பட்டாசுகளை வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

Vijayakanth : சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அனைவரும் ஆரம்பத்தில் பல கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து படிப்படியாக முன்னேறி இருக்கின்றனர் அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்தார்.

ஆரம்பத்தில் பல கஷ்டங்களை பட்டு பட வாய்ப்பு கைப்பற்றினார் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கணக்கட்சிதமாக நடித்தார் இவருடைய நடிப்பு மற்றும் உடல்  அமைப்பு கட்டுக்கோப்பாக இருந்ததால் உடனடியாக ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த நடித்த அம்மன் கோயில் கிழக்காலே, ரமணா, வெற்றி, சேதுபதி ஐபிஎஸ், வாஞ்சிநாதன், நரசிம்மா என ஒவ்வொரு படமே பெரிய ஹிட் அடித்தது.

கார்த்தியின் ஜப்பான் படம் மட்டுமல்ல ஏராளமான கோலிவுட் நடிகர்களின் 25வது படம் தோல்விதான்.. இந்த லிஸ்டில் இருந்து தப்பித்த அஜித், தனுஷ், சூர்யா..

சினிமா உலகில் எவ்வளவு பெரிய உயரத்தை எட்டினாலும்  தலைகனம் இல்லாமல்  அனைவரிடமும் எளிமையாக பழகினார் மேலும் இல்லாதவர்களுக்கு காசு, உணவு என வழங்கினார் குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் பொழுது லைட் மேன் தொடங்கி அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டார் இப்படிப்பட்ட நல்ல மனுஷன் திடீரென அரசியல் பக்கம் தாவினார்.

ஆரம்பத்தில் இருந்து இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்று அசத்தினார். தொடர்ந்து தனது திறமையை அரசியலில் காட்டி வந்த விஜயகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார் விசேஷ நாட்கள் மற்றும் தன்னுடைய பிறந்தநாளில் தான் விஜயகாந்த் வெளியே வருகிறார்.

கார் போன விஷயத்தை அப்பாவிடம் மறைத்து வேறு வேலை தேடும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அப்படி நேற்று தீபாவளியை முன்னிட்டு கேப்டன் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி உள்ளார் அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுபோல எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக்கூறி புகைப்படத்திற்கு கமெண்ட்களையும், லைக்குகளையும் தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.