தனுஷின் மூணு படம் பிலாப் ஆனதற்கு காரணம் அனிருத் தானா..? பல வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறிய ஐஸ்வர்யா…

aishwarya rajini : நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் செல்வராகவன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 3 இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியாகியது. மேலும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

தனுஷ் நடிப்பில் வெளியாக இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் படத்திற்கு அனிருத் அவர்கள் தான் இசையமைத்து இருந்தார் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது இன்று வரை அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மூன்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது.

சிக்ஸ் பேக் நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் எஸ் ஜே சூர்யா.! யார் இயக்கத்தில் தெரியுமா..

அதற்குக் காரணம் ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி என்ற பாடல் தான் ஒரே இரவில் உலக வைரலானது அதுமட்டுமில்லாமல் அதிக பார்வையாளர்களைக் கடந்த பாடல் என்று youtubeபில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடல் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் படம் அமையவில்லை அதனால் மூன்று திரைப்படம் தோல்வி திரைப்படம் ஆக அமைந்தது இருந்தாலும் அந்த திரைப்படத்தில் வரும் காதல் காட்சிக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் அன்று தோல்வி அடைந்த இந்த திரைப்படம் ரீ ரிலீஸ்ஸில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. அப்படி இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் மூன்று படத்தின் தோல்வி குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி..! ஒரே வார்த்தையில் வாய் மூட வைத்த ரஜினி..

மூன்று திரைப்படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என்றால் அது ஒய் திஸ் கொலவெறி பாடல் தான். ஒய் திஸ் கொலவெறி பாடல் இவ்வளவு பெரிய வைரலானதற்கு காரணம் எங்களுக்கு தெரியாது அந்த பாடல் ஹிட் ஆனது படத்துக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது காரணம் அந்த படத்தின் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது சர்ப்ரைஸ் கிடையாது சாக் தான்.

படமா சொன்னதோ வேறு ஆனால் அந்த பாட்டு வந்ததும் அந்த படத்தையே தூக்கி சாப்பிடுச்சு அந்த பாட்டு எல்லாத்தையும் ஓவர் சோகத்தில் ஆக்கிடுச்சு என பேசினார் அது மட்டும் இல்லாமல் மிகவும் கவலையாக இருக்கிறது எனக் கூறி  உள்ளார் அதுமட்டுமில்லாமல் ரீ ரிலீஸ் பொழுதும் டிவியில் ஒளிபரப்பான பொழுதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸ் ஆனப்போ கூட எனக்கு போன் வரவில்லை ஆனால் ரீ ரிலீஸ் டிவியில் ஒளிபரப்பு செய்யும்பொழுது பல போன் கால்கள் வந்தது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.. வலிமை, லியோ, சந்திரமுகி, என சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த திரைப்படங்கள்..

ஒரு இயக்குனராக என்னை பாராட்டும் பொழுது சந்தோஷமாக இருக்கு ஆனால் படம் ரிலீஸ் ஆன பொழுது இந்த எதிர்பார்ப்பு இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.