கதிர் ராஜ்ஜியின் காதல் கதையை கூறிய மீனா.. இந்த உருட்டையும் நம்பும் சகோதரர்கள்.! சந்தேகப்படும் அரசி..

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடில் பாண்டியன் சரவணனி டம் அழுது கொண்டிருக்கிறார். எனக்கு என் பசங்களோட கல்யாணத்த பாக்கணும் என்கிற ஆசை இருக்காதா அவன் அவன்  இஷ்டத்துக்கு  கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டானுங்க நான் கையாள ஆவாதவனு நினைச்சுக்கிட்டாங்களா நான் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நினைச்சுக்கிட்டார்களா, ஒருவேளை நான் கண்டிப்பா இருக்கறதால உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் நினைச்சுக்கிட்டீங்களா எனவும் முன்னாடி நான் அனாதையா இருந்தேன் இப்ப திரும்பவும் என்னை அனாதையாகிட்டானுங்க என சொல்லி அழுகிறார்.

இதைத் தொடர்ந்து அடுத்த சீனில்  மீனா ராஜிக்கு பால் கொண்டு கொடுக்கிறாள். அப்போது ராஜி அழுதபடி எனக்கு வேண்டாம் என சொல்கிறாள். மேலும் நான் இந்த கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது என ராஜி சொல்கிறாள் சரி அப்ப அப்படியே உன்ன விட்டுட்டு வந்திருந்தா நீ என்ன செஞ்சிருப்ப என கேட்கிறாள். அதற்கு ராஜி நான் செத்து இருப்பேன்  என சொல்கிறாள்.

அஜித்துடன் சிவகார்த்திகேயன் அட்டர் பிளாப் ஆன திரைப்படம்.! எந்த திரைப்படம் தெரியுமா.?

உடனே கோபமான மீனா பிரச்சனை வரும்னு தெரிஞ்சும்  உனக்காக உங்க அத்தை எவ்வளவோ பண்ணி இருக்காங்க அதை மனசுல வச்சிக்கிட்டு இனிமே இப்படி வாழ போறாங்கிறதை மட்டும் பாரு என திட்டி விட்டு சென்று விடுகிறார்.

அடுத்த சீனில் செந்தில், செந்தில் மாமா, அரசி மற்றும் கதிர் அனைவரும் மாடியில் உட்கார்ந்தி ருக்கின்றனர். அப்படி உட்கார்ந்து இருக்கும்போது எப்படி இந்த கல்யாணம் நடந்திருக்கும். இவங்க எப்படி காதலிச்சு இருப்பாங்க ஒன்னும் புரியவே இல்லையே இதை நம்புற மாதிரியே இல்லையே என அனைவரும் புலம்பி கொண்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்கின்றனர். கதிர் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

நடந்த எதையும் நம்ப முடியல இவங்க ரெண்டு பேரும் எப்பவும் அடிச்சுப்பாங்களே எப்படி யோசித்தாலும் ஒன்னும் புரியலையே என திரும்பத் திரும்ப யோசிச்சு பேசிக் கொண்டிருக்கின்றனர் அப்போது மீனா மாடிக்கு வருகிறாள்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்… குட்டி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷின் மருமகன்..

அரசி மீனாவிடம் இவங்கள பத்தி   உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என கேட்கிறார். அப்பப்போ அரச புருசலா கொஞ்சம் லைட்டா தெரியும் என மீனா  சொல்கிறாள். மீனா கதிருக்கு ராஜ் மேல லைட்டா விருப்பம் ஆனா ராஜிக்கு தான் கதிர்னா உயிர் அதனாலதான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டா என புதிய காதல் கதையை சொல்கிறாள். நான் கோயில்ல இருக்கும்போது எப்படியும் இவன் பேசி அவளை அனுப்பி வச்சிடுவான் என  நினைச்சேன் ஆனா இவங்க இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பாங்கன்னு எனக்கே தெரியாது என புதுக்கதையை சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அவ சொன்ன கதையை யாருமே நம்பல. அதிலும் குறிப்பாக அரசி மீனாவை சந்தேகப்படுகிறாள். இதுல ஏதோ இருக்கு கண்டுபிடிக்கிறோம் என அனைவரும் சொல்லுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.