கதிர் வெளிப்படுத்திய பாசம்! மனம் உடைந்து போகும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்..

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் சக்திவேல் பெண் வீட்டார்க்கு போன் செய்து மாப்பிள்ளைக்கு பெரிய குறை ஏதோ இருக்கு அதனால தான் அவருக்கு கல்யாணம் ஆகாம அவங்க ரெண்டு தம்பிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என பொய் சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட பெண்ணின் அப்பா மாப்பிள்ளை வேண்டாம் என முகத்துக்கு நேராக சொல்லிவிடுவார். இதனால் மொத்த குடும்பமும் மன கஷ்டத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து அனைவரும் வீட்டுக்குப் போகின்றனர் வீட்டில் இருக்கும் கதிரும் ராஜியும் என்ன நடந்தது என கேட்பதற்காக சந்தோஷமாக வெளியே வருகின்றனர்.

ஐஸ்வர்யாவை கடத்தி கல்யாணம் என்கிற பேர்ல காமெடி பண்ணும் ரவுடி!! என்ன நடக்குதுன்னு தெரியாம சந்தோஷத்தில் கௌதம், சித்ராதேவி..ஆஹா கல்யாணம்

அவர்கள் சோகமாக வந்ததைப் பார்த்து என்ன நடந்தது என கேட்கின்றனர். அப்போது நடந்த அனைத்தையும் சொல்ல எங்க, அண்ணன் என கதிர் கேட்கிறார் அதற்கு பழனி அவன் வேலைக்கு போயிட்டான் என கூறுகிறார்.

உடனே பழனியும் கதிரும் சரவணனை பார்ப்பதற்கு அவரது கடைக்கு செல்கிறார்கள். அதே நேரத்தில் செந்தில் கோபமாக ரூமுக்கு போய் பொருளைப் போட்டு உடைக்க பார்க்கிறார், அதனால் மீனா என்ன ஆச்சு என கேட்கிறார். அதற்கு செந்தில் நடந்த எல்லாத்தையும் சொன்னேன்னு சொன்னல்ல அப்புறம் ஏன் அவங்க கூப்பிட்டு வச்சு நம்மள அசிங்கப்படுத்துறாங்க அண்ணனுக்கு எப்படி மனசு கஷ்டமா இருக்கும் என கேட்கிறார்.

காதலோடு பார்த்துக் கொள்ளும் ஜெனி, செழியன்!! குழந்தையை கொஞ்சி தவழும் செழியன்!! ஒரே பாசப் போராட்டமா இருக்கு..

அதற்கு மீனா அவங்க ஏன் இப்படி பண்ணாங்கன்னு எனக்கும் புரியல என கூறுகிறாள். அடுத்த சீனில்  கதிரை பார்த்ததும் சரவணன் வாடா என்ன இங்க என கேட்க அதற்கு அவர் இல்லன்னா இங்க என் பிரண்டு வீட்டுக்கு வந்தேன். அதான் அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன் என கூறிவிட்டு இவ்வளவு மரப்பொருளையும்  நீ தான் விப்பிய அண்ணன் நல்ல வேலை தான் இல்ல என சம்மந்தம் இல்லாம பேசிக் கொண்டிருக்கிறார்.உடனே அதை புரிந்து கொண்ட சரவணன் நீ பிரண்டு வீட்டுக்கு தான் வந்தியா இல்ல நான் கஷ்டப்படுவான்னு என்ன பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தியா என கேட்கிறார்.

அதற்கு கதிர் இல்லண்ணா உன் மேல சத்தியமா இல்ல, இல்ல என் மேல சத்தியமா என உளறிக்கொண்டு நான் பிரண்டு வீட்டுக்கு தான் வந்தேன் என கூறுகிறார். உடனே சரவணன்  எனக்கு தெரியாதாடா என கேட்கிறார். ஒரே பாசமாக பொழிகின்றனர் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.