ஐஸ்வர்யாவை கடத்தி கல்யாணம் என்கிற பேர்ல காமெடி பண்ணும் ரவுடி!! என்ன நடக்குதுன்னு தெரியாம சந்தோஷத்தில் கௌதம், சித்ராதேவி..ஆஹா கல்யாணம்

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் கோடிஸ்வரி ஐஸ்வர்யாவை கடத்தி வைத்திருக்கும் இடத்தின்  லொகேஷனை மகாவுக்கு ஷேர் பண்ணி விட்டு ஐஸ்வர்யாவை கட்டி வைத்திருக்கும் வீடியோவையும் அனுப்பிவிடுகிறார். உடனே அதைப் பார்த்த ஐஸ்வர்யாவும் மஹாவும் ஹாஸ்பிடலில் இருந்து யார்கிட்டயும் எதையும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகின்றனர்.

இவர்கள் ஐஸ்வர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்தது தெரியாமல் கௌதமும், சித்ரா தேவியும் ஐஸ்வர்யா இறந்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் ஒரே ட்ராமாவாக போடுகின்றனர். அடுத்த சீனில் ஐஸ்வர்யாவுக்கு தாலி கட்டுவதற்காக ரவுடி மாலை மாத்தி தாலியை கையில் வைத்துக் கொண்டு  ரெடி ஆகிறார்.

காதலோடு பார்த்துக் கொள்ளும் ஜெனி, செழியன்!! குழந்தையை கொஞ்சி தவழும் செழியன்!! ஒரே பாசப் போராட்டமா இருக்கு..

உடனே அங்கிருந்த கோடீஸ்வரி ஒரு சுண்டு கோல் எடுத்து அவனது கையில் அடிக்கிறார். உடனே அந்த ரவுடி என்னை யாரோ கல்லால அடிக்கிறாங்க என ஆட்களை அனுப்பி பார்க்க சொல்கிறார். ரவுடிகளும் போய் தேடுகின்றனர் அப்போது கோடிஸ்வரி பூனை போல் கத்துகிறார் உடனே பூனை தாண்டா என சொல்லிவிட்டு அங்கிருந்து ரவுடிகள்  கிளம்புகின்றனர். அந்த ரவுடி தாலியை கையில் வைத்துக் கொண்டு பயங்கர காமெடியாக பாட்டு பாடி ஐஸ்வர்யாவை கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

கோடீஸ்வரி என்ன மகா இன்னும் வரல அவங்க வர்றதுக்குள்ள இவன் தாலி கட்டிடுவான் போல என்ன செய்றது என புலம்பி கொண்டிருக்கிறாள். அப்போது மகா போன் பண்ணுகிறாள். அட்ரஸ் தெரியவில்லை என கேட்கிறாள். உடனே கோடீஸ்வரி இவங்க வருவாங்கன்னு பார்த்தா அவ்வளவுதான் என முடிவு எடுத்து ரவுடிகளை அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

ஐஸ்வர்யாவை கண்ணை மூட சொல்லி ரவுடிகளின் கண்ணில் சிமெண்டை வாரி வீசி அவர்களை அடித்துவிட்டு ஐஸ்வர்யாவின் கையில் இருக்கும் கட்டை அவிழ்த்து தப்பித்து ஓட பார்க்கின்றனர். அப்போது அவர்களை ரவுடிகள் மீண்டும் பிடித்து விடுகின்றனர்.

ஆமாம் ஆன்ட்டி நீங்க எப்படி இங்க என ரவுடி கேட்கிறார். அதற்கு கோடீஸ்வரி என் மக போட்டோவை என்கிட்ட காமிச்சு பொருத்தம் எப்படி இருக்குன்னு கேட்டல்ல அப்படித்தான்டா எனக் கூறுகிறார். அதான பார்த்தேன் இல்லன்னா வேற யாரும் இந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாது என ரவுடி கூறுகிறார்.

கதிருக்காக சமைக்கும் ராஜி.. வெறுப்பாக இருப்பது போல் நடித்துவிட்டு ருசிச்சு சாப்பிட்ட கதிர்.. மறைந்திருந்து பார்த்த ராஜி.. சரவணனுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில் வில்லங்கம் செய்யப்போகும் குமரவேல்…

பேசிட்டே இருக்காதீங்க தல நேரம் ஆகுது சீக்கிரம் தாலிய கட்டுங்க என மற்ற ரவுடிகள் சொல்ல உடனே நீ சொல்றதும் சரிதாண்டா என சொல்லிவிட்டு தாலியை கட்ட போகிறார். அப்போது அங்கு சூர்யாவும் மகாவும் போலீஸுடன் வந்து விடுகின்றனர்.

அப்போது அந்த ரவுடி இந்த ஜென்மம் இல்ல அடுத்த ஜென்மம் எடுத்தாலும் நான் இவளை பின் தொடர்ந்து வந்துட்டு தான் இருப்பேன் என கூறுகிறார். அதற்கு சூர்யா அவ வேற ஒருத்தவன் பொண்டாட்டி டா என சொல்ல  அதற்கு அந்த ரவுடி திருட்டு மாங்காவுக்கு தான் புளிப்பு அதிகம் என கூறுகிறார்.

உடனே கோடீஸ்வரி அந்த ரவுடியை போட்டு அடிக்கிறார். உடனே அந்த ரவுடி சார் சார் இந்த பொம்பளைகிட்ட இருந்து எப்படியாவது என்ன காப்பாத்துங்க சார் என கத்துகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.