காதலோடு பார்த்துக் கொள்ளும் ஜெனி, செழியன்!! குழந்தையை கொஞ்சி தவழும் செழியன்!! ஒரே பாசப் போராட்டமா இருக்கு..

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில்  ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்காக  மினிஸ்டர் வருவார் என எதிர்பார்த்து அனைவரும் ரெஸ்டாரண்டில் காத்திருக்கின்றனர். எழில் இனியாவிடமிருந்து குழந்தையை வாங்கி செழியனிடம் கொடுக்கிறார். குழந்தையை வாங்கி கட்டி அணைத்து முத்தமிட்டு பாச மழையாக பொழிகிறார் செழியன். இதைப் பார்த்து அனைவரும் மனம் உடைகின்றனர். இந்த நிலையில் தாத்தா, பாட்டி இருவரும் கோவிலுக்கு போய்விட்டு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர்.

ரெஸ்டாரண்டுக்கு வந்ததும் பாட்டி ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் என்கின்ற நேம் போர்டு முன்பு நின்று  செல்பி எடுத்துக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து ஜெனியையும் குழந்தையையும் பார்க்கிறார்.உடனே குழந்தையை வாங்கி பாட்டி கொஞ்சுகிறார்.

ஜெனி பாட்டியிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் பாட்டியோ நீ என்கிட்ட பேசாத போ என பாசமாக ஜெனியிடம்  கோபப்படுகிறார். தாத்தாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். உடனே கடை திறப்பு விழாவிற்கு நேரமாகிவிட்டது என கடையை திறக்க இன்னும் மினிஸ்டர் வரவில்லையே என பாட்டி கேட்கிறார்.

ஒரே ஒரு முறை மட்டுமே அட்ஜஸ்ட்மென்ட்.. அதுவும் 20 வயதிலேயே.. உண்மையை உடைத்த நடிகை ரெஜினா..

அதற்கு தாத்தா மினிஸ்டர் சொன்னா உடனே வந்துருவாங்களா கொஞ்சம்  தாமதம் இருக்க தான் செய்யும் என கூறுகிறார். நேரம் ஆகியும் வராததால் அங்குள்ளவர்கள் இந்த சின்ன கடை திறப்பு விழாவுக்கெல்லாம் மினிஸ்டர் வருவாங்களா நாம தான் பாக்கியா சொன்னத நம்பி வருவாங்கன்னு நினைச்சோம் ஆனா அவங்க வர மாட்டாங்க என பேசிக்கொள்கின்றனர்.

உடனே தாத்தாவும் பாட்டியும் மினிஸ்டர் போனுக்கு ட்ரை பண்ணி பாரு என சொல்கின்றனர். பாக்யாவும் மினிஸ்டரின் பி எ வுக்கு போன் பண்ணுகிறார். அவர் போனை எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மினிஸ்டரின் போனுக்கு பாக்யா  வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

மேலும் சிறிது நேரம் மினிஸ்டர்காக காத்திருக்கின்றனர். உடனே ஈஸ்வரி என்ன போன் பண்ணுனியா என கேட்க அதற்கு பாக்யா நான் போன் பண்ணுனன் மினிஸ்டரின் பிஎ எடுக்கலை என கூறுகிறார். உடனே பாட்டி அப்ப வந்த மாதிரி தான் என  கூறுகிறார்.

கதிருக்காக சமைக்கும் ராஜி.. வெறுப்பாக இருப்பது போல் நடித்துவிட்டு ருசிச்சு சாப்பிட்ட கதிர்.. மறைந்திருந்து பார்த்த ராஜி.. சரவணனுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில் வில்லங்கம் செய்யப்போகும் குமரவேல்…

ஆனாலும் மனம் தளராமல் பாக்யா மீண்டும் மினிஸ்டரின் ஆளுக்கு போன் பண்ணி கேட்கிறார் அப்போது அவர் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் திறப்பு விழா தான அங்க தான் முதல்ல வர்றதா  இருந்தது ஆனா இப்போ ஒரு ஸ்கூல் ஆனுவல் டே ஃபங்ஷனுக்கு போறாங்க என கூறுகிறார் இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

இப்படி பாக்கியா போனில் பேசிக் கொண்டிருப்பதை கோபி ஒளிந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.