விஜயகாந்த் மறைவு.. பார்க்க முடியாமல் கண்ணீரில் மிதந்த வடிவேலு .. அவரின் நண்பர் சொன்ன தகவல்..

vadivelu : தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் மனதில் கொடை வள்ளல் என்ற பெயரை எடுத்தவர் விஜயகாந்த் அந்த அளவு இவர் செய்யும் நல்லது அடிமட்ட மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் விஜயகாந்த மறைவை கேட்டு பல மக்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ஆனால் திடீரென சில வருடங்களாக உடல் நலக் குறைவால் எதிலும் ஈடுபடாமல் வீட்டிலேயே முடங்கிப் போனார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார்.

எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

இவரின் மரணச் செய்தியை கேட்டு பல பிரபலங்களும் தொண்டர்களும் பேரெதிர்ச்சி அடைந்தார்கள் அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் ஒட்டுமொத்த பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தார்கள் மேலும் சூர்யா கார்த்தி சிவகுமார் சரத்குமார் அருண் விஜய் போன்ற பல பிரபலங்கள் தற்பொழுது விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஒரு சிலர் நேரில் வர முடியாததற்கு விஜயகாந்த் அடக்கம் செய்த இடத்தில் மன்னிப்பு கேட்கிறார்கள் விஜயகாந்த் அவர்கள் விஜய் மற்றும் சூர்யா அவர்களுக்கு சினிமாவில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர் அப்படித்தான் நடிகர் வடிவேலு அவர்களுக்கும் சினிமா பயணத்தில் மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார்.

எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. பிக் பாஸில் ஆண்டவரின் பேச்சை கண்டுகொள்ளாத 5 பிரபலங்கள்.!

அப்படி இருந்தும் விஜயகாந்த் இறப்பிற்கு வடிவேலு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது ஆனால் வடிவேலுவின் நண்பரும் விசிக நிர்வாகியுமான மாலின் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயகாந்த் மறைவால் வடிவேலு கண் கலங்கி அழுதது தனக்கு மட்டுமே தெரியும்.

நேரில் சென்றால் ஏதாவது நடந்து விடும் என்பதற்காக தான் அவர் செல்லவில்லை தவிர மற்றபடி எந்த ஒரு காரணமும் கிடையாது என அவர் பேசியுள்ளார். எது எப்படியோ நிஜமாலும் வடிவேலுவிற்கு வருத்தம்  இருந்தால் விஜயகாந்த் செய்த உதவியை மறக்காமல் இருந்திருக்கிறார் என நினைத்துக் கொள்வார்கள் ரசிகர்கள்.