சூர்யாவுக்கு விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்ட கௌதம்.! பலே திட்டம் போட்ட தாத்தா.! ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு..

ஆஹா கல்யாணம் மற்றும் மகாநதி இன்றைய எபிசோடில் கௌதம் ரெசார்ட் மேனேஜரை பார்த்து கமிஷன் கொடுக்கிறேன் அடுத்த போட்டி எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என பேசுகிறார் அதில் கோபமான மேனேஜர் உங்க தாத்தாவுக்காக பாக்குறேன் இல்லன்னா உங்களை இந்த போட்டியில் இருந்து டிஸ் குவாலிஃபைட்  பண்ணிடுவன் என திட்டி அனுப்புகிறார்

பின்னர் அதனைத் தொடர்ந்து சூர்யா நகை டிசைன் சரி இல்லை என பவித்ராவை போன் பண்ணி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் மகா நான் உங்களுக்கு டிசைன் பண்ணி தரேன் என சொல்லி லேப்டாப் வாங்கி டிசைன் பண்ணி கொடுக்கிறாள். அதை பார்த்துவிட்டு சூர்யா டிசைன் ரொம்ப நல்லா வந்திருக்கு என  சொல்கிறான். பின்னர் டிசைனை கிளைண்டுக்குஅனுப்புகிறார். உடனே அவர்களும் டிசைன் ஓகே என சொல்கின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா.. அட ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே…

சூர்யா மகாவிடம் இந்த டிசைனுக்காக உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். அதற்கு மகாவோ  எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று சொல்கிறார் மீண்டும் திரும்பத் திரும்ப கேட்பதால் சரி நாம தங்கி இருந்த ரூமுக்கு பாதி வாடகை நான் தரேன்னு சொன்னேன்ல அதை குடுத்துடுங்க என மகா சொல்கிறாள்.

மேலும் வேற என்ன வேணும் என கேட்கிறார் அதற்கு மகா இந்த போட்டியில் விளையாண்டு ஜெயிச்சு குடுங்க என கேட்கிறார். அதனை தொடர்ந்து அடுத்த சீனில் குமரன் மற்றும் கங்கா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது கங்கா குமரனிடம் இந்த போட்டியில் நம்ம ஜெயிச்சு ஆகணும் அப்படி ஜெயிக்கலைன்னா நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் என சொல்கிறாள். அதுமட்டுமில்லாமல் என் தங்கச்சி முன்னாடி என்ன அசிங்கப்படுத்திடாதீங்க எனவும்  கூறுகிறார்.

சம்மருக்கு காத்து வாங்க போகும் திரையரங்கம்.. ஒரேடியாக பின்னுக்கு போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

அதனை தொடர்ந்து சூர்யா தாத்தாவும் விஜய் தாத்தாவும் பேசிக்கொள்கின்றனர். அப்போது என் பேர தான் ஜெயிப்பான் என மாறி மாறி இருவரும் கூறி இரண்டு லட்சம் பந்தயம் வைத்துக் கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து கௌதம் சூர்யா போட்டியில் ஜெயிக்க கூடாது என்பதற்காக சித்ரா தேவியின் மூலம் ராஜலட்சுமியிடம் செய்து கொடுத்த சத்தியம் சூர்யாவுக்கு நியாபகம் இருக்கா அவன் கண்டிப்பா போட்டியில தோர்ந்து போய்டுவான்ல என கேட்க சொல்கிறார்.

உடனே சித்ராதேவி ராஜலட்சுமியிடம் உங்க பையன் உங்களுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை கண்டிப்பா காப்பாற்றுவானா எனக் கேட்கிறார். மேலும் ஜெயிச்சா மகா அவங்க தான் பெஸ்ட் கப்புல்ன்னு சொல்லி சீன் போடுவா நம்பளால இதை பார்க்க முடியாது என ராஜ லட்சுமியை சித்ராதேவி ஏத்தி விடுகிறார்.

உடனே அதைத் தொடர்ந்து ராஜலட்சுமி சூர்யாவை கூப்பிட்டு செய்து கொடுத்த சத்தியம் ஞாபகம் இருக்குல்ல நீ கண்டிப்பா போட்டியில் ஜெயிக்ககூடாது என கூறுகிறார். அதற்கு சூர்யாவும் ஓகே என சொல்லிவிடுகிறார்.

கதிர் ராஜ்ஜியின் காதல் கதையை கூறிய மீனா.. இந்த உருட்டையும் நம்பும் சகோதரர்கள்.! சந்தேகப்படும் அரசி..

அதனைத் தொடர்ந்து போட்டி நடத்த போவதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன போட்டி என கேட்டுட்டு பிரக்னண்டா இருக்குறவங்க  கலந்துக்கலாமா என தாத்தா கேட்கிறார் அதற்கு ஆங்கர் முடியாது என சொல்கிறார். உடனே எனக்கு என் பேர குழந்தை  தான் முக்கியம் இந்த போட்டியில் நீங்க கலந்துக்க வேண்டாம் என கௌதம் மற்றும் ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் கௌதம், சித்ராதேவி மற்றும் ஐஸ்வர்யா மூவரும் கடுப்பாகின்றனர்.

மேனேஜர் தாத்தாவிடம் கௌதம் செய்த அனைத்து காரியத்தையும் சொல்லிவிடுகிறார். இதனாலே தாத்தா குறுக்கு புத்தி உள்ளவன் இந்த போட்டியில இருக்க கூடாது என்பதற்காகவே இந்த போட்டியை விட்டு அவனை நீக்கியதாக அவரது நண்பரிடம் சொல்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.