சோசியல் மீடியாவை அலறவிடும் பிரதீப் விவகாரம்.! ஆண்டவரின் அதிரடி முடிவு..

Kamal Haasan vs pradeep: பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனின் டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் பிரதீப் ஆண்டனி தான் என ரசிகர்கள் முடிவு செய்த நிலையில் ஆனால் திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப் எவ்வளவோ தனது நியாயத்தை கூற முயற்சித்தும் ஆனால் கமல் பேச விடாமல் செய்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனால் பிரதீப்பிற்கு ஆதரவாக தொடர்ந்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒன்று திரண்டு கமல் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்க தற்பொழுது சோசியல் மீடியாவில் பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீம்  அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதீப் மேல் பழி போட்டு இருந்தாலும் ஆண்டவர் இதனை தீர விசாரித்து அதற்கு மேல் முடிவு செய்திருக்க வேண்டும்.

நைட்டுக்கு மட்டும் மாயா வேண்டுமா ப்ராவோ.. கொச்சையாக பேசும் பூர்ணிமா.!

ஆனால் ஏஜென்ட் டீம் சொன்ன காரணங்களை வைத்துக்கொண்டு உடனடியாக பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து அனுப்பியது மிகவும் தவறு என கமல் மேல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனால் ஆண்டவர் பிரதீப் விவகாரத்தில் ஒரு சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் என ஆலோசனையில் இறங்கி உள்ளாராம்.

அப்படி பிரதீப் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் இதனை விரும்பி வருவதனால் Bring Back Pradeep என்ற ஹேஷ் டேக்கை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஹாக்கி வருகின்றனர். ஆனால் பிரதீப்பை கமலே கூப்பிட்டாலும் இதற்கு மேல் இந்நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

குணசேகரனிடமே ஈஸ்வரியை அம்மானு சொன்ன ஜீவானந்தத்தின் மகள்.! எல்லாத்துக்கும் முடிவு கட்ட பைலுடன் வந்த அப்பத்தா..

இவ்வாறு பிரதீப் பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் ஆனால் கண்டிப்பாக மாயா பூர்ணிமாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மாயா, பூர்ணிமா இருவரும் இரண்டு அடுத்த தவறான வார்த்தைகள் பயன்படுத்தும் காட்சிகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.