சண்டை காட்சிக்காக மட்டுமே ஒரு படத்தை 120 முறை பார்த்த விஜயகாந்த்.. ஹீரோ யார் தெரியுமா.?

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவருடைய புகழ் மற்றும் பெயர் என்றுமே மறையாது. விஜயகாந்த் பற்றி நமக்கு தெரிய பல சுவாரசிய தகவல்களை ஊடகங்கள் மற்றும் அவருடன் நடித்த சக நடிகர்கள், நண்பர்கள்  விஜயகாந்த் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் பற்றி பலரும் சொல்லுவது அவர்  முதலில் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். தன்னை தேடி வரும் இல்லாதவர்களுக்கு காசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் என சொல்லுவது தான். இப்படிப்பட்ட விஜயகாந்த் இன்று இல்லாதது பலரையும் கண்கலங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்த தளபதி விஜய்.. வைரலாகும் செய்தி

இந்த நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. விஜயகாந்த் பழைய பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால் என் வீட்டுக்கு அருகே “எங்கள் வீட்டு பிள்ளை” படம் ஓடிய பொழுது அந்த சண்டை காட்சிக்காக 120 முறை அந்த படத்தை பார்த்தேன்.

அதேபோல் எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி போன்ற படங்களில் வரும் சண்டைக் காட்சிகள். அதன் பின்னர் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன் அப்பொழுது வந்த படம் தான் “ஆயிரத்தில் ஒருவன்” அந்த படத்தை 70  முறை பார்த்தேன். நான் எம்ஜிஆரின் ரசிகன் இல்லை வெறியன் என அவர் கூறினார்.

90’s நடிகை வினிதா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

ஒருமுறை, இருமுறை அல்ல எப்பொழுதுமே எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பாடியவர்களில் விஜயகாந்த் ஒருவர். அரைப் போலவே அள்ளி அள்ளி கொடுத்து செவந்து போன கை தான் விஜயகாந்த் கை எனவும் பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.