்று பேசிக்கொள்கின்றனர்.

அப்போது கோபி இன்னும் நடந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்லாமல் தான் நடிச்சிட்டு இருக்கியா என மனசுக்குள்ளே பாக்கியாவை பத்தி பேசி கொள்கிறார். எப்படியும் இன்னைக்கு மினிஸ்டர் இங்க வர மாட்டாங்க நீ என்ன பண்ற எப்படி திறக்கிற என நான் பார்க்கிறேன் என நினைத்துக் கொள்கிறார்.

மனோஜை பங்கமாய் அசிங்கப்படுத்திய முத்து.. ஸ்ருதியிடம் ஏத்தி விடுவதாக நினைத்து அசிங்கப்பட்டு நிற்கும் விஜயா…

ரெஸ்டாரன்ட் திறப்பிற்கு நேரம் ஆயிடுச்சு நல்ல நேரம் முடிய போகுது என தாத்தா பாட்டி சொல்கின்றனர். என்னமா பாக்கியா மினிஸ்டர் வருவாங்களா வர மாட்டாங்களா என்ன சொல்றாங்க என கேட்க  அதற்கு பாக்யா இல்ல  மாமா மினிஸ்டர் பி ஏ  போன் எடுக்கல என கூறுகிறார்.

உடனே ஈஸ்வரியும் கோபியும் நக்கலாக குத்திகாட்டி பாக்யாவை பேசுகின்றனர். மாமா நான் ஒன்னு சொல்றேன் தப்பா நினைச்சுக்காம நீங்களும் அத்தையும் இந்த ரெஸ்டாரன்ட் திறந்து வைங்க ப்ளீஸ் என கேட்கிறார். அதற்கு பாட்டி உனக்கு நாங்க இப்ப தான் தெரியுறமா என கேட்கிறார் ஆனால் தாத்தா அவ்வளவு தானா திறந்து வைக்கிறோம் இதுல என்ன இருக்கு என திறக்கப் போகிறார்.

கதிர் வெளிப்படுத்திய பாசம்! மனம் உடைந்து போகும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்..

அதற்குள்  மினிஸ்டர்  பிஏவிடம் சிஎம் மீட்டிங்கு பாயிண்ட் ரெடி பண்ணிட்டீங்களா எனக் கேட்கிறார் அதற்கு  அவர் இல்லை என்று சொல்கிறார் உடனே ஆபீஸில் இருக்கும் இன்னொரு நபருக்கு மினிஸ்டர் போன் பண்ணி பாய்ண்ட் ரெடி ஆயிடுச்சு எனக் கேட்கிறார். அப்போது அவர் இன்னைக்கு உங்களுக்கு பாக்கியாவோட ரெஸ்டாரன்ட் திறப்பு விழா நிகழ்ச்சி இருந்தது ஆனா நீங்க அங்க போகாமல் ஸ்கூலுக்கு போறீங்க என கூறுகிறார்.

உடனே போனை வைத்துவிட்டு மினிஸ்டர் பி ஏ வை பார்த்து நீ தான் இந்த வேலையை பார்த்தியா ஏன் இன்னைக்கு பாக்கியா ஓட ரெஸ்டாரன்ட் திறப்பு விழா இது எப்படி இப்ப புதுசா நடுவுல ஸ்கூல் பங்க்ஷன் ஊர்க்காரர், கட்சிக்காரர் என உன்னை வேலைக்கு வச்சா நீ என் பேரையே கெடுக்க பாக்குறியா அடுத்த பத்து நிமிஷத்தில் நான் பாக்கியாவோட திறப்பு விழாவுல இருக்கணும் என சொல்கிறார்.

ஐஸ்வர்யாவை கடத்தி கல்யாணம் என்கிற பேர்ல காமெடி பண்ணும் ரவுடி!! என்ன நடக்குதுன்னு தெரியாம சந்தோஷத்தில் கௌதம், சித்ராதேவி..ஆஹா கல்யாணம்

அதே சமயத்தில் அவர் போனை பார்க்கிறார். அப்பொழுது அதில் பாக்கியா அனுப்பிய வாய்ஸ் நோட் இருக்கிறது. அதில் பாக்யா மிகவும் பணிவாக மேடம் நீங்க எங்களோட ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு ஒரு அஞ்சு நிமிஷம் வரணும் வந்து எங்கள வாழ்த்தி விட்டுப் போகனும் உங்களுக்காக நாங்க காத்திட்டு இருக்கோம் என பேசி உள்ளார். உடனே மினிஸ்டர் பாக்கியாவின் திறப்பு விழா பங்ஷனுக்கு சென்று விடுகிறார்.

மினிஸ்டரை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல்  பூ கொடுத்து மரியாதை செலுத்தி அவரை வரவேற்கின்றனர். இதைப் பார்த்த கோபி இது எப்படி நடந்தது கொஞ்ச நேரம் தான்  சந்தோஷமா இருந்தோம் அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு என யோசிக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.